Saturday, July 30, 2016

ஜூலை 31, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூலை 31, 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு
Ecclesiastes 1:2; 2:21-23
Ps 90:(1) 3-6, 12-14, 17
Colossians 3:1-5, 9-11
Luke 12:13-21
லூக்கா நற்செய்தி
அறிவற்ற செல்வன் உவமை
13கூட்டத்திலிருந்து ஒருவர் இயேசுவிடம், “போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்என்றார்.

14அவர் அந்த ஆளை நோக்கி,  “என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?” என்று கேட்டார்.

15பின்பு அவர் அவர்களை நோக்கி,  “எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றார்.
16அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்
செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது.

17அவன், ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!’ என்று எண்ணினான்.

18‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்’.

19பின்பு, "என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு" எனச் சொல்வேன்என்று தனக்குள் கூறிக்கொண்டான்.
20ஆனால் கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்.

21கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.”
(Thanks to www.arulvakku.com)

கடவுளின் தாராள செல்வம்
நாம் கடவுளின் தாராள குணத்தை புரிந்து கொண்டால், நமக்கு எவ்வளவு செல்வம் இருக்கிறது என்று நமக்கு புரியும். நம்மிடம் கொஞ்சம் குறைவான பணம் வங்கியில் இருந்தாலும் , கடவுளில் நாம் பணக்காரர் தான். கடவுள் நம்மை காக்கிறார், மேலும், அக்கறையுடன் நம்மை கவனித்து கொள்கிறார். கடவுள் நமக்கு மிக பெரிய சோதனைகளிலும் , போராட்டங்களிலும் கடவுள் நமக்கு மிக அமைதியை கொடுத்து , நமக்கு ஞானம்  மற்றும் ஆற்றலை கொடுக்கிறார்.
கடவுளின் தாராள குணம் நம்மை  பொருட்செல்வத்திற்கும் அழைத்து செல்கிறது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் கடவுளின் ஆசிர்வாதமாக நமக்கு கிடைக்கிறது. கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள் மற்றும் உழைப்பின் மூலம் நமக்கு எல்லா பொருளும் கிடைக்கிறது. நம்  முயற்சியால் கிடைக்கும் அனைத்தும் கடவுளின் முயற்சியால் வருகிறது. நம் வாழ்வில் கிடைக்கும் அனைத்து நலன்களுக்கும் கடவுள் தான் மூல காராணம்.
எனினும், ஒவ்வொரு பொருளும் , அன்பளிப்பும், ஆற்றலும் நமக்கு கிடைக்கும் பொழுது அதற்குண்டான காரியாங்கள் நம்மை தாண்டியவை  கடவுளிடமிருந்து வரும் ஒவ்வொன்றும் மற்றவர்களை ஆசிவதிக்கவும் கூட பயன் பட வேண்டும். கடவுள் தாராள குணத்தை கொண்டு செல்லும் வழியாக நாம் இருக்கிறோம்.
நம்மில் உள்ளதை நாம் பகிர்ந்து கொள்ள வில்லை என்றால, நம் பாவத்திற்கு காரணமாக இருக்கிறது. நம் சுய நலத்தினால் நாம் பகிர்ந்து கொள்வதில்லை, அதன் மூலம் நாம் கர்வம் கொள்கிறோம். இதனால் என்ன பிரச்சினை என்றால், நம் சுய கர்வத்தால், கடவுளிடமிருந்து வரும் அனைத்தையும் நாம் மற்றவர்களுக்கு நிராகரிப்பதால், மற்றவர்களை காயபடுத்துகிறோம்.
நாம் நம்மையே நம்பி இருக்கும் பொழுது, நாம் பாவங்களில் விழுகிறோம். நம்மிடம் உள்ளதை வைத்தே நாம் வாழ முடியும் என்ற சுய நம்பிக்கையில் இருந்து கொண்டு, கடவுளிடம் நாம் இணைந்து  தொடராமல இருக்கும் பொழுது நாம் பாவத்தில் விழுகிறோம். கடவுள் நம்மிடம் தாராளாமாக அதிகம் கொடுத்திருக்கிறார் என்று நாம் நினைத்தாலும், நமது சுய சார்பு கொள்கை, நம்மிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்தால் நாம் ஏழையாகி விடுவோம் என்று சொல்லும்.
நாம் நமது பொருட்களை மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்பொழுது சேர்த்து வைத்து இருந்தால், , இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்வது போல, நாம் கர்வமும் சுய சார்போடும் இருக்கிறோம். ஏனெனில் இவை இரண்டும், கடவுளின் தன்மைக்கு எதிரானதாக இருக்கிறது.
கடவுள் தான் நமக்கு தேவையான அனைத்தும் கொடுக்கிறார், இன்னும் கொடுத்து கொண்டிருப்பார், என்று நாம் புரிந்து கொள்ளும் பொழுது , நம்மில் தாராள குணம் வளரும். நம்மிடம் உள்ளதை நாம் கொடுக்கும் பொழுது கடவுள் கொடுத்து கொண்டே இருப்பார். உங்களிடம் உள்ள அதிகமானது எது (பணம் , சந்தோசம், ஞானம் , அனுபவ அறிவு ) , சுற்றி பாருங்கள் , யாருக்கு உங்கள் பொருள் தேவை படுகிறது?
நம்மிடம் உள்ளது அனைத்தும் கடவுளிடமிருந்து வந்தவை , மேலும் அதனை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் . இது தான் இறையரசின் பொருளாதார கொள்கை. கிறிஸ்துவின் உடல் , நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் பொழுது தான் , பரவும். இதனை தான் நாம் புனிதர்களின் கூட்டுறவு என்கிறோம்.

© 2016 by Terry A. Modica

No comments: