Friday, August 8, 2014

ஆகஸ்டு 1௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 1௦ 2௦14 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 19ம் ஞாயிறு
1 Kings 19:9a, 11-13a
Psalm 85:8-14
Romans 9:1-5
Matthew 14:22-33

மத்தேயு நற்செய்தி

கடல்மீது நடத்தல்
(
மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22 இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார்.23 மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்.24 அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது.25 இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26 அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, ' ஐயோ, பேய் ' என அச்சத்தினால் அலறினர்.27 உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ' துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள் என்றார்.28 பேதுரு அவருக்கு மறுமொழியாக, ' ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும் ' என்றார்.29 அவர், ' வா என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார்.30 அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, ' ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும் என்று கத்தினார்.31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, ' நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்? ' என்றார்.32 அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.33 படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, ' உண்மையாகவே நீர் இறைமகன் ' என்றனர்.
(Thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில், இயேசு ரொட்டி துண்டுகளையும், மீனையும் பல மடங்காக்கிய புதுமையை நிகழ்த்திவிட்டு, தனியே ஜெபம் செய்ய செல்வதை பார்க்கிறோம்.
நீங்கள் மிக பெரிய விருந்தை முடித்து விட்டு, அல்லது மிக பெரிய செயலை செய்து விட்டு , சாதனை நிகழ்த்திவிட்டு , கஷ்டமான காரியங்களை கடந்து வந்த பின்பும், தனியே கடவுளிடம் சென்று அவருக்கு நன்றி  கூறி கடவுளிடமிருந்து ஆற்றலையும், சக்தியை பெற்று கொள்கிறோமோ?

இயேசு தந்தை கடவுளோடு அமர்ந்து சிறிது நேரம் செலவிட்ட பின்பு, இயேசு அதே அனுபவத்தோடு, அவர் தண்ணிரில் நடந்தார்.
இயேசு அடிக்கடி ஜெபத்தில் நேரம் செலவழிப்பவர், நற்செய்தியில் குறிப்பிட்டதை விட அதிக நேரம் நிச்சயம் செலவழித்திருப்பார். என் மத்தேயு இங்கே இதனை குறிப்பிடுகிறார் ? இந்த ஜெபத்திற்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

மத்தேயு மூலமாக , கடவுள் நாம் எப்படி விசுவாசத்தோடு தொடர்ந்து நம் வாழ்வை கொண்டு செல்ல முடியும் என காட்டுகிறார்.
நமது ஆற்றலை புதுபிக்க, அடிக்கடி ஜெபத்தில் நமது நேரத்தை செலவிட்டு , கடவுளை பற்றி இன்னும் அறிந்து, அவர் எப்படி நம்மை வழி நடத்துகிறார். என்பதை நாம் தெரிந்து கொண்டு, நம்மை நாமே மாற்றிகொள்வது நல்லது. நமது குடும்பத்திலும், வேலையிடத்திலும், சமூகத்திலும், கடவுளுக்காக, நாம் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. மற்றவர்களுக்காக நாம் நம் சக்தியையும் , நேரத்தையும் செலவிடும்போது, நாம் சக்தியை இழந்து சோர்வடைகிறோம்.  நாம் இன்னும் தொடர்ந்து கடவுளுக்காக இறைசேவை செய்ய, நாம் இழந்த சக்தியை மீண்டும் கடவுள் நிரப்ப நாம் அவருக்கு அனுமதி தரவேண்டும்.

நமக்கு என்ன நடந்தாலும், அதனை எதிர்கொள்ள ஜெபம் நமக்கு பெரிதும் உதவுகிறது. நாம் எங்கே செல்கிறோம், என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமலே, இருக்கும்பொழுது, ஜெபம் நமக்கு உதவும். நாம் தனியாக கடவுளிடம் அமர்ந்து ஜெபிக்கும்போழுது, அவரிடமிருந்து நாம் பெரும் அருள், நமக்காக வடிவமைக்கப்பட்ட அன்பளிப்பாகும். அந்த அன்பளிப்பின் மூலம், பிறருக்கு நாம் உதவ முடியும். இது நமது விசுவாசத்தை இன்னும் உறுதியாக்கும். எப்படி தண்ணீரில் நடப்பது என நமக்கு கற்று கொடுக்கும். , கடவுளின் தேவை உள்ள அடுத்த கரைக்கு மக்களிடம் நாம் செல்ல உதவும். கடவுள் அவர்களுக்கு நம் மூலம் சேவை செய்கிறார். நீங்கள் ஜெபம் செய்து தயாராக இருக்கிறீர்களா?
© 2014 by Terry A. Modica


No comments: