Friday, July 15, 2011

ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 16, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 16ம் ஞாயிறு


Wisdom 12:13, 16-19 - சா ஞா 12 : 13, 16 - 19
Ps 86:5-6, 9-10, 15-16
Rom 8:26-27 - உரோ 8 : 26, 27
Matt 13:24-43 - மத் 13 : 24 – 43



நற்செய்தி வாசகம்
அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன.
நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், `முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்'' என்றார்.
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.''
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.''
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர்.
அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு;அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''
(thanks to arulvakku.com)


அமெரிக்க பிஷப்கள் எல்லாம், இணைந்து கத்தோலிக்க மணமாற்றத்தை எப்படி செய்தல் வேண்டும் என்று வறையறுத்துள்ளனர். அதன் தலைப்பு "செல்லுங்கள், சீடர்களை உருவாக்குங்கள்".("Go and Make Disciples." ) இது மூன்று முக்கிய கட்டங்களை குறிப்பிடுகிறது.
1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்:
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள்

இன்றைய நற்செய்தியில், இயேசுவும் இதனையே மணமாற்றத்திற்கான நோக்கங்களாக உவமைகளாக சொல்கிறார்.


1) உங்கள் விசுவாசத்தை நன்கு வளர்த்திடுங்கள்: இறையரசில், நாமெல்லாம், களைகளுக்கிடையே உள்ள நல்ல கோதுமை பயிர்களாக இருக்கிறோம். நாம் பரிசுத்த வாழ்வில், மிக சரியாக வளரவில்லையென்றால், களைகள் நம்மை விட அதிகமாக வளர்ந்துவிடும், நம்மை நசுக்கிவிடும், உங்கள் பரிசுத்த வாழ்விலிருந்து களைகளை அகற்ற என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையற்றோரிடமும், சாத்தான் வழி செல்பவர்களிடமும் இடையே நீங்கள் வாழும்பொழுது, உங்கள் விசுவாச வாழ்வு எவ்வாறு பலனடைகிறது? , உங்கள் தந்தை கடவுள் - உலகை படைத்தவர் நீங்கள் பரிசுத்த வாழ்வில் வளர, உங்களுக்கு தேவையான எல்லா ஆற்றலையும், அதிகாரத்டையும் வழங்குகிறார்.
2) மற்றவர்களை மணமாறுதலுக்கு அழைத்திடுங்கள்: இறையரசில், நாம் கடுகை போல மிகச்சிறிய அளவுடன் உள்ளோம், ஆனால் வளர்ந்த பின் எல்லோருக்கும் அதிக பலனும் நன்மையும் கிடைக்கிறது. உங்கள் விசுவாசத்தால் யாரெல்லாம் பலன் அடைகிறார்கள்? உங்கள் பரிசுத்த வாழ்வின் வளர்ச்சி, மற்றவர்கள் இயேசுவோடு இனைய எவ்வாறு அழைக்கிறது? பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு எல்லா ஆற்றலையும் கொடுத்து, அவர்களின் விசுவாசத்தை வளர்க்க உதவிடுகிறார். ஆனால், நீங்கள் மனமுவந்து அவர்களை இறைவனின் பரிசுத்த வாழ்வை அனுபவிக்க அழைக்க வேண்டும்.
3) கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்து சமூகத்தை மாற்றிடுங்கள் : இறையரசில், நாம் எல்லாம் புளிப்பு மாவை போன்றவர்கள். அதனை மற்ற மாவோடு கலந்தால், எல்லா மாவையும் புளிக்க செய்துவிடும், அதே போல, நாம் கிற்ஸ்தவர்களாக , இவ்வுலகை முன்னேற்ற என்ன செய்து கொண்டிருக்கிறோம்? உங்கள் பரிசுத்த வாழ்வு, நீங்கள் வேலை செய்யும் இடத்தில், கோவிலில், சமூகத்தில் என்ன வித்தியாசத்தை கொடுக்கிறீர்கள்? திருப்பலியில் நீங்கள் பெற்று கொள்ளும் திவ்ய நற்கருணையினால், நீங்கள் இவ்வுலகை உங்கள் நன்மைகளால் இன்னும் வளமாக்க முடியும்.
© 2011 by Terry A. Modica

No comments: