Friday, April 17, 2009

ஏப்ரல் 19,2009 ஞாயிறு, நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 19,2009 ஞாயிறு, நற்செய்தி, மறையுரை

Acts 4:32-35
Ps 118:2-4, 13-15, 22-24
1 John 5:1-6
John 20:19-31
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 20
19 அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.20 இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் ' என்றார்.22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, ' தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா ' என்றார்.24 பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.25 மற்றச் சீடர்கள் அவரிடம், ' ஆண்டவரைக் கண்டோம் ' என்றார்கள். தோமா அவர்களிடம், ' அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன் ' என்றார்.26 எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று வாழ்த்தினார்.27 பின்னர் அவர் தோமாவிடம், ' இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள் ' என்றார்.28 தோமா அவரைப் பார்த்து, ' நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! ' என்றார்.29 இயேசு அவரிடம், ' நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் ' என்றார்.30 வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.31 இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)


" நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " இவ்வாறு தோமையார், யேசுவை கண்டு வியப்புடன் கூச்சலிடுவதை நாம் இன்றைய நற்செய்தியில் பார்க்கிறோம். இவ்வாறு தான், ஒவ்வொரு திருப்பலியிலும், கிறிஸ்துவின் நன்மை உயர்த்தப்படும்போது, நாம் வியப்புடன் கூச்சலிட வேண்டும். ஒரு காலத்தில் எல்லா கத்தோலிக்கர்களும் இப்படிதான் "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " என்று கூறிகொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது நாம் அதனை மறந்துவிட்டோம். இந்த பழக்கத்தை நாம் இப்போது புதுபித்துகொள்ள வேன்டும். இது பயபக்தியுடனும், வியப்புடனும், கிறிஸ்துவின் தலைமையை அங்கீகரித்தும், அவர் உண்மையாகவே நண்மையிலும், திராட்சை ரசத்திலும் ப்ரசன்னமாக இருக்கிறார் என்பதை தாழ்மையுடன் அங்கீகரிக்கிறீர்கள்.


போப் இரண்டாம் ஜான் பால், அவருடைய கிறிஸ்துவின் நண்மையை பற்றி எழுதிய புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: "கிறிஸ்துவை எங்கெங்கெல்லாம் நாம் அங்கிகரிக்க முடியுமோ, அவருடைய பல விதமான ப்ரசன்னங்களில், நாம் அவரை அங்கீகரிக்க வேண்டும். அதற்கெல்லாம் மேலாக, நாம் கண்டிப்பாக, என்றென்றும் வாழும் கிறிஸ்துவின் உடலையும், அவரது இரத்ததையும் நாம் ஏற்று கொள்ள வேன்டும், மேலும் அதனை உண்மையாக அங்கீகரிக்க வேண்டும்"

யேசு எவ்வாறு, அவரின் சீடர்களை திரும்ப சதையும், உயிருமாய் வந்து நம்ப வைத்தார் என்பதை கவனியுங்கள். அவர்கள் எல்லாரும் அவரை ஓர் ஆவி என்று நினைத்தனர். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. இந்த உய்ர்த்தெழுதலின் அதசியத்தை, நம்ப இயலாமல் அதனை ஏற்று கொள்ள முடியாமல் இருந்தனர்.
யேசு கிறிஸ்து, உயிர்த்தெழுதலின் அதிசயத்தை, அவரின் காயங்கள் மூலம் சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். அதனை ஒவ்வொரு திருப்பலியிலும் நமக்கு வெளிப்படுத்திகொண்டிருக்கிறார்.
நம்முடைய பொது அறிவாலும், நுன்னிய அறிவின் மூலமும், எப்படி நன்மையும்/ரொட்டி துண்டும், திராட்சை ரசமும், யேசுவின் உன்மையான உடலும், இரத்தமும் ஆனது என்பதை நம்மால் கண்டறியமுடியவில்லை. இரத்தமும் சதையுமாக 2000 வருடம் முன்பு சிலுவையில் மரணமடைந்த யேசு தான் இந்த நன்மையிலும், திரார்சை ரசத்திலும் இருக்கிறார் என்பதை நாம் நம்புவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயிர்த்தெழுந்த யேசுதான் நம்மிடம் வருகிறார் என்பது கூட நாம் புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஒவ்வொரு திருப்பலியிலும், நாம், என்றென்றும் வாழும், நித்தியவாழ்வின் இருப்பிடத்திற்கு செல்கிறோம், வாழும் கிறிஸ்துவிடமிருந்து பல பயன்கள் பெற நாம் செல்கிறோம். பெரிய வெள்ளி அன்று நமக்காக அவர் தியாகம் செய்தார் என்று அறிந்து கொள்கிறோம், ஏனெனில், நாம் பாவிகள், பாவம் செய்தவர்கள், அவருடைய காயங்களை பார்க்க ஆரம்பிக்கிறோம். இதன் பிறகு தான், கிறிஸ்துவின் திவ்ய நற்கருணையை புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.

கிறிஸ்துவின் மரணம் நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்டு, நம்மை பரலோகம் அழைத்து செல்ல வேன்டும் என நாம் விரும்ப ஆரம்பிக்கிற போது, திவ்ய நற்கருணையின் அதிசயத்தை நாம் நம்ப ஆரம்பிக்கிறோம். யேசுவை நாம் முழுமையாக வாங்கி, நமது வாழ்வில் அவர் முழுமையாக எப்போதும் இருக்க வேன்டும் என்று நாம் ஏங்க ஆரம்பிப்பது நமது கடைசி முயற்சியாக நடக்கிறது. நமது உடலில், தெய்வ யேசு வர வேன்டும் என விரும்புகிறோம். எந்த வழியில் வந்தாலும், நம்மை அவருக்கு பிடித்த மாதிரி மாற்ற வேன்டும் என விரும்புகிறோம்.

இந்த ஆசைதான், நாம், யேசுவை நற்கருனையில் பார்க்கும்போது கத்தி, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!! " என்று போற்றி புகழ்கிறோம்.



© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: