Friday, October 22, 2010

அக்டோபர் 24,2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 24,2010 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30 வாரம்
Sirach 35:12-14,16-18
Ps 34:2-3, 17-19, 23 (with 7a)
2 Tim 4:6-8, 16-18
Luke 18:9-14

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 18




பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்:10 ' இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ' கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன். ' 13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ' கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும் ' என்றார். ' 14 இயேசு, ' பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.

(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், நமது நோக்கம், நம்முடைய சொந்த சுய லாபங்களுக்காக இருந்தால், அதன் விளைவு என்ன என்பதை விளக்கி சொல்கிறது. "தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் " கூடிய விரைவிலோ அல்லது சிறிது காலம் சென்றாலும் தம்மை தாமெ உயர்தி கொள்பவர்கள் தாழ்த்தபடுபவார்கள். அவர்கள் அதனை புரிந்து கொண்டார்களா அல்லது தெரிந்தும் அப்படி செய்தார்கள என்பது தெரியாது. அவர்களின் சொந்த நடவடிக்கையினாலே அவர்கள் தனது மதிப்பை குறைத்து கொள்வார்கள். அவர்கல் சந்திக்கும் மக்கள் அவர்களை உயர்வாக கருத மாட்டார்கள். கண்டிப்பாக, கடவுளும் அவர்களை உயர்வக மதிப்பதில்லை.


ஒரு நல்ல மாற்று முறை என்ன வென்றால், நமது அன்பை மற்றவர்களுக்காக கொடுக்கும்பொழுது, நம்மை பணிவுடனும், அடக்கத்துடனும் இருக்க செய்கிறது. நமது நோக்கம் அன்பில் நிலைத்திருக்காவிட்டால், நாம் சரியாக தான் நடந்து கொள்கிறோம் என்று நாம் நினைத்தாலும், அது சரியான வழி இல்லை. மற்றவர்களின் மேல் சரியாக அக்கறை கொண்டு, அவர்களுக்கு நாம் நல்லது செய்யும்பொழுது, நாம் நாமாகவே சரியாக இருக்கிறோம் என்று நினைத்து இருந்தாலும் , இந்த நல்ல செயல்கள் மூலமாக நாம் தாழ்ந்து கடவுளுடன் பரிசுத்த வாழ்வில் தொடர்வோம்.


மற்றவர்களிடம் நாம் அன்பு செய்ய வேண்டும் என்று தான் நாம் சரியாக படைக்கபட்டிருக்கிறோம். நமக்கு நாமே சரி என்று நிர்ணயித்து கொள்வது, நாமே முடிவெடுத்து கொள்வது ஆகும். இது நம்மை நல்ல விசயங்கள் செய்வதற்காக ஊக்குவிக்கிறது. ஆனால் இது நமது சுய லாபங்களுக்காக நம்மையே பாராட்டுவது போல ஆகும். அதன் மூலம், கடவுளின் அங்கீகாரத்தை பெறுவதற்கும், அல்லது நமது சொந்த லாபங்களுக்காகவும், இதனை செய்யலாம். அன்பு, தான் சரியானது. அது தான் மற்றவர்களுக்காக பல சேவைகள் செய்ய ஊக்குவிக்கும்.

இன்றைய நற்செய்தியில் வரும் பரிசேயர் போல தான் நாம் பலர் இருக்கிறோம். நம்மை விட இன்னும் பாவ வாழ்வில் இருப்பவரை பற்றி நினைத்து பாருங்கள், கோவிலுக்கு செல்லாதவர்கள், உங்களை போல அதிகம் ஜெபம் செய்யாதவர்கள். உங்களை போல நேரத்திற்கும், அக்கறைக்கும் மதிப்பு கொடுக்காதவர்களை நினைத்து பாருங்கள். ஒரு சிலரை அன்பு செய்வது மிகவும் கடினமாக உள்ள சிலரை நினைத்து பாருங்கள்.

இதற்கெல்லாம், சரியான தீர்வு என்னவெனில், கடவுள் அவர்கள் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதனை நினைத்து அவரிடம் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். கடவுளின் அன்பை நம்மோடு இனைத்து, அவர்கள் மேல் அக்கறை கொண்டால், முழு ஆற்றலோடும், எடுத்த காரியத்தில் வெற்றியோடும் நம்மால் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும் . நாம் கடவுளின் திவ்ய நற்கருணையோடு இனைந்து நாம் எல்லா சேவைகளிலும் ஈடுபட்டால், அவர் நம்மை நமக்கு உள்ள குறைகளை முழுதும் நீக்கி கடவுளுக்கு எது சரியென்று படுகிறதோ அதனையே நமக்கும் ஆற்றலாய் கொடுத்தருளுவார்.

© 2010 by Terry A. Modica

No comments: