Saturday, October 16, 2010

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை

அக்டோபர் 17 2010 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Exodus 17:8-13
Psalm 121:1-8
2 Tim 3:14 – 4:2
Luke 18:1-8


லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்.2 ' ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ' என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார் ' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். ' 6 பின் ஆண்டவர் அவர்களிடம், ' நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார்.


(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில்,கடவுளிடம் விசுவாசம் கொள்பவர்களிடம் , அவர்கள் நீதி வேண்டி அவரிடம் வந்தால் , கண்டிப்பாக அவர்க்ளுக்கு தேவையான உரிமையையும், பாதுகாப்பையும் தருவார். நம்மை யாராவது நிராகரித்தாலோ, ஒதுக்கபட்டாலோ, தவறான குற்றமிழைக்கபட்டாலோ, கடவுள் நம்மை காப்பார். மேலும் கடைசியாக, எவ்வளவு சீக்கிரமாக உங்களை காப்பாற்ற வருவார்? நிச்சயம் உடனே வருவார். அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றினாரா?

கடவுள் எப்பொழுமே மெதுவாக தான் நாம் வேண்டும் ஜெபத்திற்கு பதிலளிப்பார். (சில நேரங்களில் மாதங்கள் , வருடங்கள் ஆகலாம்). , அந்த ப்ரச்னை முடிவிற்கு வரும் வரை, யேசு உங்களோடு இருப்பார், மேலும் சாத்தானிடமிருந்து உங்களை காப்பார்.

யேசு எங்கே என்பது நமது கேள்வியல்ல. அல்லது ஏன் அவர் உடனே நமக்கு உதவி செய்ய வில்லை என்பது நமது கேள்வி அல்ல. இன்றைய நற்செய்தியில் கடைசி வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, யேசு உங்களிடம் வரும்போது நம்பிக்கையோடு இருப்பீர்களா? அல்லது ப்ரச்னையில் உள்ள பயத்தால் அவரை நாம் அடையாளம் கொள்ளவில்லையா?

நாம் விசுவாசத்தோடு வாழாவிட்டால், நமது ப்ர்ச்னையை இன்னும் பெரிதாக்கி செல்கிறோம். கடவுளை உதவிக்கு அழைத்த பின் இன்னும் மனச்சோர்வு அடைகிறீர்களா? நன்றாக கவனியுங்கள், யேசு உங்கள் அருகிலேயே நிற்கிறார், உங்கள் அதி விசுவாசத்தையும் நம்பிக்கையும் பெற. கடவுள் உங்கள் தடைகளை உடைதெறியாமல் இருப்பதால், நீங்கள் செயல்குழைந்து போகிறீர்களா? மேலும் கவனியுங்கள் யேசு உங்கள் நீங்கள் செல்லும் வழியை விட்டு, வேறு வழிக்கு , அவர் காட்டும் வழியில் செல்ல சொல்கிறார்.

நாம் எல்லாருக்கும் பகைவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு எதிராக வேலை செய்யும் சாத்தானின் ஆவியை யேசு வெட்டி உங்களை விட்டு தூர ஒட்டுகிறார். ஆனால், அந்த யேசுவின் செயலை நம்பவில்லையானால், யேசுவின் வாளினால், உங்களுக்கு ஒரு உதவியும் இல்லை.
உங்களை அடிக்கடி எப்பொழுதுமே தொந்தரவு செய்பவர்களை என்ன செய்யலாம். உங்கள் கண்கள் யேசுவை பார்க்காமல், அவர்களையே பார்த்து கொண்டிருந்தால், யேசு உங்களுக்கு கொடுக்கும் உரிமையை நீங்கள் தவற விட்டு விடுவீர்கள். நாம் விசுவாசத்தோடு வாழும்போது, யேசு நமக்கு கொடுக்கும் உரிமையை, அன்பளிப்பை நாம் அனுபவிக்க முடியும். அதனை நாம் இதயத்திலும், அவரது அமைதியையும், சமாதானத்தையும்,இடைவிடா முயற்சியையும் நாம் அனுபவிப்போம்.

© 2010 by Terry A. Modica

No comments: