Friday, April 24, 2009

ஏப்ரல் 26, 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 26, 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 3வது ஞாயிறு
Acts 3:13-15, 17-19
Ps 4:2, 4, 7-9
1 John 2:1-5a
Luke 24:35-48
லூக்கா நற்செய்தி

அதிகாரம் 24
35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.36 சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' என்று அவர்களை வாழ்த்தினார்.37 அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.38 அதற்கு அவர், ' நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்?39 என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே ' என்று அவர்களிடம் கூறினார்;40 இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.41 அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ' உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா? ' என்று கேட்டார்.42 அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள்.43 அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.44 பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ' மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே ' என்றார்;45 அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்.46 அவர் அவர்களிடம், ' மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும்,47 ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது.48 இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
(thanks to www.arulvakku.com)


இப்பொழுது நாம் புதுப்பிக்கபட்ட மக்கள். -- ஈஸ்டர் மக்கள் -- இன்றைய திருப்பலியின் வாசகங்கள், மீட்பின் வாழ்வு வாழ்வதற்கும், பாவ வாழ்வு வாழ்வதற்கு மிக உறுதியான வித்தியாசம் இருக்கிறது என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. இன்றைய முதல் வாசகம் "மனம் திரும்புங்கள், அதனால் மனம் மாறி வாழ்வீர்கள், உங்கள் பாவங்கள் துடைத்து எறியப்படும்" என்று கூறுகிறது. இரண்டாவது வாசகம் " எனக்கு 'அவரை (கடவுளை) தெரியும்' என்று கூறிக்கொண்டு, ஆனால் கட்டளைகளை கடைபிடிக்காதவர்கள் பொய்யர்கள். உண்மை அவர்களிடத்தில் இல்லை" என்று சொல்கிறது.

மேலும் நற்செய்தியில் , "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், ″ பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் ″ என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது." என்று கூறுகிறாது.

ஏதோ ஒரு வழியில் ஒவ்வொரு நாளும், நாமெல்லாம் பொய்யர்களாக தான் இருக்கிறோம். நமது விசுவாசத்தை உதடுகளில் சொல்லிக்கொண்டு, நடைமுறையில் அதனை பின் பற்றுவதில்லை.
கிறிஸ்துவின் அன்பை நாம் உண்மையாக நம்பாதது போல நமது ஒவ்வொரு செயலும் இருக்கிறது. நமது கவலைகளோ, கடவுள் நம்மை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிளும் காக்கிறார் என்பதை நம்பாதது போல இருக்கிறது.
ஏதோ ஒரு வழியில் ஒவ்வொரு நாளும், நாமெல்லாம் பொய்யர்களாக தான் இருக்கிறோம். நமது விசுவாசத்தை உதடுகளில் சொல்லிக்கொண்டு, நடைமுறையில் அதனை பின் பற்றுவதில்லை.
கிறிஸ்துவின் அன்பை நாம் உண்மையாக நம்பாதது போல நமது ஒவ்வொரு செயலும் இருக்கிறது. நமது கவலைகளோ, கடவுள் நம்மை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலிளும் காக்கிறார் என்பதை நம்பாதது போல இருக்கிறது.
யேசு கிறிஸ்து நம்மை துன்புறுத்துகிறவர்களையும், எதிரியையும் அன்பு செய்ய வேண்டும் என்று நமக்கு கட்டளையிட்டு சொல்லும்போது அவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து தான் பேசுகிறார், என்று நாம் நம்பாதது போல நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இருக்கிறது. நமது மனதின் உறுதி, இந்த கட்டளைகளை கொடுக்கும்போது நம்மை விட புத்திசாலியாக இருந்திருப்பார் என்பதை நம்ப மறுக்கிறது.

யேசுவை பற்றிய உண்மையை உலகிற்கு அறிவிப்பதில், உங்களுடைய செயல்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறது?

அதிக கிறிஸ்தவர்கள் யேசு அவர்களுக்காக என்ன செய்தாரோ அதுவே மீட்பிற்கு போதும் எனவும், மோட்சத்திற்கு நெரடியாக சென்று விடலாம் என்று நினைத்து,அதையே ஆதாயமாக நினைத்து கொண்டு, ஒவ்வொரு நாளும் மீட்பிற்காக எதையும் செய்யாமல் இருக்கிறார்கள்.
நாமெல்லாம் மோட்சத்தின் கதவுகளில் நிற்கும்போது, மிகச் சரியாக எந்த ஒரு பிழையுமின்றி, பாவங்களே இல்லாமல் இருக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றால். கிறிஸ்துவை போல வாழ வேண்டும் என்கிற ஆசை நம்மிடையே இருக்க வேண்டும், ஒவ்வொரு நாளும், நமது வாழ்வை, பழக்க வழக்கங்களை சோதனை செய்து, எதையெல்லாம் மாற்ற வேண்டுமோ அதையெல்லாம் மாற்ற முயற்சி செய்ய வேண்டும். இதனை தான் கடவுள் விரும்புகிறார்.


http://gogoodnews.net/GNMcommunities/EmmausJourney/
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: