Friday, October 1, 2010

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

அக்டோபர் 3, 2010 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு
Habakkuk 1: 2-3; 2: 2-4
Psalm 95:1-2,6-9
2 Timothy 1:6-8, 13-14
Luke 17:5-10

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 17

இயேசுவின் அறிவுரைகள்
(மத் 18:6 - 9; மாற் 9:42 - 48)
. ' 5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ' எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் ' என்று கேட்டார்கள்.6அதற்கு ஆண்டவர் கூறியது: ' கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ' நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில் ' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.7 ' உங்கள் பணியாளர் உழுது விட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், ' நீர் உடனே வந்து உணவருந்த அமரும் ' என்று உங்களில் எவராவது சொல்வாரா?8 மாறாக, ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம் ' என்று சொல்வாரல்லவா?9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ' நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் ' எனச் சொல்லுங்கள். '

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தி, நமக்கு அதிகம் தொந்தரவாக உள்ளது. கடினமான வேலைகளை செய்து, அதனை கடவுளுக்கு அர்ப்பணிக்கும்பொழுது, கடவுளிடமிருந்து நாம் எதிர்பார்ப்பது "நீங்கள் ஒரு நல்ல பணியாளன்"
நாம் வீட்டினில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அதற்குரிய பாராட்டு கிடைக்காமல், மேலும் பல வேலைகள், நம்மை செய்ய சொல்வார்கள்!. குடும்பத்தில், பெற்றோர்கள் நாள் முழுதும் வேலை செய்து ஓய்வாக இருக்கும் நேரத்தில் கூட, குழந்தைகளுக்காக படிப்பு வேலை செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில், நேர்மையாக வேலை செய்பவர்களுக்கு அதிக வேலை பளு தரப்படுகிறது, ஏனெனில் சோம்பேறிகளாக உள்ள நபரிடம் வேலை கொடுப்பதை விட, நல்ல முறையில் வேலை செய்பவர்களுக்கே அதிக வேலை கொடுக்கபடுகிறது. பங்கு கோவிலிலும், 10 சதவிகித மக்களே எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.
"கடவுளே நான் உங்கள் இறையரசின் நல்ல ப்ணியாளன் இல்லை! ஏனெனில், எனக்கு இடப்பட்ட வேலைகளை மட்டுமே நான் செய்கிறேன்!". என்று நாம் இந்த வேலைகளை செய்யும்போது , நம்முடைய பதில் இதுவாக இருக்கும் என்று இயேசு சொல்கிறார். அதிக வேலை பளு நமக்கு கொடுக்கபடவேன்டும் என்று இயேசு கூறுகிறாரா? அப்படி ஒன்றும் இல்லை. என்ன சொல்கிறார் என்றால், நமக்கு கொடுக்கபட்ட வேலைகளை செய்வதை விட, நமது அன்பினாலும், அக்கறையினாலும் நாமே அந்த வேலைகளை எடுத்து செய்ய வேண்டும் என்பதே ஆகும்.


ஓய்வெடுப்பதும் மிக முக்கியமாகும். இயேசுவும் சில நேரம் எடுத்து கொன்டு ஜெபம் செய்து, அவர் சக்தி பெறுவார். மற்றவர்களுக்கு வேலை கொடுப்பது சரியானது தான், அதனால், நாம் மட்டுமே எல்லா வேலைகளை செய்து நாம் நமது சக்தியை வீனடிக்க வேண்டியது இல்லை. இயேசுவும் சில வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். இதே போல் சமமக பிரித்து கொள்வது தான் நாம் எல்லாருக்கும் தேவையானது.
எனினும், நம்மில் பலர், இன்னும் கொஞ்சம் அதிகம் வேலை செய்ய வேன்டும் என்று நினைப்பதில்லை, அதற்காக முயற்சி எடுப்பதுமில்லை. ஏனெனில், நமக்கு எதிலும் சமமான , ஆக்கபூர்வமான விசுவாசம் இல்லை. மிதமான நிலையிலேயே, இருக்க விரும்புகிறோம். ஒரு வேலை நாம் செய்ய வேன்டிய தேவையிருந்தால் தான் நாம் செய்கிறோம். அல்லது நமக்கு தோதுவாக இருந்தால் தான் அந்த வேலையை செய்கிறோம். இதையே தான் நமது தெய்வீக வாழ்விலும் செய்கிறோம். மேலும் ஒரு மரத்தை கடலில் போய் விழு என்றால் , விழுந்துவிடும் என்று இயேசு சொல்வதை பார்த்து நாம் ஆச்சரியபடுகிறோம். எப்பொழுது நீங்கள் இது போல ஆச்சரியத்தை பார்த்தீர்கள்?

அதிக விசுவாசத்துடனும், அதிக சேவையும், வேலையும் செய்வதிலும் உள்ள தொடர்பு இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது: இந்த இரண்டுமே நடக்க, நாம் கடவுளின் அன்பு முழுமையானது என்றும், எவ்வித நிபந்தனையற்றது எனவும், நாம் அறிந்து கொள்ள வேண்டும். இதிலிரிந்தே கடவுள் நமக்கு சேவை செய்ய எப்பொழுது தயாராய் இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. அதனால், நம் மூலம், அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதனை அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது. நாம் அயற்சி ஆகும்பொழுது , கடவுள் நமக்கு மீண்டும் உற்சாகமும், ஆற்றலும் சக்தியும் கொடுப்பார். இதனை நீங்கள் நம்புகிறீர்களா?

© 2010 by Terry A. Modica

No comments: