Friday, January 6, 2012

ஜனவரி 8, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜனவரி 8, 2012 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
கிறிஸ்துவின் ஞாணஸ்நானம்
Isaiah 42:1-4,6-7 or Isaiah 55:1-11
Ps 29:1-4,9-10 or Isaiah 12:2-6
Acts 10:34-38 or 1 John 5:1-9
Mark 1:7-11
மாற்கு நற்செய்தி

அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.

இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
(thanks to www.arulvakku.com)

ஏன் இயேசுவுக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கப்பட்டது? அவருக்கு பாவ மன்னிப்பு தேவையில்லையே? ஏன்,? இயேசு ஏதாவது செய்தாரா? நாம் பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்ற நமக்காக சிலுவையில் இறந்தார்! இன்னும் இதைவிட இயேசுவுக்கு அதிகம் இருந்தது.
இயேசுவே அவராக பாவிகளோடு இணைத்து கொண்டார். முதலில் நம்மில் ஒருவராக பணிவுடன் நம்மோடு இணைந்து கொண்டார், சாதாரண மனிதனாக நமக்குள்ள தேவைகளை போல, அவரும் வாழ்ந்தார். நமக்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, தண்ணீரில் கிறிஸ்து நம்மில் வரத்தான், இயேசுவும் தண்ணீரில் ஞாண்ஸ்நாணம் பெற்று கொண்டார். நம் தண்ணீர் ஞாணஸ்நாணத்தால், நாம் புது வாழ்வை தொடங்கி, பரிசுத்த வாழ்வில் வாழ்ந்து, நித்திய வாழ்வில் இணையலாம்.
நாம் யார் என்பதை இயேசுவும் ஒவ்வொரு முறையும் அவர் நமக்கு எடுத்து காட்டும் செயல்களிலும், முன் மாதிரியாகவும் இருந்தார். நாம் கடவுளின் குழந்தைகளாகவே படைக்கபட்டிருக்கிறோம். இயேசுவிற்கு ஞாணஸ்நாணம் கொடுக்கும்பொழுது, பரிசுத்த ஆவி இறங்கி வந்தார், ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' அப்பொழுது, கடவுள் இவ்வாறு கூறினார். இதே மாதிரி நம் ஒவ்வொருவர் ஞாணஸ்நாணத்திலும் நடக்கும் என்பதை இயேசு அன்று நமக்கு காட்டினார்,
பரிசுத்த ஆவி உங்கள் மேலும் இறங்கி வந்தார் , மேலும் கடவுள் "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.

ஞாணஸ்நாணம் தண்ணீர்தான் கடவுளின் கருவறையாக இருந்து , நாம் அவரின் குடும்பத்தில் மீண்டும் பிறந்து , அவரது இறைசேவையில் நாம் இணைகிறோம். தீர்த்த நீரை எடுத்து நாமே சிலுவை இட்டுக் கொள்ளும்பொழுது , நாம் நமது ஞாணஸ்நாணத்தை மீண்டும் புதுபித்து கொள்கிறோம்.
யோர்தான் ஆற்றில், இயேசு சாதாரண வாழ்விலிருந்து, இறைசேவை வாழ்விற்காக மீண்டும் பிறந்தார். நமக்கும் ஞாணஸ்நாணம் மறுபிறப்பை கொடுக்கிறது. உங்கள் வாழ்வில் நீங்கள் மறு பிறப்பை எடுக்கும்போது, நீங்கள் மணம் வருந்தி, மன்னிப்பை பெற வேண்டுமா? கடவுள் உங்கள எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ, அதற்கு தயார் படுத்தி கொள்ள வேண்டும். இறை சேவைக்கும் நம்மை ஆயத்தமாக்கி கொள்ள வேண்டும்.
திருச்சபையின் இவ்வருட வாழ்வை தொடங்கும்போது, நாம் நமது ஞாணஸ்நாண மறுபிறப்பில், நமது பொறுப்பை உறுதி செய்து, நம்மையே சுத்த படுத்தி கொண்டு, பரிசுத்த வாழ்விலும், இறைசேவையிலும், நாம் கிறிஸ்துவை பின் செல்பவர்களாக :
சாத்தானை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் செயல்களை எதிர்க்கிறீர்களா?
சாத்தானின் பொய் வாக்குறுதிகளை எதிர்க்கிறீர்களா?
கடவுளை விசுவசிக்கிறீர்களா?
எல்லாம் வல்ல கடவுள், இப்பூமியையும் , வானத்தையும் படைத்த கடவுளை ஏற்று கொள்கிறீர்களா?
தந்தை கடவுளின் ஒரே மகனான கிறிஸ்துவை நம்புகிறீர்களா? கன்னி மரியாளின் மூலம் பிறந்தவரும், சிலுவையில் அறையப்பட்டு, மரித்து, நல்லடக்கம் செய்யபட்டு, மீண்டும் உய்ரித்தெழுந்து, கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து இருக்கும் கிறிஸ்துவை விசுவசிக்கீறீர்களா?
பரிசுத்த ஆவியை நம்புகிறீர்களா? பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை நம்புகிறீர்களா? புனிதர்களின் பட்டத்தை நம்புகிறீர்களா? பாவ மன்னிப்பை விசுவசிக்கிறீர்களா ? மறு பிறப்பை நம்புகிறீர்களா? நித்திய வாழ்வை நம்புகிறீர்களா?
இந்த ஜெபத்தை பின் வருமாறு சொல்லுங்கள்:
அன்பு கடவுளே, நாம் பாவி, உன்னையே என் வாழ்வில் முதல்வனாக வைக்க பல்வேறு சமயங்களில் மறந்தும் ஒதுக்கியும் வைத்து விடுகிறேன். என்னை மன்னியும், என்னை மாற்றும், என்னை புதுப்பித்தருளும், உணமையாகவே, நீங்கள் என் கடவுளாக வாழ்நாள் முழுது இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இயேசு அவரது வாழ்வை தந்தையின் கைகளில் சமர்பித்தது போல், யோவான் ஞாணஸ்நாணத்தில் தன்னை அர்ப்பணித்தது போல, நானும் செய்கிறேன். என்னையும் உன்னிடம் ஒப்படைக்கிறேன். ஆமென்!.
கடவுள் இதற்கு மறுமொழியாக:
' என் அன்பார்ந்த மகன்/மகழ் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று சொல்வார்.
© 2011 by Terry A. Modica

No comments: