Saturday, July 2, 2016

ஜூலை 3, 2016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 3, 2௦016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Galatians 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி

எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்
1இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.

2அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: 
அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

3புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.

4பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.

5நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!என முதலில் கூறுங்கள்.

6அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.
7அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.

8நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.

9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.

10நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,

11எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்எனச் சொல்லுங்கள்.

12அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.

எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்
17பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றனஎன்றனர்.

18அதற்கு அவர், 
வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.

19பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.

20
ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்
 என்றார்.

(thanks to www.arulvakku.com)

நாம் இணைந்து செயல்பட கிறிஸ்துவனாக அழைக்கப்பட்டுள்ளோம்
இன்றைய நற்செய்தியில், இயேசு அவரின், சீடர்களிடம், " உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" (தந்தை கடவுள்) , " அறுவடையை"  (கிறிஸ்துவுக்குள் மன மாற்றம் அடைய) பற்றி கேட்க சொல்கிறார். அதற்காக " வேலையாள்களை அனுப்பும்படி"  (மனம் மாறுதல் செய்பவர்) தந்தை கடவுளிடம் வேண்டுங்கள் என்று கூறுகிறார்.  அதனை கூறிய பின்பு "புறப்பட்டுப் போங்கள்" என்று கூறி, வேலையாட்களுக்கு அதிக வேலை இருக்கிறது என்பதை நினைவு படுத்துகிறார்.
நீங்கள் மணம் மாற்றும் சுவிசேகர்கள் என்று நினைத்தால், யார் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள்? நம்மில் பலர் குருவானவரை நினைவில் கொள்வோம். நமக்கு இன்னும் அதிகம் குருவானவர்கள் தேவை என தெரியும். மேற்கத்திய நாடுகளில் தேவ அழைத்தலுக்கு இப்போது ஆட்கள் குறைவு, அதிக இடங்களில் வயதான குருவானவர்கள் தான் இருக்கிறார்கள்.
அதிக தேவ அழைத்தலுக்கு நீங்கள் ஜெபம் செய்கிறீர்களா? ஆனால் இயேசு நம்மிடம் கேட்கும் ஒரு   பகுதி தான், "புறப்பட்டு போங்கள்" என்று இயேசு நம்மிடமும் சொல்கிறார். "மேலும் நமது திறமைகள் , ஆற்றல், திறன்கள் அனைத்தும் இந்த அறுவடைக்கு " உபயோக படுத்துங்கள் என்றும் கூறுகிறார்

இயேசு நம்மோடு எப்பொழுதுமே இணைந்தே இருக்கிறார். இந்த அறுவடைக்கு தேவையான ஆட்கள் -- குருக்கள், அருட் சகோதரிகள், மற்றும் பொது நிலையினர்- அனைவரும் இணைந்தால் தான் போதுமானதாக இருக்கும். அனைவரும் இணைந்து ஒவ்வொருவரின் திறன்களை, ஆற்றலை, தாழ்மையோடு ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒரு குழுவாக இயங்க வேண்டும்.

இந்த போதுமான நிலையை அடைய, "யாராவது ஒருவர் பார்த்து கொள்வார்கள்" என்ற மனநிலையை நாம் அனைவரும் விட்டு விட்டு இறைபணியில் இணைவோம். மேலும் சிலர், இறைபணியை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நானே தான் செய்வேன் என்ற என்னத்தை விட்டு வர வேண்டும். அப்பொழுது தான், மற்றவர்கள் அனைவரும், இறைபணி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
அர்ச்ச்சிக்கபட்ட தேவ அழைத்தல் , ஆசிர்வாதத்துடன் நமக்கு ஒரு குழுவாக நாம் ஜெபம் செய்யும் பொது நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். சமய குருக்களும்,ஆயர்களும் நமக்கு முன் மாதிரியாக இருக்க அழைக்கபட்டுள்ளனர்,இது மற்றவர்களை தேவ அழைத்தலுக்கு உற்சாகம் கொடுக்கும். ஆனால் பொது மக்களும் அதே போல, அதே உத்வேகத்துடனும், பரிசுத்தத்துடனும் இறைபணி செய்ய இயலும். நாம் குருவானவர்கள் எப்படி இருக்கு வேண்டும் என்று விரும்பி எதிர் பார்க்கிறோமோ , அதே போல நாமும் இறைபணி செய்ய முடியும்.

© 2016 by Terry A. Modica

No comments: