Friday, December 14, 2012

டிசம்பர் 16 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

டிசம்பர் 16 2012, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
திருவருகை கால 3ம் ஞாயிறு

Zephaniah 3:14-18a
Isaiah 12:2-6
Philippians 4:4-7
Luke 3:10-18
லூக்கா நற்செய்தி

http://www.arulvakku.com/images/dot.jpgஅதிகாரம் 3
 திருப்பணிக்குத் தயார் செய்தல்
திருமுழுக்கு யோவான் முழக்கமிடுதல்


10 அப்போது, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.11 அதற்கு அவர் மறுமொழியாக, ' இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும் ' என்றார்.12 வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, ' போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்? ' என்று அவரிடம் கேட்டனர்.13 அவர், ' உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள் ' என்றார்.14 படைவீரரும் அவரை நோக்கி, ' நாங்கள் என்ன செய்ய வேண்டும்? ' என்று கேட்டனர். அவர், ' நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள் ' என்றார்.15 அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, ' நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.17 அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார் ' என்றார்.18 மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்
(thanks to www.arulvakku.com)
திருவருகை காலத்தின் 3ம் வாரமான இன்று, நமது கவனத்தை மகழ்ச்சியான மண  நிலையை கொண்ட வாராமாக , சந்தோசத்துடன் நமது கவனத்தை, நோக்கத்தை குழந்தை யேசுவின் திருவருகைக்காக காத்திருப்போம். இந்த சந்தோச தருணங்கள் நமது விசுவாசத்திற்கு இன்றியமையாதது. எல்லா வாசகங்களும், நற்செய்தியும், முழு மகிழ்ச்சையையும், சந்தோசத்தையும், காத்திருத்தலையும்  நமக்கு சொல்கிறது. நற்செய்தி வாசகத்தில், யோவான் மக்களுக்கு நற்செய்தியை தமது பேச்சில் குறிப்பிடுகிறார். மெசியா வருவதை அவர் அறிவிப்பில் தெரிந்து கொண்டு, அவர்கள் அனைவரும் மண நிறைவுடனும், சந்தோச எதிர்பார்ப்பும் அடைந்தனர்.

சந்தோசமாக இருப்பது ஒரு இறைசேவை என்று உங்களுக்கு தெரியுமா? நமது விசுவாசத்தை பகிர்ந்து கொள்ள இது ஒரு முக்கியமான வழியாகும். கலக்கமும், நம்பிக்கையின்மையும் உள்ள இடத்தில், நாம் மகிழ்ச்சியை கொண்டு செல்ல நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

யோவான் எவ்வாறு இந்த சந்தோசத்தை, அதன் இறைசேவையை நிறைவேற்றினார் என்பதை பார்ப்போம். ஒட்டக தோலை அனிந்து கொண்டு, வீர வசனமாக அவர் ப்ரசங்கம் செய்து பாவத்திலிருந்து மீண்டு வாருங்கள் என்று சொல்லும்பொழுது அவர் சந்தோசமாகவே இருந்தார் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்னும் உற்று  நோக்கி அவர் இறைசேவையை பார்த்தோமானால், இயேசுவை வரவேற்க மக்களின் இதயத்தை தயார்படுத்தினார்.

கடவுள் மேல் விசுவாசத்துடன் இருப்பது, அவரிடம் நம்பிக்கை வைத்து , எதிர்பார்ப்போடு, சந்தோசத்தில் காத்திருப்பதற்கு ஒப்பாகும். உங்களிடமோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர் ஒருவர் மகிழ்ச்சியற்று இருப்பது, இயேசுவை இன்னும் முழுமையாக, நீங்கள் அழைக்காமல் இருக்கிறீர்கள். உங்கள் கஷ்டம் இப்பொழுதுதான் ஆரம்பித்திருக்கும் அல்லது, உங்கள் விசுவாசம் குறைவானதாக இருக்கலாம், அதனை இன்னும் உறுதியாக்கவேண்டும்.

நாம் கொண்டுள்ள விசுவாசத்தில் மகிழ்ச்சியடைய, கடவுளின் அன்பினை தேடி,  நம் கஷ்டமான நேரத்தில், கடவுளின் ஆறுதலை பெற்று, அவரது அரவனைப்பில் இருந்தால், நாம் விசுவாசத்தில் சந்தோசத்துடன் இருப்போம். இயேசுவின் போதனைகளில் மகிழ்ச்சியோடு இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளதையும், இயேசுவின் சந்தோசத்தையும் நாம் அறிந்து கொண்டால், நம்மில் இந்த விசுவாச மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

நம் முயற்சிகளில், இன்னும் ஒரு அடி அதிகம் எடுத்து வைக்க வேண்டும் என்று இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். பகைவரையும் அன்பு செய்வது, நமக்கு கஷ்டத்தை கொடுப்பவர்களுக்கு நல்லது செய்வது போன்றவை நமக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை தராது. நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், பரிசுத்த வாழ்வை எப்படி வாழ்வது என்று அறிந்து அதன் படி வாழ்ந்து , அதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஆகும். இது நமக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இல்லை என்றாலும், இது தான் இயேசுவின் சந்தோசத்துடனும், சந்தோசத்திற்காக இயேச் நமக்கு கூறியதையும், நம்மோடு ஒன்றினைக்கும்.  சிலுவையை ஏற்று கொள்வது கூட சந்தோசமான முடிவை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல செய்தி: எப்படி பரிசுத்தமாக இருப்பது என்று இயேசு நமக்கு சொல்லவில்லை. நாம் பரிசுத்தமாக இருக்க தேவையான ஆற்றலை நமக்கு இயேசு கொடுத்துள்ளார். அவரது பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்துள்ளார். மற்றவர்கள் நம்மில் பரிசுத்த ஆவியின் செயலை பார்த்தால், இது இயேசுவினால் தான் நாம் மகிழ்வோடு இருக்கிறோம் என்று அவர்கள் அறிந்து கொண்டால், நம் விசுவாசத்தின் மூலமாக அவர்கள் மணம் மாற்றமடைந்துள்ளார்கள்.
© 2012 by Terry A. Modica


No comments: