Sunday, July 10, 2016

ஜூலை 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூலை 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு
லூக்கா நற்செய்தி
நல்ல சமாரியர்

25திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

26அதற்கு இயேசு
திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?
 என்று அவரிடம் கேட்டார்.
27அவர் மறுமொழியாக,
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
என்று எழுதியுள்ளது என்றார்.

28இயேசுசரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்
 என்றார்.
29அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, எனக்கு அடுத்திருப்பவர் யார்? என்று இயேசுவிடம் கேட்டார்.

30அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: 
ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

31குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.

32அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.

33ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.

34அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.

35மறுநாள் இருதெனாரியத்தைஎடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்என்றார்.
36
கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?”
 என்று இயேசு கேட்டார்.

37அதற்கு திருச்சட்ட அறிஞர், அவருக்கு இரக்கம் காட்டியவரே என்றார். இயேசு
நீரும் போய் அப்படியே செய்யும்
 என்று கூறினார்.
(thanks to www.arulvakku.com)

இந்த உலகை குணப்படுத்த தேவையான அன்பு இருக்கிறதா ?

அன்பிற்கு எதிர்பதம் வெறுப்பு அல்ல, அக்கறை இன்மை தான் அன்பிற்கு எதிரானது, ஒருவரின்  தேவையை அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது, அக்கறையுடன் எதனையும் அணுகாமல் இருப்பது. துன்பத்தை போக்க நம்மால் ஏதாவது  செய்ய முடிந்தும், நாம் எதுவும் செய்யாமல் இருப்பது எல்லாம் அன்பிற்கு எதிரானது. இன்றைய நற்செய்தியில் இயேசு நல்ல சமாரியனின் கதையை உவமையாக கூறுகிறார் . முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொள்ளும் பொழுது, கண்டிப்பாக நாம் மற்றவர்களை அன்பு செய்வோம். அவர்கள் நமக்கு தெரியாதவர்களிடம் கூட நாம் அன்பு கொள்வோம். மேலும் நமக்கு தீங்கு செய்தவர்களிடம் அன்பு காட்டுவோம்.   
இன்றைய உலகில் உள்ள நிறைய பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு நம்மை போன்றவர்கள் கிறிஸ்துவின் பின் செல்பவர்கள் , அந்த பிரச்சினைகளின் மேல் அக்கறை கொள்ளாமல் இருப்பதே ஆகும். கிறிஸ்து அனைத்தையும் மாற்றும்  ஆற்றல் கொண்டவர், அதே ஆற்றலை நமக்கும் கொடுத்துள்ளார். ஆனால் நாம் சொந்த வேளைகளில் நாம் நேரத்தை செலவிடுகிறோம். நமது குடும்பத்தில் , வேலை இடத்தில், பங்கு கோவிலில் நடக்கும் சோதனைகள், துன்பங்கள், மற்றும் பாதிப்புகள்  எல்லாம் சரியாகிவிடும், எப்போது ?, கிறிஸ்தவர்கள் அனைவரும் அன்புடன் , மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு சேவை செய்யும்போது நடக்கும்.
நீங்கள் கடவுளை எவ்வளவு அன்பு செய்கிறீர்கள் ? இதற்கான பதில் : மற்றவர்களை அன்பு செய்ய நீங்கள் எந்த அளவிற்கு தியாகம் செய்யம் தயாராய் இருக்கிறீர்கள் , நம் அருகிலுள்ள சகோதரர்களை அன்பு செய்வதில் தான் இயேசுவின் அன்பு இருக்கிறது. இதனை தான் இயேசு அவர் வாழ்விலும் , இந்த உவமையிலும் சொல்கிறார்.
நம்மில் யாருமே கடவுளை முழுதும் அன்பு செய்வதில்லை. உத்திரிக்கிற ஆத்மா ஸ்தலத்தில், நாம் முழுமையான அன்பு செய்யாமல் இருந்ததற்கு வருந்துவோம், அங்கேயே முழு அன்பை மற்றவர்கள் மேல் காட்ட , நாம் முயற்சி செய்து, கடவுளின் முழுமையை மோட்சத்தில் அடைவோம். அது வரைக்கும் இந்த உலகில், நமக்கு கிடைக்கும் அனுதின வாய்ப்பில் நமது வாழ்வை தூய்மையாக்கி , கடவுளின் அன்பில் நிலைத்திருபோம். தினமும், நாம் மற்றவர்களை எவ்வளவு அன்பு செய்கிறோம் என்பதற்கு பல சோதனைக்கால காத்திருக்கின்றன. அதன் மூலம் நாம் இன்னும் பலரை அன்பு செய்ய பயில்வோம்.
 அதனால், நமது ஆசிரியர், கரு, பரிசுத்தத்தின் ஊற்று, நமக்கு ஆற்றல் கொடுப்பவருமான பரிசுத்த ஆவியை தினமும் கேளுங்கள், கிறிஸ்துவை போல நீங்களும் மாற அவரிடம் உதவி வேண்டுங்கள், கிறிஸ்து மற்றவர்களை அன்பு செய்வது போல நீங்கள் அன்பு செய்ய பரிசுத்த ஆவியின் உதவியை ஆலோசனையை கேளுங்கள்.
இந்த பரிசுத்த பயிற்சியை தொடர்ந்து செய்யும்பொழுது , நமக்கு மிக பெரிய மகிழ்ச்சியும் சந்தோசமும் வரும், மேலும் மற்றவர்களுடன் நாம் அன்புடன் கையாள நமக்கு நன்றாக தெரிய வரும். கடவுளின் மிக பெரிய அன்பை நாம் உணர்ந்து நம் மேல் இன்னும் அதிகமாக நெருக்கமாக அவர் அன்புடன் நாம் கலப்போம்.


© 2016 by Terry A. Modica

No comments: