Friday, April 3, 2009

ஏப்ரல் 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஏப்ரல் 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
குருத்து ஞாயிறு

Readings for the Entrance Procession:
Mark 11:1-10 or John 12:12-16
Psalm 24 & Psalm 47
Readings for Mass:
Isaiah 50:4-7
Ps 22:8-9, 17-20, 23-24
Phil 2:6-11
Mark 14:1—15:47


இன்றைய ஞாயிறு, சிலுவையில், யேசு எவ்வாறு கஷ்டப்பட்டார், நம்மேல் உள்ள அதிகமான அன்பினால், அந்த வலிகளை தாங்கிகொண்டார் என்று பார்ப்பதற்கு முன், இன்று, யேசுவின் மேல் நறுமணத் தைலத்தை, ஊற்றி அவரை கொளரவித்த பெண்ணின் ஆழ்ந்த அன்பையும், அவர் யேசுவின் மேல் காட்டிய அக்கரையையும் பார்ப்போம்.

அந்த காலங்களில், டியோடரன்டோ, சென்டோ நமது உடலில் பூசிகொள்ள கிடையாது, நல்ல குளிக்கும் அறையும் கிடையாது. அதனால், அந்த காலத்தில் மக்கள், பல வாசனை தைலங்களையும், மூலிகைகளையும் ஒன்றாக கலந்து நறுமண தைலத்தை தயாரித்து, அதனை உபயோகித்து வந்தனர். கலந்த நறுமணத்தைலத்தை கலயத்தில் வைத்து அதிகமான நாட்கள் அதனை புளிக்க வைப்பர். எவ்வளவு அதிக நாள் புளிக்க வைக்கிறார்களோ, அவ்வளவு மதிப்பும், விலையும் உயர்ந்தது.

இந்த நற்செய்தியில், இந்த நறுமணத்தைலம், யேசுவிற்கு அளிக்கப்படும், விலையுயர்ந்த அன்பளிப்பாகும். ரொம்ப நாட்களாக புளிக்க வைத்ததாக இருக்க வேண்டும்.
நாம் யாருக்காவது அன்பளிப்பு கொடுக்க வேண்டும் என்றால், அருகில் உள்ள கடைக்கு சென்று புதிய பொருள் ஒன்றை வாங்குவீர்கள். ஆனால், ரொம்ப நாட்களாக நம்ம்டையே பொத்தி பாதுகாத்து வைத்திருக்கும், நாமே அதிகம் மதிக்கும் பொருள்தான் மிகவும் விலையுயர்ந்தது. அது தான் மிகவும் முக்கியமானது. அதனை நாம் அன்பளிப்பாக கொடுப்பது, நாம் அதனை தியாகம் செய்வதற்கு ஒப்பாகும்.

உங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பொருள்/விசயம் என்று எதை அதிக நாட்கள் வைத்து கொண்டு இருக்கிறீர்கள்? ரொம்ப நாட்களாக உங்களில் அது புளித்து/மெருகேற்றி இன்னும் அதிக மதிப்புடன் இருப்பது எது?

அந்த பொருளை உஙகளால் மற்றவர்களுக்கு கொடுப்பது போல கற்பனை செய்ய முடிகிறதா? அதனை யாருக்கு கொடுக்கிறோமோ அவர்கள் மேல் நாம் ஆழ்ந்த அன்பையும், அக்கறையையும் கொண்டிருக்க வேண்டும். அதனை வைத்திருப்பதை விட, கொடுப்பதில் தான் அதிக மதிப்பும், பெருமையும் இருக்க வேண்டும். இது மாதிரி ஒன்று நடந்தால் அது அன்பினால் மட்டுமே நடக்கும்.

யேசுவின் மேல் எவ்வளவு அதிக அன்பு வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு எது மிகவும் முக்கியமான பொருள் , அதனை மற்றவர்களுக்கோ அல்லது யேசுவிற்கோ கொடுப்ப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும்? அதனை யேசு அங்கீகரித்து, பாராட்ட வேண்டும். யேசுவின் மேல் உள்ள அன்பினால், இதனை தியாகம் செய்ய விருப்பமுள்ளவர்களாக இருக்கிறீர்களா ? அவ்வளவு அன்பு யேசுவின் மேல் உள்ளதா?

வேறு மாதிரியாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் குடுவையில் இருக்கும் பொருளை, யேசுவிற்கு தாராளாமாக கொடுப்பீர்களா?
யேசு உங்களுக்கு தாராளமாக என்ன என்ன கொடுத்தார் என்பதனை இந்த புனித வாரம் முழுதும் நினைத்து பாருங்கள். புனித வியாழன், புனித வெள்ளி நாட்களில் ஆலயத்தில் இருக்கும்போதும் நினைத்து பாருங்கள்.

மறுபடியும், உங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுகொள்ளுங்கள். "உங்களில் எதனை கொடுத்தால் யேசு, உங்களை பாராட்டுவார்? "

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: