Friday, September 23, 2016

செப்டம்பர் 25, 2016 ஞாயிறு நற்செய்தி, மறையுரை (homily)


செப்டம்பர் 25, 2016   ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின்  26ம் ஞாயிறு
Amos 6:1a, 4-7
Ps 146:(1b) 7-10
1 Timothy 6:11-16
Luke 16:19-31

லூக்கா நற்செய்தி

செல்வரும் இலாசரும்
19செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார்.
20இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார்.

21அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும்.

22அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

23அவர் பாதாளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார்.

24அவர், ‘தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப்படுகிறேன்என்று உரக்கக் கூறினார்.

25அதற்கு ஆபிரகாம், ‘மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய்.

26அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இயலாதுஎன்றார்.

27அவர், ‘அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன்.

28எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமேஎன்றார்.
29அதற்கு ஆபிரகாம், ‘மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்என்றார்.

30அவர், ‘அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்என்றார்.

31ஆபிரகாம், ‘அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக்கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்என்றார்.

(thanks to www.arulvakku.com)

நம்மை தாராள குணம் கொண்டவராக மாற்றுவது எது ?

இன்றைய நற்செய்தியில் வரும் பணக்காரனின் பாவம் என்ன?  அவர் இறந்த பிறகு எது அவரை துன்புறுத்தியது? பணக்காரனாக இருப்பது ஒன்றும் பாவம் இல்லை; லாசருடன் அவருக்கு உள்ளதை பகிர்ந்து கொள்ளாமல் இருந்ததே அவர் செய்த பாவம் ஆகும். அவருக்கு , பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் இருந்தும் அவர் பகிர்ந்து கொள்ளாததே அவர் செய்த பாவம்.

மரணம் ஒன்றும் நமது வாழ்வின் முடிவல்ல; மரணத்தின் மூலம் நமது ஆன்மா முழுதுமாக கடவுள் அன்பில் வாழும் வாய்ப்பை பெறுகிறோம். கடவுள் உண்மையில் யார், அவர் நமக்கு கொடுத்த எல்லா கொடைகளையும், அன்பையும் முழுதும் அறிந்து கொள்ள மரணம் உதவுகிறது. அந்த திறமைகளை, கொடைகளையும் சரியாக உபயோகபடுத்தினோமா என்றும் மரணம் நமக்கு தெரியபடுத்தும்.

எப்பொழுதெல்லாம் நமக்கு அளிக்கப்பட்ட திறமைகளை, கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறோமோ, அப்பொழுது நாம் கடவுளின் இறையரசில் முதலீடு செய்கிறோம். கடவுளின் பொருளாதாரத்தில், நம் முதலீடு எப்பொழுதுமே நல்ல பலனை தரும். நாம் கொடுப்பதை விட அதிகமாக நாம் பெறுகிறோம், அதன் மூலம் இன்னும் பலருக்கு பகிர முடியும்.

அதற்கு மாறாக, நம்மிடம் உள்ளதை பகிராமல் இருக்கும் பொழுது, இருட்டு அறையில் பூட்டப்பட்டு இருக்கும் மலரை போன்று தான் இருக்கும். சீக்கிரம் வாடிவிடும். இருளில் அதனால் வளர முடியாது. நம்மிடம் மட்டுமே வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் உபயோகமற்று போய்விடும், மேலும், விசமாக கூட மாறி விடும். உணர்வு பூர்வமாகவும், தெய்வீக வாழ்விலும் ஒரு தடை ஏற்பட்டு விடும். கொடிகள் அனைத்தும் கேட்டு போய் விடும். நமது சுய நலம்,  தாராள குணத்தின் தந்தையான கடவுளடன் உள்ள தொடர்பை துண்டித்து விடும்.
ஒவ்வொரு நாளும்-- கடவுளிடமிருந்து நமக்கு கிடைத்த கொடைகளை --  நாம் பகிர்ந்து கொள்ள பல வாய்ப்புகள் நமக்கு  கிடைக்கிறது.

இன்றைய நற்செய்தியில் வரும் பணக்காரன் இலாசரை விட்டு விலக காரணம், இலாசர் தொழு நோயினால் அவர் தோல் முழுதும் புண்களாக இருந்தது, மேலும் அது ஒரு தோற்று நோய்.

இதிலிருந்து ஒரு கேள்வி எழுகிறது: ஒரு சிலரை பார்க்கவும், அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும், நாம் அசூசையாக நினைக்கிறோமா? அல்லது நம்மில் உள்ள பயம் நம்மை தள்ளி நிற்க வைக்கிறதா?. அல்லது பொறாமையும், மன்னிக்கமுடியாத கோபமும் நம்மை அவர்களிடமிருந்து தள்ளி வைக்கிறதா ? கடவுளுடன் இணைந்து , எல்லையில்லா மகிழ்ச்சியிலும், நிலையான வாழ்விலும் நாம் அனுபவம் பெற, இப்படியே நாம் இருக்க கூடாது. அன்பினால் நாம் ஊக்கம் அடைந்து , கடவுளின் பகிர்தலில் நாம் ஈடு படவேண்டும். அன்பிற்கு எல்லை இல்லை; எப்போழுதுமே தாராள குணம் உடையது.

இரண்டாவது வாசகத்தில்,   " விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு" என்று சொல்வதை நாம் கேட்கிறோம். யாரோடு நாம் போராடுகிறோம்? நம்மோடு?  நீங்கள் தாரளமாக இருக்க கிடைத்த வாய்ப்பை முன்பை விட இன்று சரியாக பயன் படுத்தி இன்னும் புனிதமாக இருக்கிறீர்களா? தெய்வீகத்தில் இன்னும் உறுதியாக இருகிறீர்களா? அதன் மூலம் இன்னும் அன்புடனும் தாராள குணத்துடன் இருக்க முடியும்?

© 2016 by Terry A. Modica


No comments: