Friday, December 5, 2014

டிசம்பர் 7 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை


டிசம்பர் 7 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 2 ம் ஞாயிறு

மாற்கு நற்செய்தி
Isaiah 40:1-5, 9-11
Ps 85:9-14
2 Peter 3:8-14
Mark 1:1-8

திரு முழுக்கு யோவானின் உரை
(
மத் 3:1 - 12; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)
1கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:2' இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.3பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள் ' என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.4இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
(thanks to www.arulvakku.com)



இன்றைய நற்செய்தி வாசகங்கள் அனைத்தும் இறைவனின் வருகைக்கு தயாராகுங்கள் என்று கூறுகிறது - அவர் நமக்கு கொடுக்க விரும்புவதற்கும் , நமக்காக எதையும் செய்ய தயாராக இருப்பதற்கும் , நம்மிடம் அவர் என்ன கேட்பார் என்பதற்கும் சேர்த்து நாம் தயார் பண்ண வேண்டும். நமது வாழ்விற்கு தேவையான திட்டம் அவரிடம் இருக்கிறது. அன்பான தந்தையின் குழந்தையாக, கிறிஸ்துவோடு இணைந்து மீட்பின் கடவுளான அவரோடு இணைந்து தெய்வீக பணி நமக்காக கடவுள் தயார் படுத்தி வைத்திருக்கிறார்

நமது முழுமையான ஆற்றலை திறமையை முழுதாக கிறிஸ்துவோடு இணைந்து நேரான வழியில் , பரிசுத்த பாதையில் நடந்து நாம் நம் கடமையை நிறைவேற்றலாம்

நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நமக்கு எப்படி தெரியும் ? நாம் வாழ்வின் பலன்களால் நாம் அறிந்து கொள்ளலாம். பரிசுத்த வாழ்வு எப்பொழுதும் நல்ல பலன்களையே கொடுக்கும்

இசையாஸ் சொல்கிறார்: பாலை நிலத்தில் ஒரு குரல் ஒலிக்கிறது! உங்கள் வாழ்வில் எது தடையாக இருக்கிறது, உங்கள் வாழ்வில் எது குறைவாக இருக்கிறது. பாவங்களை ஒழித்தால், உங்கள் வாழ்வில் முழுமையான பலனை கொடுக்க முடியும்


திருவருகை காலம் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாராக வேண்டிய காலம். - கடவுளை மீண்டும் புதிதாக சந்திக்கும் தருணம் - நமது பாவங்களை ஒப்புக்கொண்டு கடவுளோடு இணைந்து , பரிசுத்த பாதையில் இயேசுவின் பின் செல்ல ஒரு வாய்ப்பு - இந்த வாய்ப்பை ஒதுக்கி விட்டோமானால் , கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் ஆக இருக்காது. நமது வாழ்வே நமது விசுவாசத்திற்கு நம் கஷ்டமான காலங்களில் தடையாக இருந்து விடும். நம்மிடம் ஒன்றுமில்லை என்று அடுத்த வருடமும் நாம் நினைக்க வேண்டியிருக்கும்

கடவுள் வருவதற்கு வழியை தயார் செய்யுங்கள்!. உங்களுக்கு கொடுக்க நிறைய அன்பை வைத்திருக்கிறார். உங்களை குணமாக்குவார்! அதிக சந்தோசம் கொடுக்க இருக்கிறார்! உங்கள் பாவ வழியில் இருந்து கடவுளுக்கு நல்ல வழி போடுங்கள். பாவ சங்கீர்த்தனம் செல்லுங்கள். இயேசுவிற்கு உங்கள் உள்ளம் வர பெரிய வழியை உண்டாக்குங்கள். மிக விரைவாகவும் , அருட் சுடருடனும் உங்கள் உள்ளத்திற்கு வர தயார் படுத்துங்கள்.

எல்லா மனிதர்களுமே புற்களை போல வலைபவை தான் , நமது அருள் கொடைகள் எல்லாம் , வயல் வெளியில் உள்ள பூக்கள் எல்லாம் மலர்ந்து காய்ந்து போவது போல ஆகி விடுகிறது. கடவுளின் அருளும் மாட்சியும் என்றென்றும் நிலையானது .

இந்த திருவருகை காலத்தில், உங்கள் போராட்டம் என்ன ? இதில் தான் இயேசு உங்களுக்கு ஆலோசனையும் தெளிவும் கொடுக்க விரும்புகிறார். இதில் தான், உங்கள் பாவங்கள் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வாழ்வில் எது நன்றாக நடக்கிறது ? எந்த மாதிரியான செயல்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களை கொடுக்கிறது ? இதில் ஏதாவது புல போல சில காலத்தில் காய்ந்து போகுதா? இன்றிலிருந்து நுறு வருடங்கள் பிறகு அது இன்னும் எந்த மாதிரியான மாற்றத்தை கொடுக்க வல்லது ? கண்டிப்பாக பலருக்கு பயனை கொடுக்க வல்லதா?



கடவுள் உங்களுக்கு திறமையையும், தேவ அழைப்பையும் கொடுத்துள்ளார் - உங்களுக்கான தனி செயலை - உங்கள் திறமைகள் அதற்கு கண்டிப்பாக தேவை . நித்திய வாழ்விற்கு உங்களால் கண்டிப்பாக மாற்றத்தை கொடுக்க நாம் அழைக்கபட்டுள்ளோம் . அன்னை மரியாள் போல ,கிறிஸ்துவிற்கு பிறப்பு கொடுத்து , இந்த உலகை நாள் இடமாக மாற்ற வேண்டும். இயேசு நம்மிடம் நேராக வந்து , இறையாட்சியை நம்மிடமும், நம் மூலம் மார்ரவர்களிடமும் ஏற்படுத்த ஆசைபடுகிறார்.
கடவுள் நம்மிடம் வர வழியை தயார் படுத்துங்கள். நித்திய வாழ்விற்கு உங்கள் மூலம் வித்தியாசம் கொண்டு வர ஆவர் ஆசைபடுகிறார்

© 2014 by Terry A. Modica


No comments: