Friday, April 26, 2013



ஏப்ரல் 28, 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஈஸ்டர் காலத்தின் 5ம் ஞாயிறு
Acts 14:21-27
Ps 145:8-13
Rev 21:1-5a
John 13:31-35
 

யோவான் நற்செய்தி
புதிய கட்டளை
31 அவன் வெளியே போனபின் இயேசு, ' இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார்.32 கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.33 பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.34 ' ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.35 நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)

நீங்கள் மரணம் அடைய போகீறீர்கள் என்று தெரிந்தால், உங்கள் அன்பானவர்களுக்கு என்ன அறிவுரை உங்களின் கடைசி நேரத்தில் வழங்குவீர்கள்? உங்களிடமிரிந்து அவர்கள் கற்று கொள்ள கூடிய முக்கியமான விசயம் என்ன?

இன்றைய ஞாயிறின் நற்செய்தியில், இயேசுவிற்கு அவரது காலம் குறைவு என்பது தெரியும். முதலில் அவரது நண்பர்கள் அனைவரிடமும், தந்தை கடவுளுக்கு புகழ் கூறி ஆரம்பிக்கிறார். அதே  நேரத்தில்,   தந்தை கடவுளும் அவரும் ஒன்றே என்பதையும் குறிப்பிடுகிறார். அவரது நண்பர்களை பிள்ளைகளே என்றும் கூறுகிறார், தந்தை கடவுள் போல அவர்களை கூப்பிடுகிறார். தந்தை கடவுளோடு அவரும் ஒன்றானவர் என்பதை இதன் மூலம் விளக்கமாக நமக்கு தெரிவிக்கிறார். இதனை மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கிறார்.  தந்தை கடவுளுக்கும் , மீட்பர் மகனுக்கும் இடையே உள்ள கோடு நமக்கு புரிவதில்லை. இதையே அவர் வேறு மாதிரியாக சொல்லியிருக்கலாம் , “ நான் தெய்வம், நான் தான் கடவுள், என்னை ஆராதியுங்கள் “ என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால், அவர் கடவுளின் புகழை மேன்மைபடுத்துவதில் குறியாய் இருந்தார்.

கடவுளின் ப்ரசன்னம் மூலம் , அவர் புகழொளி எங்கும் வீசுகிறது. அதில், அவரின் அன்பு, புனிதம், அமைதி, ஞாணம், அவரின் படைப்பு மேலும் அவரின் எல்லாமும், அங்கே  நிறைந்திருக்கிறது, அந்த புகழொளியில் நாம் முழுதும் குளித்து அவரின் ஆசிர் பெறலாம். அவரை நாம் மகிமைபடுத்தும்பொழுது, நாமும் புகழொளியை கடவுளுக்கு திருப்பி அனுப்ப்புகிறோம். அவரின் புகழொளி உங்களில் எந்த அளவிற்கு ஒளிர்கிறது.?


தந்தை கடவுளுக்கும், மகன் சுதனுக்கும் புகழொளி ஒருவருக்கொருவர் மகிமைபடுத்திய பின்பு, யேசு அவரின் சீடர்களுக்கு, அவரின் உல்க, தெய்வீக ஞாணத்தை அளித்தார். இயேசுவின் புகழொளியில், நாம் சேர்வதற்கு, நாம் இயேசு அன்பு செய்வது போல நாமும் அன்பு செய்ய வேண்டும்.

சுய நலமின்றி மற்றவர்களுக்கு நாம் செலுத்தும் அன்பே, உண்மையாகும். யேசு சுய நலமின்றி அவரை முழமையாக , அவரது இறப்பை நமக்கு கொடுத்தார். குருக்களும், சீடர்களும், இயேசுவை பின் செல்பவர்களும், திருச்சபையின் தலைவர்களும், உண்மையான அன்புடன் அவர்கள் இறைசேவை செய்ய வில்லை என்றால், அவர்கள், உண்மையான குருக்களோ, திருச்சபையின் தலைவர்களோ, சீடர்களாகவோ இருக்கமுடியாது.

தியாகத்துடனும், முழுதுமாக கொடுக்கப்பட்ட அன்பு தான் கடவுளின் அன்பாகும், அது தான் கடவுளின் புகழ் ஓளியாகும். ஈஸ்டர் காலத்தில், இன்றைய நற்செய்தி, ஏன் பாடுகளை பற்றி வாசிக்கிறார்கள்?  மற்ற வாசகங்களோ ஈஸ்டர் காலத்தை பற்றியது. “ இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (Rev 21:5a)  இருந்தாலும்,  இயேசு, துரோகத்தையும், துன்பத்தையும், மரணத்தையும் தாங்கி கொள்ள தயார் படுத்தி கொண்டிருந்தார். ஏன்? கடவுள் புகழை நாம் இயேசுவை தொடர்ந்து அவரின் திருப்பணிகள் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.  அதற்கு இயேசு அவரது ஞாணத்தை சீடர்களுக்கு கொடுக்கிறார். தியாகத்தோடு, நாம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து, இயேசு உண்மையானவர்  என்று உலகிற்கு அறிவிப்போம். அவர் உயிர்த்தெழுந்துவிட்டார், நம்மில் வாழ்கிறார்.

© 2013 by Terry A. Modica

No comments: