Friday, January 27, 2012

ஜனவரி 29, 2012 ஞாயிரு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 29, 2012 ஞாயிரு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 4ம் ஞாயிறு
Deut 18:15-20
Ps 95:1-2, 6-9
1 Cor 7:32-35
Mark 1:21-28

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 1
தீய ஆவி பிடித்தவரைக் குணப்படுத்துதல்
(லூக் 4:31 - 37)
21 அவர்கள் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார்.22 அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார்.23 அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார்.24 அவரைப் பிடித்திருந்த ஆவி, ' நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர் ' என்று கத்தியது.25' வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ ' என்று இயேசு அதனை அதட்டினார்.26அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று.27 அவர்கள் அனைவரும் திகைப்புற்று, ' இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! ' என்று தங்களிடையே பேசிக் கொண்டனர்.28அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.
(thanks to www.arulvakku.com)



இன்றைய ஞாயிறின் நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. நமது வாழ்வில், அவரது அதிகாரத்தையும் , ஆட்சியையும் அவருக்கு அர்ப்பணித்தோமானால், உங்கள் கடினமான நேரத்தில் கூட , கடவுளில் சந்தோசமாக இருப்போம்,

ஏன், ஏனெனில், கிறிஸ்துவின் அதிகாரம் எல்லாவற்றிற்கும் மேலானது என்பது நமக்கு தெரியும். அதன் அர்த்தம் என்ன என்றால், கிறிஸ்துவின் அதிகாரத்தின் கீழ் நாம் அர்ப்பணித்த அனைத்தும், நல்ல வெற்றியையே தரும் என்பது ஆகும். கஷ்டமான விசயங்கள் கூட நமக்கு ஆசிர்வாதமாக மாறிவிடும். விபத்து கூட வெற்றியாக முடியும். கவலைகள் சந்தோசங்களாக மாறும். படபடப்பும், வெறுப்பும், புதிய வளர்ச்சிக்கும் , புதிய அறிவை, புதிய அனுபவத்தையும் கொடுத்து, மற்றவர்களுக்கு நாம் சேவை செய்யும் மனிதனாக ஆக்கும்.
எனினும், நாம் கிறிஸ்துவின் அதிகாரத்தை ஒதுக்கி வைத்து விட்டு, நாமே பொறுப்பை எடுத்து கொண்டு, ப்ரச்னையை நாம் முடித்து விடுவோம் என்று நினைத்தால், எப்படி கடினமான வாழ்வை மாற்றி நல்ல விதமாய் கொண்டு வரலாம் என நினைத்தால், நமது ப்ரச்னைகள் இன்னும் மோசமாக தான் போகும். இது தான் "நன்னெறி நம்பிக்கை" என்பதாகும். இதையே தான் போப் பெனடிக்ட் "திருச்சபையின் கருத்துகளை அப்படியே ஏற்று கொள்வது .. " (ஏப்ரல் 19, 2005) என்று சொல்கிறார்.

சந்தோசத்தின் பாதை, இயேசுவின் பாதங்களிலினால் போடப்பட்டுள்ளது. சாத்தானிடமிருந்தும், நமது மனித வாழ்வின் கஷ்டங்களிலிருந்தும், இயேசுவின் அதிகாரத்தின் கீழ் வைத்தோமானால், நாம் அதிலிருந்து பலனடைவோம். அவரின் போதனைகளை கேட்டு நாம் கீழ்படிய வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவரை நாம் நம்ப வேண்டும். அவரின் வழி தான் சரியான வழி என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது எல்லாவற்றிற்கும் அர்த்தம் என்ன என்றால், இயேசுவோடு இனைந்து, சிலுவை வழி சென்று நாம் உயிர்த்தெழுதலில் நாம் மனப்பூர்வமாக தொடரவேண்டும்.

நமக்காக காத்திருக்கும் வெற்றியை நாம் அடைய குறுக்கு வழி கிடையாது. சாத்தானை வெல்ல நாம் சுலபமான வழி கிடையது. இது உணமையில்லையெனில், இயேசு சிலுவையில் கஷ்டப்பட்டு மரணித்திருக்க வேண்டியதில்லை.

நல்ல செய்தியாக, நாம் சந்தோசபட நமக்கு இருக்கிறது என்ன வென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்யும், மிகுந்த ஆற்றலும், இவ்வுலகிலே மிகுந்த ஞானமும் உள்ள கடவுளின் அதிகாரத்தில் இருக்கிறோம் என்பதே, அதுவே நம் நம்பிக்கையுமாகும். கேள்வி என்னவெனில்: நீங்கள் கடவுளிடம் சரணடைவீர்களா?

© 2012 by Terry A. Modica

No comments: