Friday, August 9, 2013

ஆகஸ்டு 11, 2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஆகஸ்டு 11,  2013, ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
Wisdom 18:6-9
Psalm 33:1, 12, 18-22
Hebrews 11:1-2, 8-19
Luke 12:32-48

லூக்கா நற்செய்தி (12:32-48)
' 32 ' சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார்.33 உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை.34 உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
(மத் 24:45 - 51)
35 உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும்.36 திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள்.37 தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.38 தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள்.39 எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள்.40 நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். ' 41 அப்பொழுது பேதுரு, ' ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா? ' என்று கேட்டார்.42 அதற்கு ஆண்டவர் கூறியது: ' தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்?43 தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர்.44 அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன்.45ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில்46 அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான்.48ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.
(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், “உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். “ என்று சொல்கிறது இந்த ஆட்சி, நித்திய வாழ்வையும் இனைத்தே கூறப்படுகிறது. மேலும் கடவுளின் முழு அன்பும், இவ்வுலகில் உள்ள அனைத்து நல்லவைகளையும் இனைத்தே கடவுள் எல்லாவற்றையும் அனைவருக்கும் கொடுக்க ஆசைபடுகிறார்.

அடுத்து, இயேசு: “கடவுளின் அன்பை, தாராள குணத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளூம் வாய்ப்பை விட்டு விட்டு, இவ்வுலக பொருட்கள், செல்வத்தின் மேல் நாம் மதிப்பு வைத்திருந்தால், உங்கள் கையில் ஒன்றுமில்லாமல் போகும், உங்கள் பணப்பையில் இவ்வுலக நோக்கம் நிறைந்த்திருந்தால், அது கடவுளை நம்மை விட்டு விலகச் செய்யும். நமது சுய நலத்தினால், மற்றவர்களை விலக்கி விடுகிறோம். அல்லது, கடவுளுக்கு எதிரான தொடர்பில் இருப்பதால், அது நம்மை பரிசுத்த வாழ்வில் இருந்து விலக்கி விடுகிறது. இதனால், கடவுளின் நித்திய வாழ்வின் அன்பளிப்புகளை, கொடைகளை, நாம் பெறுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. “உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.
“ என்று கூறுகிறார்.

கடவுளுக்கு தேவையில்லாத எதுவும், இறுதியில், ஒன்றுமில்லாமல் போகும்.ஏனெனில், இவைகள் நம்மை கடவுளோடு இனைக்க போவதில்லை. மேலும், நாம் மோட்சத்திற்கு செல்ல முடியாது. கடவுளுக்காக நாம் அனைத்தையும் விட்டு கொடுத்தல் வேண்டும்.

எல்லா சொத்துக்களையும், விற்று விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. அந்த செல்வத்தின் நோக்கம் என்ன என்பது தான் முக்கியம். அவைகளெல்லாம் இறையாட்சிக்கு உதவி செய்கிறதா? அல்லது நம் இவ்வுலக ஆசைகளுக்காக இருக்கிறதா? என்பதே கேள்வி.

கடவுளோடு இனைய , அதனை இன்னும் ஆழப்படுத்த எதுவெல்லாம் உதவுகிறதோ, அதெல்லாம் மிகப் பெரிய பொருட்செல்வம் ஆகும். அதனால் நாம் நித்திய வாழ்வை இணைய முடியும். இவ்வுலக பொருட்களூக்காக உங்கள் நேரத்தை வீனாக்காதீர்கள் என்று இயேசு நம்மை எச்சரிக்கை செய்கிறார். எப்பொழுது தலைவர் வருவார் என நமக்கு தெரியாது. அவர் வந்து இவ்வுலகிலிரிந்து , மோட்சத்திற்கு எடுத்து சென்று, கடவுளின் மாளிகையில் நம்மை கொண்டு சேர்ப்பார் என்று தெரியாது. நாம் தயாராக இருக்கிறோமோ? அல்லது இவ்வுலக செல்வத்தில் திளைத்தி இருக்கிறோமோ?

அதனால் தான், கடவுள் மிகுந்த இரக்கத்துடன், நமக்கு உத்தரிக்கிற ஸ்தலத்தை தந்துள்ளார். அங்கே இவ்வுலக பாவங்கள் சுத்தபடுத்தபடும், அது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனை தான் இயேசு பணியாளர்களை , அவர்களின் உழியததலைவன் அடித்ததை ஒப்பிடுகிறார். இது தான் சரியான தருணம், கடவுளீன் இறையாட்சியை நாம் தேர்ந்து கொண்டு, அவரின் அன்பளிப்பை நாம் அடைய வேண்டும்.
© 2013 by Terry A. Modica


No comments: