Friday, July 29, 2011

ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 31, 2011, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Isaiah 55:1-3
Ps 145:8-9, 15-18
Rom 8:35, 37-39
Matt 14:13-21



மத்தேயு நற்செய்தி


அதிகாரம் 14

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
(மாற் 6:30 - 44; லூக் 9:10 - 17; யோவா 6:1 - 14)
13 இதைக் கேள்வியுற்ற இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் படகிலேறிப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.14 இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.15 மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, ' இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும் ' என்றனர்.16இயேசு அவர்களிடம், ' அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் ' என்றார்.17 ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, ' எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை ' என்றார்கள்.18 அவர், ' அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள் ' என்றார்.19 மக்களைப் புல்தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்.20 அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.21 பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலான உணவுண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.

(thanks to www.arulvakku.com)


இந்த வாசகங்கள் எனக்கு தாகத்தையும், பசியையும் தூண்டுகிறது!. நாம் திருப்பலி முடிந்து இரவு உணவிற்கு செல்லலாமா?


இன்றைய பதிலுரை பாடலில், "தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்." இதனை தெரிந்து கொண்டும், நமக்கு போதுமானதாக இல்லை. நமக்கு இருக்கிறதே போதும் என்று நாம் இருப்பதில்லை.


வாழ்க்கையில் எல்லா விசயங்களும் நமக்கு நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், திருப்தி பட்டு கொள்வதில்லை. முக்கியமாக நமது உறவுகளில் நாம் இன்னும் திருப்தி அடைவதில்லை. நமக்கு இன்னும் அன்பும், நம்மை முக்கியமாக அக்கறையோடு மற்றவர்கள் பார்த்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இன்னும் அன்பிற்கு தாகமாக இருக்கிறோம். இருந்தாலும், அதிருப்தியால் முனுமுனுக்கிறோம். மற்றவர்களீன் அக்கறையய்யும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். யாரெல்லாமிடமிருந்து நமக்கு ஆதரவு தேவையோ ,அவர்களிம் ஆதரவை, கனிவையும் எதிர்பார்க்கிறோம்.


மேலும், நாம் வாழ்வில் அருகில் இருக்கும் மனிதர்கள், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடவுளின் அன்பையும், அக்கறையையும், உங்களுக்கு கொடுக்க அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், யாருமே முழுமையாகவும் , பிழையற்ற அன்பினை கொடுப்பதில்லை. சிலர் இந்த அழைப்பை அப்படியே நிராகரித்து விடுகின்றனர். இதனால் தான், நாம் இன்பத்தை வெறுத்தும், கோபத்தோடும், செயல் குழைந்து போயும், தனிமைபட்டும், பசியோடும் இருக்கிறோம்.

நாம், பிழையுள்ள மனிதர்களை மன்னித்தும், இயேசுவை நோக்கி நாம் ஜெபித்தால், அவர் சின்னதை கூட பல மடங்காக பெருக்கி தருவார். நாம் பிழையுள்ள மனிதர்களை பார்காமல், இயேசுவை நோக்கி பார்த்தால், இயேசு நம் இதயம் முழுதும் நிரம்ப அன்பை பொழிவார்.

திருப்தியற்ற தன்மை என்பது, இயேசு உங்கள் கவனத்தை திருப்ப முயற்சிக்கிறார் என்று அர்த்தம்;இயேசு எதையோ கொடுக்க விரும்புகிறார், ஆனால், நாம் அதற்கு இன்னும் தயாரகவில்லை. நமது ப்ரச்னை என்ன வென்றால்: இயேசுவை நாம் பார்க்காமல், அவரை தொடாமால், எப்படி அவர் கொடுப்பதை நாம் வாங போகிறோம்?


கண்ணுக்கு தெரியாத கடவுளை நாம் எப்படி தொட்டு திருப்தியடைய போகிறோம், நாம் எப்பொழுது, ஜெபத்தில், கிற்ஸ்தவ குழுக்களிலும் இனைந்து, கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும். கடவுள் என்ன செய்கிறார் என்பதை கூர்ந்து நோக்கியே இருக்க வேண்டும். மேலும் யார் மூலம் அதனை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். அதிக ஈடுபாடும், எதிர்பாராததை எதிர்பார்த்தும் தயாராக இருக்க வேண்டும்.

© 2011 by Terry A. Modica

No comments: