Friday, May 9, 2008

தூய ஆவி பெருவிழா மே 11 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

மே 11 , 2008 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
தூய ஆவி பெருவிழா

யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20

19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார். 20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார். 22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.



thanks to www.arulvakku.com


" உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன: மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" இந்த வசனத்தை தான இன்றைய பதிலுரையில் நாம் பாடுகிறோம். இந்த பரிசுத்த ஆவியால், தான், நமது திருச்சபை இருக்கிறது இன்னும் தொடர்ந்து இருக்கும். நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். பரிசுத்த ஆவ்யின் ஆற்றலாலும், இவ்வுலகில் இருப்பதாலும் தான், இந்த உலகை மாற்ற முடிந்தது, இந்த திருச்சபை 2000 வருடமாக தொடர்ந்து இருக்கி முடிகிறது. கிறிஸ்துவின் ஆவி நம்மில் இல்லாமல், யேசு என்ன செய்தாரோ, அதனை நாம் செய்ய முடியாது. பரிசுத்த ஆவியின் விழா, திருச்சபையின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம். நாமும், நமது பரிசுத்த ஆவயின் பிறந்த் நாள் விழாவை கொண்டாடுகிறோம். அது என்னவென்றால் நாம் திருச்சபையில் உறுப்பினர், அங்கத்தினர் ஆனதை குறிக்கிறது. இது அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டிய திருவிழா, மேலும், நமது உறுதிபூசுதலில், பிஷப், நாம் பரிசுத்த ஆவயை, நமது ஞானஸ்நானத்தில் பெற்றுகொண்டோம் என உறுதிபடுத்துகிறார்.

தூய ஆவியின் திருவிழா, அருட்சாதனங்களின் மூலம், நாம் கடவுளின் ஆற்றலை பெறுகிறோம் என்பதனை நினைவுபடுத்துகிறது. அந்த ஆற்றல் மூலம், நாம் பாவங்களிலிரிந்து விடுதலை அடைந்து, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நாம் இந்த உலகை மாற்றவேண்டும். கடவுள் எவ்வாறு இந்த மண்ணகத்தின் முகத்தை நம் மூலமாக புதுபித்தார். முதலில் கடவுள் பரிசுத்த ஆவியை யேசுவுக்கு கொடுத்தார். அதன் மூலம் கடவுளின் திட்டத்தை யேசு கிறிஸ்து நிறைவேற்றினார். இப்போது, தந்தை, அந்த பரிச்த்த ஆவியை நமக்கு கொடுத்திருக்கிறார். அதன் முலம், யேசு செய்த புதுபித்தல் சேவையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். உனக்கு அந்த தகுதிகள் இல்லை என்று நினைத்தால், நாம் செய்வது சரியா தப்பா? வெற்றி கிட்டுமா? என நினைத்தால், அது சரியானது தான், ஆனால், ஆவியின் கடவுள் உன்னுள் புது ஆற்றல்களோடு நீடித்து இருக்கிறார். உன்னுடைய குறைகள் எல்லாம், நிறைகளாகும். இந்த நம்பிக்கையோடு, முன்னேறி செல்.
© 2008 by Terry A. Modica

No comments: