Friday, June 24, 2011

ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூன் 26, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
இயேசுவின் திரு உடல் , திரு இரத்த பெருவிழா

Deut 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Cor 10:16-17
John 6:51-58


யோவான் (அருளப்பர்) நற்செய்தி


அதிகாரம் 6



மானிடமகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். ' 52 ' நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்? ' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.53 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.54 எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.55 எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.56 எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.57 வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.58 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். '
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறில், நாம் கடவுளின் திரு உடலும், திரு இரத்தமும் திருவிழாவை கொண்டாடுகிறோம். ஏனெனில் இயேசு கிறிஸ்து உண்மையாகவே திவ்ய நற்கருணையில் இருக்கிறார் என்பதை நாம் நம்புகிறோம், விசுவசிக்கிறோம்.


முதல் வாசகத்தில், தந்தை கடவுள் எப்பொழுதுமே, நமது கடினமான காலங்களில் , பாலைவனத்தில், அவர் தண்ணீரும், உணவும் தந்தது போல, நமக்கும் கொடுப்பார் என்பதை பார்க்கிறோம். நமது நம்பிக்கையற்ற வாழ்விலும், சோதனை காலங்களிலும் கூட , இஸ்ரேயலருக்கு செய்தது போல, கடவுள் நமக்கு எல்லாம் செய்வார். உண்மையான கிறிஸ்துவின் ப்ரசன்னம் மூலம், நமக்கு தேவையானவற்றை தந்தை கடவுள் கொடுக்கிறார். கிறிஸ்து நற்கருணையில் மட்டுமல்ல, பரிசுத்த ஆவியின் மூலமும் நம்மிடம் வருகிறார். பரிசுத்த ஆவியானவர், நமது ஞானஸ்நாணத்தின் மூலம் நம்மில் வந்து தங்கி நம்மை வழி நடத்தியும், நமது பரிசுத்த வாழ்வையும் வளரச் செய்கிறார்.


நற்செய்தி வாசகம், திவ்ய நற்கருணை வெறும் உணவும், திராட்சை ரசமும் அல்ல, உண்மையாகவே கிறிஸ்து தான் என்று சொல்கிறது. இந்த உணவும், இரசமும் நமக்கு எப்படி பாம்பும், தேளும், நீரும் இல்லாத பாலைவனத்தில் நமக்கு உதவப்போகிறது. இயேசு உண்மையாகவே நமது தாகத்தை தீர்க்கிறார் மேலும், நமது பசியை நீக்குகிறார். நாம் அவரை முழுமையாகவே ஏற்றுகொள்வதை போல, அவரும் நம்மை முழுதுமாக எற்றுகொள்கிறார். நாம் அவரை உள்ளிழுப்பது போல, அவரும் நம்மை அவருள் இழுத்து கொள்கிறார். இந்த இனைப்பில், நமது சோதனைகளில் வெற்றியடைகிறோம்.


இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நாம் இயேசுவோடு இனைந்திருப்பதை இன்னும் கிறிஸ்துவின் உடலோடு ,இவ்வுலகில் உள்ள எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது என்று சொல்கிறது. அதன் மூலமாக நமக்கு தேவையானதை இறைவன் கொடுக்கிறார். இந்த இனைப்பில், எதுவெல்லாம் உயிர்ப்புள்ளதோ, அதெல்லாம் உயிர்ப்புடன் இருக்கும், எல்லா திறமைகளும், அன்பளிப்புகளும், பகிர்ந்து கொள்ளப்படுகிற பொழுது , யாரும் குறையுடன் இருப்பதில்லை. மேலும், இந்த இனைப்பில், இயேசு நமக்கு உறுதியளித்தது போல, நமக்கு விண்ணக வாழ்வு நமக்கு முழுமையாக கிடைக்க விருக்கிறது.


© 2011 by Terry A. Modica

No comments: