Friday, May 20, 2011

மே 22, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மே 22, 2011 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 6:1-7
Ps 33:1-2, 4-5, 18-19 (with 22)
1 Peter 2:4-9
John 14:1-12


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 14


பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல் ..............தொடர்ச்சி
(மத் 26:31 - 35; மாற் 14:27 - 31; லூக் 22:31 - 34)
1 மீண்டும் இயேசு, ' நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.2 தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ' உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் ' என்று சொல்லியிருப்பேனா?3 நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.4 நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் ' என்றார்.5 தோமா அவரிடம், ' ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்? ' என்றார்.6 இயேசு அவரிடம், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7 ' நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள் 'என்றார்.8 அப்போது பிலிப்பு, அவரிடம், ' ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும் ' என்றார்.9 இயேசு அவரிடம் கூறியது: ' பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ' தந்தையை எங்களுக்குக் காட்டும் ' என்று நீ எப்படிக் கேட்கலாம்?10 நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள்.12 நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.13 நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.14நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி வாசகம் " நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்." என்று கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன? நாம் எப்படி இயேசு செய்வது போல செய்ய முடியும்.? - இன்னும் பெரியவற்றை - தெய்வீக அற்புதங்களை இயேசு செய்தது போல நம்மால் செய்ய முடியுமா?



இதற்கான பதில், நற்செய்தியின் அந்த அதிகாரம் முழுது படித்தால் தெரியும். இயேசு அவரின் தந்தையோடு உள்ள நெருங்கிய உறவை விளக்காமாக கூறுகிறார். . அது என்னவெனில், "என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே.11 நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார்", ஆனால் நினைவில் வைத்து கொள்ளுங்கள், இயேசு அங்கே மனிதனாகவும், தெய்வமாகவும் இருந்தார். இதனை நாம் எப்பொழுதும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.


"நான் செய்யும் செயல்கள்" என்றால், இயேசு மனிதனாக , தந்தை கடவுளுக்காக செய்யும் செயல்கள், மனிதனாக, அவர் எல்லோரும் செயல்களை செய்தார். அது என்னவெனில், தந்தை கடவுள் நம் மேல் கொண்ட அன்பினால், நாம் அவருக்கு செய்யம் எல்லா நல்ல செயல்களை போல, இயேசுவும் மனிதனாக தந்தை கடவுள் அன்பின் மேல் செய்யும் செயல்களாகும்.


தந்தையின் பாசமிகு குழந்தகளாக, அவர் அன்பு செய்வது போல, நாம் பிறரை அன்பு செய்கிறோஓம். நாம் கற்று கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கிறோம். நமக்கு கிடைத்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மற்றவர்களின் ப்ரச்னையை காது கொடுத்து கேட்டு, அவர்களை நாம் புரிந்து கொள்கிறோம். நமது வேலைகளில், கடினமாக உழைத்து, அதனை செவ்வனே செய்து முடிக்கிறோம். தேவை என்று வருபவர்களுக்கு நம்மால் ஆன உதவு செய்கிறோம். இதெல்லாம் தெய்வீக செயல்கள் அல்ல. நாம் கடவுளின் குழந்தைகளாக இருந்து செய்கிறோம்.



"பெரிய செயல்கள்" என்பது இயேசு தெய்வீக காரியங்களை தந்தை கடவுளோடு சேர்ந்து செய்கின்ற செயல்கள் ஆகும். கடவுள் இயேசு மூலமாக நடத்தி காட்டி அற்புதங்கள் ஆகும், ஏனெனில், கடவுளின் அன்பும், இயேசுவின் அன்பும், ஒரே அன்பு தான்.


நமது பாவங்களுக்காக, இயேசு அதற்கான தன்டனையை ஏற்று கொண்டு, சிலுவையில் மரணமடைந்தால், தந்தை கடவுள் அவரை உயிர்த்தெழ செய்தார். இயேசு அவருடைய தெய்வீகத்தை, நமக்கு கொடுத்துள்ளார், அதன் மூலம், இயேசுவின் பணிகளை நாம் இவ்வுலகில் தொடர்ந்து செய்ய வேண்டும். ஏனெனில், நமது ஞாணஸ்தானத்தின் மூலமாக நாம் கடவுளின் தெய்வீகத்தை பெற்று கொண்டோம். தந்தை கடவுள் நம் மூலமாக இவ்வுலகை தொடர்பு கொள்கிறார். அவரோடு நாம் இனைந்து, அன்பிற்காக ஏங்கும் மக்களுக்கு அன்பை கொடுக்கலாம், தெய்வீக அற்புதங்கள் நடக்க நாம் கருவியாக இருக்கலாம், கடவுள் சொல்வதை நம்மால் கேட்க முடியும் , கடவுளின் ஞானத்தை மற்றவர்களோடு நம்மால் பகிர்ந்து கொள்ள முடியும். நமது குறைகளோடு இருந்தும் , கடவுள் நம்மை செய்ய சொல்வதையெல்லாம், நம்மால் செய்ய முடியும்.

© 2011 by Terry A. Modica

No comments: