Saturday, September 10, 2016

செப்டம்பர் 11 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

செப்டம்பர் 11 2016   ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின்  24ம்  ஞாயிறு
Exodus 32:7-11, 13-14
Ps 51:3-4, 12-13, 17, 19
1 Timothy 1:12-17
Luke 15:1-32

லூக்கா நற்செய்தி
காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.

2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், “இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரேஎன்று முணுமுணுத்தனர்.
3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:

4உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா?
5கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்;

6வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்என்பார்.

7அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமற்போன திராக்மா உவமை
8பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா?

9கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்என்பார்.

10அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.
காணாமற்போன மகன் உவமை
11மேலும் இயேசு கூறியது: 
ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.

12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, "அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்" என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.

13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.

14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;

15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.

16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.

17அவர் அறிவு தெளிந்தவராய், ‘என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!

18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்;
19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்என்று சொல்லிக்கொண்டார்.

20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

21மகனோ அவரிடம், ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்என்றார்.

22தந்தை தம் பணியாளரை நோக்கி, ‘முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;

23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.

24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.

25அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு,

26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ‘இதெல்லாம் என்ன?’ என்று வினவினார்.

27அதற்கு ஊழியர் அவரிடம், ‘உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்என்றார்.

28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.

29அதற்கு அவர் தந்தையிடம், ‘பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.

30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!என்றார்.

31அதற்குத் தந்தை, ‘மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.

32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்என்றார்.
(thanks to www.arulvakku.com)


காணாமல் போனதை கண்டெடுப்பது

இன்றைய நற்செய்தி, கடவுள் இழந்ததை எல்லாம் மீட்டு எடுக்க விருப்பத்துடன் உள்ளார் என்று உறுதியாக கூறுகிறது. நம் கடவுள் , புதுபித்தலுக்கும், தவறுகளை களைந்து அதனை பிராயசித்தம் செய்வதற்கும் உரிய கடவுள் ஆவார். உண்மையும் நீதியும் விட்டு விலகி நிற்பவர்கள் பின் சென்றார். ஏனெனில் அவர் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார். நம்மை விட  கடவுள் அவர்கள் மேல் அதிக அக்கறை கொண்டுள்ளார். காணாமற் போன காசை தேடுவது போல கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொள்கிறார்.

உங்களை விட்டு விலகி சென்றவர்களை நினைத்து கொள்ளுங்கள். கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொள்கிறார், உங்கள் நட்பை மீண்டும் புதுபிக்க எல்லா முயற்சியை செய்கிறார். அவர்களின் கடைசி மூச்சு வரை கடவுள் அவர்களை மீட்டு கொண்டு அ முயற்சி  செய்து கொண்டே இருப்பார். (சில நேரங்களில் இந்த முயற்சி இறப்பிற்கு பிறகு கூட பலிக்கும்)

உங்களுக்கு தெரிந்த சிலர் விசுவாசத்தை விட்டு விலகி நிற்பர் அவர்களை பற்றி நினையுங்கள், நல்லாயன் இயேசு அவர்களை தேடி அவர்களை உண்மையின் பக்கம் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஏன் ? ஏனெனில் அவர்கள் உங்கள் குடும்பத்திற்கும் திருச்சபைக்கும் முக்கியமானவர்கள் ! இந்த சமூகத்தில்  , அவர்கள் இல்லாமல் இருப்பது , சமுகத்தின் சக்தியை குறைப்பது போன்றது. மேலும் கடவுள் தான் நம் சமூகத்தின் வாழ்விற்கு ஊற்றாக  இருக்கிறார். அவரே எல்லா வழிகளிலும், -- முடியாதவற்றை கூட -- முடித்து வைப்பவர், -- முயன்று , அவர்கள் மனம் திரும்பி , சமூகத்தோடு இணைய முயற்சி செய்கிறார்.

எனினும் கடவுளிடமே எல்லாவற்றையும் நாம் விட்டு விட கூடாது, நம் மூலமாக கடவுள் அவர் முயற்சியை மேற்கொள்கிறார். நம் முயற்சகள் பலனளிக்காமல் போகும் போது மட்டும் தான், கடவுள் , "நான் தொடர்ந்து முயற்சி செய்கிறேன், நீ வேறு பணிகளை தொடர்வாய் " என்று கூறுகிறார். இயேசு இன்னும் அவர்களை தொடர்ந்து அவர் சமுகத்தில் கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் நம்புவோம். அவர்கள் இயேசுவிடமிருந்து தூரத்தில் இல்லை, , இப்போது இயேசுவை அவர்கள் தள்ளி விட்டாலும். விரைவில் நெருங்கி வருவார்கள்.

சில நேரங்களில், இன்னும் சில முயற்சிகளை நாம் செய்திருக்கலாம் ஆனால் , நாம் செய்யாமல் விட்டு விட்டால், ஒரு நாள், நாம் இயேசுவிற்கு பதில் சொல்ல வேண்டும். இயேசுவை போல நமால் ஏன் அன்பு செய்ய முடியவில்லை? நம்மை விட்டு விலகி நின்றவர்களை அப்படியே விட்டு விட்டு  நாம் ஏன் தொடர்ந்து நம் சொந்த வேளைகளில் ஈடுபட்டோம். வேறு முயற்சிகளில் நாம் ஏன் தொடரவில்லை. மேலும், அவர்களை இன்னும் துரத்தி விலகி நிற்கிறோமா ?


எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், நாம் இயேசுவோடு இணையும் பொழுது , அவர்களை கிரிசிதுவின் ஆட்டு கூட்டத்தில் கொண்டு வந்து விடலாம். முக்கியமான விசயம் என்ன என்றால், எது எப்படி இருந்தாலும், நாம் அவர்களை நிபந்தனையற்ற அன்பு தொடர்ந்து செய்தல் வேண்டும். கண்டிப்பாக இயேசுவின் அன்பை நம் மூலம் அவர்கள் பார்க்கலாம்.


© 2016 by Terry A. Modica

No comments: