Saturday, July 6, 2013

ஜுலை 7 , 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 7 , 2013 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14ம் ஞாயிறு
Isaiah 66:10-14c
Ps 66:1-7, 16, 20
Gal 6:14-18
Luke 10:1-12, 17-20

லூக்கா நற்செய்தி,
அதிகாரம் 10:1-12, 17-20
எழுபத்திரண்டு சீடர்களை அனுப்புதல்
1 இதற்குப்பின்பு ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.http://www.arulvakku.com/images/footnote.jpg2 அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: ' அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.3 புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன்.4 பணப்பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.5 நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ' இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! ' என முதலில் கூறுங்கள்.6 அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும்.7 அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடுவீடாய்ச் செல்ல வேண்டாம்.8 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்.9அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.10 நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று,11 ' எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள் ' எனச் சொல்லுங்கள்.12 அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விட கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன். 
எழுபத்திரண்டு சீடர்களும் திரும்பிவருதல்
17 பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பிவந்து, 'ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன' என்றனர்.http://www.arulvakku.com/images/footnote.jpg18 அதற்கு அவர், ' வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.19 பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது.20ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதுபற்றி மகிழவேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் ' என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு “' அறுவடை (கிறிஸ்துவிடம் மனம் மாறுதல்)  மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் (தந்தை கடவுள்) மன்றாடுங்கள்.3 “ என்று கூறி “ புறப்பட்டுப் போங்கள்;” என்று அவர்களை ஒவ்வொரு ஊராக அனுப்புகிறார்.

கத்தோலிக்க திருச்சபையில், மனம் மாற்றுபவர்களை பற்றி நீங்கள் நினைக்கும்போது, யார் உங்கள் மனதில் முதலில் வருவது? நிறைய பேர் குருக்களை நினைக்கிறார்கள்? நாம் எல்லோரும் குருக்கள் இன்னும் அதிகம் தேவை என நினைக்கிறோம்.  மேலை நாடுகளில் வயதான குருக்களை ஓய்வு கொடுத்து விட்டு, அவர்களுக்கு பதிலாக இளம் குருக்கள் நிறைய பேர் வருவதில்லை.

அதிக குருக்கள், கன்னியர்கள் தேவை என நீங்கள் ஜெபிப்பது உண்டா? ஆனால் அது இயேசு நம்மை செய்ய சொல்லும் பல வேலைகளில் அதுவும் ஒன்று. “உங்கள் வழியில் செல்லுங்கள்” என்று நம் எல்லோரையும் அழைத்து சொல்கிறார். உங்கள் ஆற்றலை, திறமைகளை, சாமார்த்தியத்தையும் உபயோகிங்கள் என்று யேசு கூறி, அறுவடைக்கு முடிந்த வரை உதவுங்கள். என்றும் கூறுகிறார். இயேசு என்றுமே ஒன்று கூடி வேலை செய்வதில் உறுதியாக உள்ளவர். நாம் எல்லாம் ஒன்று கூடினால் தான் திருச்சபையின் இன்றைய தேவைகளை  நாம் நிறைவேற்றா முடியும். – குருக்கள், மத சேவகர்கள்,மற்றும் பொதுமக்கள்- ஒன்று சேர்ந்து இறைசேவை செய்யும்பொழுது, நம் எல்லோரின் திறமைகளும் ஒன்று சேர்ந்து, தாழ்மையுடன் ஒருவருகொருவர் உதவி செய்து, இறையாட்சியை கொண்டு வர முடியும்.


இந்த போதுமான அளவை நாம் அடைவதற்கு, “மற்றவர்கள் பார்த்து கொள்வார்கள்” என்ற மன நிலையிலிருந்து நாம் மாற வேண்டும். “எல்லாமே சரியாக இருக்க வேண்டும்” என்ற மனப்பான்மையும் அகல வேண்டும். “நானே இதனை இன்னும் சரியாக செய்வேன்” என்று மனப்பான்மையும் போக வேண்டும். இது மற்றவர்கள் இறைசேவையில் ஈடுபட தடுப்பாக இருக்கும்.

நான் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும்” என்ற மனப்பான்மையுடன் இருப்பவர்கள் அனைவரும் அதனை மாற்றி கொள்ள வேண்டும். இதனால் என்ன ஆகும் என்றால், திறமையான வேலையாட்களை நாம் துரத்தி விடுவதாக ஆகிவிடும். இயேசு, நாம் எதையும் எடுத்து செல்ல கூடாது என்று கூறுகிறார். அதே போல், அங்கே கிடைப்பவற்றை ஏற்றுகொள்ள வேண்டு.

ஒன்று கூடி வேலை செய்யும் பொழுது, நமது ஜெபம் அதிக குருக்கள் கிடைக்க வேண்டும்பொழுது, கண்டிப்பாக கிடைக்கும். குருவானவர்களும், கன்னியர்களும், நமக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கின்றனர். அதன் மூலம், இன்னும் பலர் ஈர்ப்புடன் இறைசேவைக்கு செல்கின்றனர். அதே போல், குருக்கள் அல்லாதவர்களும், குருக்களை போல அதே, உணர்வுடனும், வெற்றியுடனும், ஈடுபடவேண்டும். ஏனெனில், பரிசுத்த குருவானவர்கள், நமக்கு சேவை செய்கிறார்கள், நாம் அவர்களுக்கு சேவை செய்தல் வேண்டும்.
© 2013 by Terry A. Modica


No comments: