Saturday, June 29, 2013

ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூன் 30, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 13ம் ஞாயிறு

1 Kings 19:16b, 19-21
Ps 16:1-2, 5, 7-11
Gal 5:1, 13-18
Luke 9:51-62

லூக்கா நற்செய்தி
அதிகாரம் 9: 51-62
5. எருசலேம் நோக்கிப் பயணம்
இயேசுவை ஏற்றுக்கொள்ள மறுத்த சமாரியர்
51 இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து,52 தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.53 அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள்.55 அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.56 பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்கள்
(மத் 8:19 - 22)
57 அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, ' நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.58 இயேசு அவரிடம்,' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.59இயேசு மற்றொருவரை நோக்கி, ' என்னைப் பின்பற்றிவாரும் ' என்றார். அவர், ' முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும் ' என்றார்.60 இயேசு அவரைப் பார்த்து, ' இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும் ' என்றார்.61 வேறொருவரும், ' ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும் ' என்றார்.62 இயேசு அவரை நோக்கி, ' கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல ' என்றார்.
(Thanks to www.arulvakku.com)

உங்களை யாராவது  நிராகரீக்கும்  பொழுது, அதனை எப்படி கையாள்வீர்கள்? இன்றைய ஞாயிறின் நற்செய்தி, சீடர்கள் எப்படி அவர்களுக்கு ஏற்படும் மறுத்தலை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கிறோம். இயேசுவிற்கு முன் சமாரியர்களின் ஊருக்கு செல்கிறார்கள். ஏனெனில், இயேசு அவர்களிடம் கூறி மக்களை சந்திப்பதற்கு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். ஆனால் சமாரியர்களோ, இயேசு எருசலேம் செல்லவிருப்பதை தெரிந்து கொண்டு, இயேசுவை வரவேற்க அவர்கள் தயாராகவில்லை. இயேசு அங்கேயே தங்கினாலும் தங்குவார் என்ற எண்ணத்திற்கு அவர்கள் இதயத்தில் விதைக்காமல் மூடிவிட்டார்கள். அதனால் மெசியாவுடன் அருகில் இருக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டனர்.

உங்களுக்கு மிகவும் நெருங்கிய ஒருவர், இயேசுவை அவர்களுக்கு கொண்டு வர செய்யும் எல்லா முயற்சிகளுக்கும் நிராகரிப்பை கொடுத்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள்?   நீங்கள் சொல்வதை யாரும் காது கொடுக்க கேட்கவில்லையென்றால், உங்கள் எண்ணம் எண்ணவாக இருக்கும்.? அல்லது திருச்சபையின் போதனையை நீங்கள் விளக்கி சொல்ல முற்படும்பொழுது, அவர்கள் அதற்கு புரிந்து கொள்ளவில்லையென்றால்?


நம்மை போலவே, இயேசுவுடன் சென்ற சீடர்களும்,  நிராகரிப்புகளை விரும்பவில்லை. இயேசுவின் நெருங்கிய சீடர்கள் ஜேம்ஸும், ஜானும், இயேசுவிற்கு உதவி செய்வது போல, “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா? ' என்று கேட்டார்கள். இயேசு அவர்களீடம் ஏற்கனவே, யாராவது உங்களை நிராகரித்தால், உங்கள் காலனிகளில உள்ள தூசை தட்டிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இயேசு என்ன சொன்னாரோ, அதனை தன் வாழ்வில் கடைபிடித்தார். அந்த சமாரியர்களிடமிருந்து, ஒதுங்கி வேறு இடத்திற்கு  சென்றார்.  இயேசுவின் நம்பிக்கைகளை, அந்த கிராமத்தினரிடம் தினிக்க விரும்பவில்லை. அவர்களுக்கு தேவையான  நீதிகளை இயேசுவால் போதித்திருக்க முடியும்.  ஆனால் இயேசு அதனை செய்யவில்லை.

இயேசுவின் பின் செல்ல நாம் அதிகம் விட்டு கொடுக்க வேண்டும். நம்மை நிராகரிப்பவர்களின் மேல், உள்ள கோபத்தையும், விட்டு விட வேண்டும்.  நம் எண்ணத்திற்கு, நாம் ஏன் கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்.? நம் காலணிகளில் உள்ள தூசை தட்டிவிடுவது என்றால், நமது மகிழ்ச்சியை, குலைக்கும் எதையும்  நாம் தூர எறிந்துவிட வேண்டும்.


இந்த நற்செய்தியின், முடிவில், இயேசு, அவரை பின் செல்வது என்பது முன்னோக்கி தான் பார்க்கவேண்டும், திரும்பி பார்க்க கூடாது. என்று கூறுகிறார். நாம் எப்பொழுதுமே, ஏதாவது ஒரு இடத்தில் இருந்து ஒதுங்கி , நிராகரிப்பிலிருந்திலிருந்து, அன்பில்லாதவர்களிடமிருந்தும், தனது இதயத்தை மூடியே வைத்திருப்பவர்களிடமிருந்தும். விலகியே செல்ல விரும்புகிறோம். அங்கிருந்து விலகி கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்க செல்கிறோம்.

முன்னோக்கி செல்ல, பரிசுத்த ஆவிதான் நமது இதயத்தை தயார் செய்து, இயேசுவை நம்மில் வரவேற்க ஆயத்துபடுத்துவார் என்பதை நினைவில் கொள்வோம். நாம் சிலருக்கு இயேசுவை கொண்டு வர, முயற்சி செய்து, அதில் தோற்றால், உண்மையிலேயே, நாம் தோற்கவில்லை, இப்பொழுது தான் நாம் விதையை விதைக்கிறோம், பரிசுத்த ஆவியானவர், அறுவடை செய்யும் வேலையை செய்யட்டும், நாம் அடுத்த வயலுக்கு செல்வோம்.

© 2013 by Terry A. Modica


No comments: