Saturday, July 26, 2014

ஜூலை 27, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஜூலை 27, 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17ம் ஞாயிறு
1 Kings 3:5, 7-12
Psalm 119:57, 72, 76-77, 127-130
Romans 8:28-30
Matthew 13:44-52

மத்தேயு நற்செய்தி
புதயல் உவமை
44 ' ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.

முத்து உவமை
45 ' வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச் செல்கிறார்.46 விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள் யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.

வலை உவமை
47 ' விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்.48 வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.49 இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்;50 பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். '

முடிவுரை
51 ' இவற்றையெல்லாம் புரிந்து கொண்டீர்களா? ' என்று இயேசு கேட்க, அவர்கள், ' ஆம் ' என்றார்கள்.52 பின்பு அவர், 'ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப்போல் இருக்கின்றனர்என்று அவர்களிடம் கூறினார். 
(thanks to www.arulvakku.com)
இன்றைய நற்செய்தியில், இயேசு விண்ணரசு புதையலுக்கு ஒப்பானது என்று சொல்கிறார். மற்ற எல்லாவற்றையும் விற்று வாங்கப்பட்ட முத்து, மீன் வலையில், நல்ல மீன்களை எடுத்து கொண்டு, தீய மீன்களை வெளியே தூக்கி எறிவார்கள் என்றும் அதனை விளக்கி கூறுகிறார்.

வேறு மாதிரியாக சொல்வதானால், நம் கிறிஸ்துவ வாழ்வு, மிகுதியான செல்வத்தை கொண்டுள்ளது, நம்மிடம் ஒன்றுக்கும் உதவாத பொருள் ஏதேனும் இருந்தால், அதனை,  அகற்றி விட்டு, விலை மதிப்புள்ள பொருளுக்காக தயார் படுத்த வேண்டும். நம்மிடம் மதிப்பான பொருள் சில, தற்காலிக மதிப்புள்ளது, இந்த உலகத்தில் தான் மதிப்பாக இருக்கும். மேலும், அதே பொருட்கள், வின்னரசிற்காக உபயோகபடுத்தப்படும்பொழுது அது உண்மையான மதிப்பை பெறுகிறது.
இரண்டாவது வாசகத்தில், எல்லாம் கடவுளின் அன்பிற்காக இணைந்து செயல்படுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் நம்மிடம் உள்ள தவறான முத்தையும், இறந்த மீன்களையும் தூக்கி எறிந்தோமானால், நாம் தந்தை கடவுளை போல ஆகி விடுவோம். அதன் பிறகு, விண்ணக அரசிற்கு மிகவும் உபயோகமாக இருப்போம். மிகவும் மோசமாக ஏதாவது நமக்கு நடந்தால் கூட, மிக கீழ் தரமான ஆளாக நாம் இருந்தால் கூட , நம்மை எல்லாம் படைத்த , வானாளாவிய இரக்கம் கொண்ட கடவுள் , நம்மையும் நல்ல செயல்களுக்கு உபயோகமாக ஆக்குவார். நல்ல முத்தாக நாம் இருப்போம்.

முதல் வாசகத்தில், சாலமோன் கடவுளிடம் பெரிய சொத்தை கேட்டிருக்கலாம், கண்டிப்பாக கடவுள் அவருக்கு கொடுத்திருப்பார். ஆனால், எல்லாவற்றையும் அறியும் ஞானத்தை கேட்டார். அதன் மூலம் நாட்டை நல்லாட்சி செய்ய முடியும். அவர் ஆட்சி அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும், கூட, மிகவும் ஞானமுள்ள அரசர் ஆள்கிறார் என்றும், மேலும் பல சொத்துக்கள் சேர்த்தார் எனவும் அவர் பெயர் பெற்றார்.
இதன் மூலம் நாம் அறிவது என்ன என்றால், நாம் இறையரசின் செல்வத்தை நாம் தேடினால், இவ்வுலக செல்வத்தை நம்மால் சரியாக உபயோகிக்க முடியும், ஏனெனில், கடவுளின் ஞானம் அவரின் அரசிற்காக இந்த செல்வத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டும். எவ்வளவு அதிகம் நாம் கிறிஸ்துவை அன்பு செய்கிறோமோ , மேலும், அவர் வழியில் செல்கிறோமோ , எது உண்மையான மதிப்புள்ள பொருள், செயல் என்று நம்மால் கண்டு பிடிக்க முடியும். அதன் மூலம் கடவுள் அரசிற்கு எல்லாவற்றையும் உபயோகிக்க முடியும்.
© 2014 by Terry A. Modica


No comments: