Friday, March 15, 2013

மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


மார்ச் 17, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
தவக்காலத்தின் 5ம் ஞாயிறு
Isaiah 43:16-21
Ps 126:1-6
Phil 3:8-14
John 8:1-11
யோவான் நற்செய்தி
அதிகாரம் 8 (1-11)
1 (இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.2 பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.3 மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,4 ' போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.5 இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டனர்.6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.7 ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, ' உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் ' என்று அவர்களிடம் கூறினார்.8 மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.10 இயேசு நிமிர்ந்து பார்த்து, ' அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா? ' என்று கேட்டார்.11 அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம், 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தி, மிகவும் தாழ்ந்த நிலையில் சமூகத்தில் உள்ளவர்களை எப்படி கையாளவேண்டும் என்பதை நமக்கு காட்டுகிறது. வாழ்வதற்கே தகுதியில்லாதவர் என சமூகத்தால் ஒதுக்கிவிடப்படுபவர் ஒருவர் இன்று கிறிஸ்துவின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்றுள்ளார். ஆனுக்கு கீழாக மதிக்கப்படும் பெண்களில், இப்பெண் இயேசுவின் இரக்கத்தை பெற்ற முதல் பெண்ணாகிறாள். அவள் ஒரு பாவி, அதனால் அவருக்கு தண்டனை கொடுக்கபடவேண்டும். அவளை கண்டித்த அனைவரையும் ஒரே ஆளாக எதிர் கொண்டு இருந்தாள். இதனை விட ஒருவர் எவ்வளவு தாழ்ந்து விட முடியும்.?

முக்கியமானவராக இல்லாமல், அல்லது தனித்து விடப்பட்டவராக எப்பொழுது எல்லாம் நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்? உங்களை சமூகமே கண்டித்த தருணங்கள் இருந்திருக்கலாம். மேலும், நீங்கள் யாரையாவது, அவர்கள் முக்கியமற்றவர்களாக நினைத்து ஒதுக்கியிருக்கிறீர்களா? இதுவும் சரியே, நம்மில் யாரும் முதல் கல்லை எறிய முடியாது.

இன்றைய திருச்சபையில், நிறைய பேர் ஒதுக்கி வைக்கபட்டும், மறக்கடிக்கபட்டும் இருக்கிறார்கள். நமக்கு அவர்களில் சிலரை தெரியும். அவர்களின் தனிமை நமக்கு தெரியாமல் போகிறது. நாம் நம் கடைமைகளில் மூழ்கியிருக்கும்போது, அதனிடையே, நாம் அவர்களை சந்தித்து, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நமக்கு அது ஒரு உற்சாகமான உணர்வை கொடுக்கிறது.  நாம் அவர்களோடு செலவிடும் நேரம், அவர்களின் தேவையைவிட பெரிதாக மதிக்கபடுகிறது. மேலும், நமது பங்கிற்கு இன்னும் ஒரு ஆள் கூடுகிறது, நம் சுகத்தை தியாகம் செய்வதால், திருச்சபை இன்னும் பலம் பெறுகிறது.

விவாகரத்தான கத்தோலிக்கர்களை எல்லோரும் கண்டிக்கிறார்கள் என்று அவர்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். திவ்ய நற்கருணையை கூட அவர்கள் ஒதுக்கிவிடுகிறார்கள். ஏனெனில், திருச்சபையின் சட்டத்தை அவர்களுக்கு தவறுதலாக புரியவைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் யாரும் அவர்களை அனுகி அவர்களை திருச்சபைக்கு கொண்டு வர முயல்வதில்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்க்களை திருச்சபையில் நிறுத்தினாலும், பெரியவர்களுக்கு எதிரான அநீதியை யாரும் சட்டை செய்யவில்லை. ஏனெனில், அதனை யாரும் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை.

சில நேரங்களில் சமயம் சாராத நிறுவனங்கள் சமூகத்தின் கீழ் நிலையில் உள்ளவர்களை அனுகி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் அதே போல், அவர்களை அனுகி , அவர்களுக்கு தேவையானவற்றை கொடுப்பது, இத்தவக்காலத்தின் முக்கிய செயலாக இருக்ககூடும்.

© 2013 by Terry A. Modica

No comments: