Friday, August 29, 2014

ஆகஸ்டு 31 2௦1 4 ஞாயிறு நற்செய்தி, மறையுரை


ஆகஸ்டு 31 21 4 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 22ம் ஞாயிறு
Jeremiah 20:7-9
Psalm 63:2-6, 8-9
Romans 12:1-2
Matthew 16:21-27


இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்
(
மாற் 8:31 - 9:1; லூக் 9:22 - 27)
21 இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார்.22 பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்துகொண்டு, ' ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது ' என்றார்.23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, ' என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய் என்றார்.24 பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, ' என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்.25 ஏனெனில் தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்.26மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார் என்றார்.
(thanks to www.arulvakku.com)
இன்றைய முதல் வாசகம், எனக்கு மிகவும் பிடித்த வாசகம். ஜெறேமியா எப்படி இங்கே நினைக்கிறாரோ அதே போல நானும் பல நேரங்களில் நினைத்தது உண்டு. கடவுளிடம் பல முறை கடிந்து கொண்டுள்ளேன். “ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: “, மேலும், இதனை திரும்ப திரும்ப நடக்க அனுமதித்து விட்டேன். “உங்களுக்கு இவ்வாறு நடக்கும் என்று தெரியும் கடவுளே!, எனக்கு ஏன் இந்த சோதனை.? “  உங்களுக்கு அப்படி தோணியது உண்டா?
என் அவரை இவ்வாறு செய்ய விடுகிறோம்? கடவுள் நம்மை கடினமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றாலும், ஏன் அவர் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம்.? இயேசுவை பின் சென்று , மற்றவர்களுக்கு அன்பையும், உதவியையும் கொடுப்பதால், நமக்கு துன்பம் வரும் என்று தெரிந்தும், ஏன் இதனை செய்கிறோம்?

கடவுளோடு நடந்து செல்வது , மேலும், அவர் இறையரசிற்கு சேவை செய்வது என்பது மிக கடினமானது, ஆபத்து இருந்தாலும், ஆச்ச்சரியங்களை தர கூடியது. எதிர்பாராத ஒன்று நடக்கும், துரதிஸ்ட வசமாக அதில் துன்பங்களும் இருக்கும் – நம் சொந்த விருப்பங்களை விட்டு விட்டு , சிலுவைகளை சுமந்து,  இயேசுவோடு கல்வாரி மலைக்கு சென்று , (அதன் மூலம், மீட்பு அடைவோம் , நற்செய்தியில் சொல்லியிருப்பது போல )
ஏனெனில், நாம் கடவுளை அன்பு செய்கிறோம். நம்மையே அவருக்கு தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம். (இரண்டாவது வாசகத்தில் கூரப்பட்டுள்ளது போல) . இது தான் மிகஉயர்ந்த கடவுள் ஆராதனை, துதி. திருப்பலியில் திவ்ய நற்கருணை முலம் நாம் இணைகிறோம். இங்கே , இயேசுவின் ஆவியோடு, நாம் இணைகிறோம். இயேசுவோடு இணைந்து நாமும், திவ்ய நற்கருணை ஆகிறோம்.
ஜெரேமியாவின் புகார்  மூலம் , நாம் கடவுளிடம் நம் புகார்களை, கண்டிப்புகளை , குற்றங்களை சொல்லலாம். நாம் கடவுளிடம், அவருக்காக இறைசேவை செய்ய விருப்பமில்லை என கூறலாம், அதனால் ஒரு தண்டனையும் நமக்கு கிடையாது. மற்றவர்களிடம் புகார் கூறுவது என்பது கண்டிப்பாக ஒரு பாவ செயல். ஏனெனில், இது கடவுளையும் தவறாக பார்ப்பது போல ஆகி விடும்.

நமது சோதனையின் பொது, மற்றவர்களிடம் நமக்காக ஜெபிக்க சொல்வது மிகவும் முக்கியமானது. கண்டிப்பாக இதனை நாம் செய்ய வேண்டும். ஆனால், மற்றவர்களிடம் புகார் கூறுவது, என்பது, நாம் கடவுளை குறைவாக நம்புகிறோம் என்று அர்த்தம். நமது தியாகத்தினால், நல்லது நடப்பதை நாம் பார்ப்போம். நல்லது நடப்பதை தான் மற்றவர்களிடம் நாம் சொல்ல வேண்டும்.

© 2014 by Terry A. Modica Facebook


No comments: