Friday, March 27, 2015

மார்ச் 29 ,2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை


மார்ச் 29 ,2015 ஞாயிறு நற்செய்தி மறையுரை
குருத்து ஞாயிறு

Readings for the Entrance Procession:
Mark 11:1-10 or John 12:12-16
Psalm 24 & Psalm 47
Readings for Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11

Mark 14:1--15:47



குருத்து ஞாயிறான இன்று இயேசுவின் திருப்பாடுகளை பார்க்கும் முன்பு - இயேசுவின் வேதனைகள், நமக்காக வலியை ஏற்று கொண்டு, சிலுவை மரணம் அடைந்ததை - நம் மேல் உள்ள அளவில்லா அன்பினால் சிலுவை மரணம் அடைந்ததை பார்க்கும் முன்பு - இயேசுவின் மேல் அளவில்லா அன்பு கொண்டு , அவருக்கு வாசனை தைலத்தை பூசிய பெண்ணை பற்றி பார்ப்போம்

அந்த நாட்களில் இப்பொழுது உள்ளது போல டியோடரண்ட் அல்லது பாடி ஸ்ப்ரே கிடையாது. சூடான பருவ காலங்களில் குளிக்க கூட சரியான பாத் ரும் வசதி கிடையாது. அதனால் மக்கள் வாசனை திரவியங்களை உருவாக்கி உபயோகித்தனர். வாசனை மூலிகைகள் , வாசனை எண்ணெய் கலந்து , ஜாடியில் ஊற்றி அதனை நன்றாக ஊற வைத்தனர். எவ்வளவு நாள் ஊற வைத்தார்களோ அந்த அளவிற்கு அதன் வாசனையும் , நறுமணமும் , மதிப்பும் உயரும்.


நற்செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல, இயேசுவிற்கு அளிக்கப்பட்ட வாசனை திரவியம் மிக விலை உயர்ந்ததாய் இருக்கும், அதனால் அதிக நாள் அதனை ஊற .

நாம் யாருக்காவது அன்பளிப்பு கொடுப்பதாக இருந்தால், கடைக்கு சென்று புதிய பொருளை தான் வாங்குவோம்.? ஆனால், நம்மிடம் பல காலமாக உள்ள மிக உயர்ந்த மதிப்புடைய பொருளை , மற்றவர்களுக்கு பரிசாக கொடுக்கும் பொழுது, மிகப் பெரிய தியாகம் செய்வதற்கும் சமம் ஆகும்.


அதே போல ஏதாவது ஒரு பொருளை மிக அதிக நாட்களாக, மிகவும் மதிப்பு உடையதாகவும் வைத்திருக்கிறீர்கள் ?
அந்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதாக உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா ? நம்மில் பலருக்கு அதனை கொடுக்க இயலாது, அப்படி கொடுப்பதாக இருந்தால், அதனை பெறுகிறவர் மேல் நாம் அளவு கடந்த அன்பும், பாசமும் வைத்திருக்கிறோம் என்று அர்த்தம். அவர்கள் மேல் உள்ள அன்பினால் மட்டுமே இது போல நடக்கும்


இயேசுவின் மேல் நீங்கள் எவ்வளவு அன்பு வைத்து உள்ளீர்கள்? இயேசு உங்களிடமிருந்து எதனை பெற்றால், அவர் உங்கள் மேல் பாராட்டுகள் தருவார், இயேசுவின் மேல் உள்ள அன்பினால், அதனை கொடுக்க நீங்கள் தயாரா ? அவ்வளவு அன்பு இயேசுவின் மேல் உங்களுக்கு உள்ளதா ?

இதனையே வேறு மாதிரியாக சொல்வதானால், உங்கள் ஜாடியில் என்ன இருக்கிறது. அதனை இயேசுவிற்கு அளிக்க தாராள மனதுடன் இருக்கிறீர்களா?
இயேசு உங்களுக்கு தாராளாமாக , அன்புடன் உங்களுக்கு கொடுத்ததை நினைத்து பாருங்கள். இந்த வாரம் முழுதும் அதனை நினைத்து பாருங்கள் , பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனியன்று கல்லறையில் இருக்கும் இயேசுவை நினைத்து பாருங்கள்.
அதன பிறகு, மீண்டும் நினைத்து பாருங்கள், உங்களிடம் உள்ள மிக மதிப்பு வாய்ந்த எதனை நீங்கள் இயேசுவிற்கு கொடுக்க முடியும், அதனை பெற்று கொண்டு , இயேசு கண்டிப்பாக பெருமிதம் அடைவார் , அதனை அடுத்த வார இறுதிக்குள் , நீங்கள் கொடுங்கள், அவர் உங்களுக்கு மிக பெரியவெற்றியை ஈஸ்டர் அன்று தருவார்.




© 2015 by Terry A. Modica

No comments: