Friday, March 8, 2013

மார்ச் 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை



மார்ச் 10, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 4ம் ஞாயிறு
Jos 5:9a, 10-12
Ps 34:2-7
2 Cor 5:17-21
Luke 15:1-3, 11-32

லூக்கா நற்செய்தி
காணாமற்போன ஆடு பற்றிய உவமை
(மத் 18:12 - 14)
1 வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர்.2 பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ' இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே ' என்று முணுமுணுத்தனர்.3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
காணாமற்போன மகன் உவமை
11 மேலும் இயேசு கூறியது: ' ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.12 அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, ' அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும் ' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்.13 சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார்.14 அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்;15 எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார்.16 அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.17அவர் அறிவு தெளிந்தவராய், ' என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே!18 நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19 இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன் ' என்று சொல்லிக்கொண்டார்.20 ' உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அந்தத் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.21 மகனோ அவரிடம், ' அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன் ' என்றார்.22 தந்தை தம் பணியாளரை நோக்கி, ' முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்;23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம்.24 ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.25 ' அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26 ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, ' இதெல்லாம் என்ன? ' என்று வினவினார்.27 அதற்கு ஊழியர் அவரிடம், ' உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார் ' என்றார்.28 அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார்.29 அதற்கு அவர் தந்தையிடம், ' பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை.30 ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! ' என்றார்.31 அதற்குத் தந்தை, ' மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே.32 இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான் ' என்றார். '
(thanks to www.arulvakku.com)

கடவுளின் அன்பையும், நிபந்தனையற்ற மன்னிப்பையும் பெற யாரெல்லாம் தகுதி உள்ளவர்கள்? ஒவ்வொரு திருப்பலியிலும் “ஆண்டவரே உன்னை பெற நான் தகுதியற்றவன், என்றும் மேலும், “ஒரு வார்த்தை சொல்லியருளும் எனது ஆண்மா குணமடையும்” என்று சொல்கிறோம். இயேசு இன்றைய நற்செய்தியில் நாம அனைவருமே தகுதியானவர்கள் என்று காட்டுகிறார். நாம் செய்யும் செயல்களால் அல்லாமல், இயேசு சிலுவையில் செய்த தியாகத்தினால் நாம் கடவுளின் மன்னிப்பை பெறுகிறோம். இயேசு சிலுவையில் நம் பாவங்களை ஏற்று கொண்டு, சிலுவை மரணம் அடைந்து, நாமும் அவரோடு உயிர்த்தெழுந்து,  நிலைவாழ்வுடன் ஈஸ்டரில் கடவுளொடு இனைவோம்.

இன்றைய நற்செய்தியில் வரும் நீதிகதையில், மகன் தந்தையிடம் திரும்பி வந்ததாலோ, அல்லது மகன் மனம் திருந்தியதாலோ, தந்தையின் அன்பை பெற தகுதியுள்ளவானாக ஆகிவிடவில்லை. மாறாக, தந்தை அவன் மேல் கொண்டுள்ள அன்பினால் தான் அவனை வரவேற்றார்,. தந்தை மகன் மேல் அன்பு கொண்டிருந்தார். மகன் வெகு தூரத்தில் இருக்கும்போதும், அவன் மேல் அன்பு கொண்டிருந்தார். அவன் பாவ வழியில் செல்லும்பொழுதும் அவன் மேல் தந்தை அன்பு கொண்டிருந்தார்.

நிபந்தனையற்ற, விசுவாசமான தந்தையின் அன்பை, மகனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார், ஆனால் மகனோ, அதனை நிராகரித்து விட்டார். மகன் தந்தைக்கு கொடுத்த அன்பளிப்போ, தந்தையிடம் திறந்த மனதுடன் திரும்பி வந்து, தந்தை அவன் மேல் கொண்ட அன்பை, எப்பொழுதும் இருக்கு அன்பை பெற்று கொள்வது தான்.

ஒவ்வொரு திருப்பலியிலும், இந்த ஊதாரியான மகனை போல தான் நாமும் கோவிலுக்கு செல்கிறோம். அந்த வாரம் முழுதும்,  நல்ல கிறிஸ்தவர்களாக நாம் இருந்திருந்தாலும், நாம் பாவியாக தான் கோவிலுக்குள் செல்கிறோம். ஏதோ ஒரு தருணத்தில், கடவுளின்  நிபந்தனையற்ற முழுமையான அன்பை நாம் நிராகரித்திருக்கிறோம். அதனை நாம் மற்றவர்களிடம் பகிராமல் கூட இருந்திருக்கலாம். அதனால் தான், திருப்பலியின் ஆரம்பத்தில், நாம் நமது பாவத்தை மன்னிக்க வேண்டுகிறோம். இந்த மன்னிப்பு கோரும் வாய்ப்பை மனப்பூர்வமாக உளமார பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அடுத்ததாக, நாம் இறைவார்த்தையை கேட்கிறோம். இறைவார்த்தைகள், கடவுளடான நமது உறவில் உள்ள காயங்களை ஆற்றுகிறது. ப்ரசங்கம் இதனை இன்னும் மேன்மைபடுத்துவதாக தயாரிக்கபடவேண்டும். அப்படி இல்லை என்றாலும், இயேசு பரிசுத்த ஆவியின் மூலம் நம்மிடையே பேசுகிறார். உங்கள் இருதயத்தை கவனியுங்கள், வார்த்தை உருவானவர், இயேசு உங்கள் கோரிக்கையை ஏற்கனவே கேட்டு, அதற்கு பதிலை கொடுக்க தயாராகிவிட்டார். அவரின் நற்செய்தி உங்களை குணமாக்குகிறது.

காணிக்கை நிகழ்ச்சியில், நாம் நம்மையே தந்தை கடவுளிடம் அர்ப்பணிக்கிறோம். இந்த தருணத்தில் நாம் அவரிடம் சரணடைகிறோம்: “உங்கள் மகன் என்று அழைக்க நான் தகுதியற்றவன், உங்கள் விருப்பம் போல என்னை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி செய்யுங்கள்” என்று அவரிடம் மன்றாடுகிறோம்.  நம் முழுமையான வாழ்க்கைக்கு கடவுளின் விருப்பம் என்ன? நம்மிடம் உள்ளதை கொடுத்தும், அவரிடம் பெற்றுகொள்வதுமாக நம் உறவு கடவுளோடும் , அவரின் குடும்பத்தோடும் இருக்க வேண்டும். அந்த குடும்பம், இந்த திருச்சபை. (சிலர் நேரடியாக திவ்ய நற்கருணை பெற முடியாமல் இருந்தால், அவர்கள் ஆவியுடன் இணைவார்கள்).

© 2013 by Terry A. Modica

No comments: