Friday, May 6, 2011

மே 8, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

மே 8, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் 3ம் ஞாயிறு

Acts 2:14, 22-33
Ps 16:1-2, 5, 7-11
1 Peter 1:17-21
Luke 24:13-35


லூக்கா நற்செய்தி


அதிகாரம் 24



எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல்
(மாற் 16:12 - 13)
13 அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. 14 அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள்.15இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார்.16 ஆனால் அவர் யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.17 அவர் அவர்களை நோக்கி, ' வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன? ' என்று கேட்டார். அவர்கள் முகவாட்டத்தோடு நின்றார்கள்.18அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக, ' எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில் நிகழ்ந்தவை தெரியாதோ! ' என்றார்.19 அதற்கு அவர் அவர்களிடம், ' என்ன நிகழ்ந்தது? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' நாசரேத்து இயேசுவைப் பற்றியே தான் பேசுகின்றோம். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்.20 அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும் ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.21 இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன.22 ஆனால் இன்று எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்;23 அவருடைய உடலைக் காணாது திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடியிருக்கிறார் என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள்.24 எங்களோடு இருந்தவர்களுள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர். ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை ' என்றார்கள்.25 இயேசு அவர்களை நோக்கி, ' அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே!26 மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் பட வேண்டுமல்லவா! ' என்றார்.27 மேலும் மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.28 அவர்கள் தாங்கள் போக வேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு அப்பால் போகிறவர் போலக் காட்டிக் கொண்டார்.29 அவர்கள் அவரிடம், ' எங்களோடு தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று ' என்று கூறிக் கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு அவர்களோடு சென்றார்.30 அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.31 அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.32 அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ' வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ' என்று பேசிக் கொண்டார்கள்.33 அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் குழுமியிருக்கக் கண்டார்கள்.34 அங்கிருந்தவர்கள், ' ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார். அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார் ' என்று சொன்னார்கள்.35 அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
(thanks to www.arulvakku.com)




இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டு சீடர்களும், இயேசு அவர்களுக்கு மறைநூலை மேற்கோள் காட்டி சொன்ன பிறகும், அப்பத்தை எடுத்து இரண்டு துண்டாக பிரித்த பின்பு தான் இயேசுவை அவர்கள் கண்டு கொண்டனர். முதலில் இயேசு கூறிய மறைநூலை கேட்ட பொழுது, அவர்களின் மனது மட்டும் தான் இயேசுவை அறிந்து கொண்டது (மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா? ). இயேசு அப்பத்தை எடுத்து ஆசிர்வதித்து, அதனை பிட்டு அவர்களுக்கு கொடுக்கும் பொழுது தான் அவர்களின் கண்கள் திறந்தன.அப்பொழுது தான் அவர்கள் உண்மையான இயேசுவை பார்த்தனர்.


நாம் இன்று திருப்பலியில் பங்கு கொள்ளும் பொழுது, நாமும் இயேசுவோடு பயணம் செய்கிறோம். முதலில், நற்செய்தி வாசகத்தில், மறைநூலை கேட்கிறோம், பிறகு ப்ரசங்கத்தில் , அதற்கான விளக்கங்களை கேட்கிறோம், இதன் மூலம், நமது உள்ளத்தில் இயேசுவை கேட்கிறோம். அனுபவப்பட்ட வாசகம் வாசிப்பவர், வாசகங்களை முக்கியமான வசனங்களை அழுத்தம் திருத்தமாகவும் வாசிப்பார், அதன் மூலம் , நம் உள்ளத்தால், இயேசுவை நாம் உணர முடியும். நல்ல பயிற்சி பெற்ற குருவானவர் அவர் ப்ரசங்கத்தின் மூலம், நம் உள்ளத்தை பற்றி எறிய வைப்பார். ஆனால், வாசகம் வாசிப்பவரோ, அல்லது குருவானவரோ, அவர்கள் வேலையை ஒழுங்காக செய்யவில்லையென்றாலும், நமது இதயம் இயேசு பேசுவதை கேட்க முடியும்.


அதன் பிறகு நாம் நற்கருணை சடங்கை தொடங்குகிறோம். குருவானவர் அப்பத்தையும் , திராட்சை ரசத்தையும் ஆசிர்வதித்து தொடர்கிறார். அதில் இயேசுவே தான் அந்த சடங்கை செய்கிறார். குருவானவரின் கைகள், மற்றும் குரல் மூலமாக அதனை செய்கிறார். இயேசுவே தான் நமக்காக அந்த அப்பத்தையும் , ரசத்தையும் புனித படுத்துகிறார். எம்மானுஸ் சீடர்களுக்கு செய்ததை போல நமக்கும் செய்கிறார்.

நாம் , திருப்பலியின் முதல் பகுதியில், இயேசுவிற்காக நமது உள்ளத்தை திறந்தால்,தொடர்ந்து அவரோடு இனைந்து இருந்தால், சாதாரண அப்பத்தை விட பல மடங்கு உயர்ந்த இயேசுவை நாம் பார்க்க முடியும். அவரை நாம் கண்டு மனத்தாலும், உள்ளத்தாலும் கண்டு கொள்ள முடியும். உயிர்த்த இயேசு நம்மோடு உண்மையாகவே இருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.


© 2011 by Terry A. Modica

No comments: