Saturday, April 12, 2008

ஏப்ரல் 13, ஈஸ்டர் 4வது ஞாயிறு

ஏப்ரல் 13, ஈஸ்டர் 4வது ஞாயிறு
நற்செய்தி - மறையுரை

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 10

1 ' நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். 2 வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். 3 அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். 4 தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்கு முன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். 5 அறியாத ஒருவரை அவை பின் தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது. ' 6 இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. 7 மீண்டும் இயேசு கூறியது: ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆடுகளுக்கு வாயில் நானே. 8 எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. 9 நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். 10 திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்.


(thanks to www.arulvakku.com)


உனது புனித வாழ்வின் வளர்ச்சி, அல்லது, மிகவும் கடினமான உறவை வளர்ப்பதில் அப்படியே தடை பட்டு இருக்கிறதா? அந்த தடையை உடைத்து வெளியே வரவேண்டுமா? ஒரு கூண்டுக்குள் அடைபட்டு கிடப்பது போல், நீ உணர்கிறாயா? அந்த வேலி அல்லது கூண்டு, உன்னுடைய அமைதியையும், சந்தோசத்தையும், திருப்திபடுதலையும், சுத்தமாக அண்ட விடுவதில்லையா? இன்றைய நற்செய்தியில், யேசுதான அந்த கூண்டின் அல்லது கொட்டடியின் கதவாக இருக்கிறார் என்று கூறுகிறது. யேசு நாம் மோட்சத்தின் கதவுகளை அடைவதற்கு உதவு செய்கிறார். இந்த பூமியின் வாழ்வில் ஏற்படும் தடைகளுக்கும் அவர் திறவுகோலாக இருக்கிறார். இதன் மூலம் இவ்வுலக வாழ்விலும், நித்திய மோட்ச வாழ்விலும், நிறைவாக பெரும் பொருட்டே அவர் நமக்கு உதவுகிறார்.

நமது பாதை தடை பட்டு இருந்தால், நாம் யேசுவை வழிகாட்ட சொன்னால் தான், நம்மால் மேலே செல்லமுடியும், மற்றும் தடைகளை தாண்டி நம்மை அழைத்து செல்வார். மற்றவர்கள் நமக்கு கதவை சாத்தினால், கடவுள் நம்மை அங்கே போகசொன்னால், யேசு நமக்கு கதவாக இருந்து நமக்கு வழி விடுவார். யாரும் அவருடைய வாயிலை மூட முடியாது. கடவுளின் திட்டத்தை நாம் நிறைவேற்றுவதற்கு யேசு நம்மை வழி நடத்தி செல்வார். மிகவும் பயப்படும்படியான திட்டத்தை கடவுள் நமக்கு கொடுத்தாரானால், அதனை கண்டு நாம் ஒதுங்கி விடாமல், யேசுவை நோக்கி பார்த்து, அவரே வாயிலாக கொண்டு நாம் அந்த இலக்கை அடையவேண்டும்.


மேலும் முழுமையாக அந்த இலக்கை அடையும் வரை, வாயில்லா ஆடாக நாம் யேசுவோடு செல்ல வேண்டும். அந்த பயனத்தின் மறு பக்கத்தை அடைய, இடையில் நாம் பயனம் செய்ய வேண்டியிருக்கிறது. திருடர்கள் நம்மை தாக்க வருவார்களேயானால், நாம் யேசுவோடு இருந்தால், அவர்களை மிகவும் எளிதாக வெல்லலாம். கவலையும், நம்பிக்கையின்மையும், நமக்கு முக்கியமான திருடர்கள் ஆவர். அவைகள் தான், நமது அமைதியையும், திருப்தியையும், சந்தொச்த்தையும், குணப்படுத்தலையும், நம்மிடமிருந்து எடுத்து சென்று விடுகின்றன. ஆனால் அவைகல் எல்லாம் அப்படி ஒன்ரும் சக்தி வாய்ந்தது அல்ல. நாம் பயப்படும் அளவிற்கு ஒன்றும் உண்மையை பேசுவதில்லை. அவைகள் நாம் யேசுவை மறக்க செய்வதற்கு எல்லா வேலைகளையும் செய்கின்றது. அவர் தான் உண்மையான மேய்ப்பன் மற்றும் நல்ல வழிகாட்டி, வெகுமதியுடன் கூடிய வெற்றியை பெற்று தருபவர்.

© 2008 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: