Friday, December 19, 2014

டிசம்பர் 21 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 21 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
திருவருகை கால 4ம் ஞாயிறு

2 Samuel 7:1-5, 8b-12, 14a, 16
Ps 89:2-5, 27, 29
Romans 16:25-27
Luke 1:26-38

லூக்கா நற்செய்தி


இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு

26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். 29இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.30வானதூதர் அவரைப் பார்த்து, ' மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்.31இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.32அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார்.33அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது ' என்றார்.34அதற்கு மரியா வானதூதரிடம், ' இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே! ' என்றார்.35வானதூதர் அவரிடம், ' தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.36உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்.37ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார்.38பின்னர் மரியா, ' நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் ' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

(thanks to www.arulvakku.com)

இன்றைய நற்செய்தி, இயேசுவின் இறைபணி , இயேசு கன்னி மரியாள் வயிற்றில் உருவாதற்கு முன்னரே, எப்படி கன்னி மரியாளை அவரின் இறைபணி எந்த மாதிரியான மாற்றத்தை கொண்டு வந்தது எப்படி என்று காட்டுகிறது.

முப்பதாண்டுகளுக்கு பிறகு, இயேசு இந்த உலகின் மீட்பராக இருக்கிறார். எனினும், அவரின் மீட்பின் திட்டம் அப்போது ஆரம்பிக்கவில்லை. இயேசு கடவுள்; எப்பொழுது இருக்கிறார். அவர் கடவுளின் மகனாக பிறக்கவில்லை. திரித்துவ கடவுளின் ஒருவராக இருப்பவர். நிசேயா விசுவாச அறிக்கையில் நாம் சொல்வது போல, சர்வகாலங்களுக்கு முன்னே பிதாவினின்று பிறந்தவர், சிருஷ்டிக்கப்பட்டவர் அல்ல, பிறந்தவரே கடவுளின்று கடவுள், “ . (thanks to http://waliban.blogspot.in/)

இயேசுவின் மீட்பின் திட்டம் , கண்டிப்பாக கன்னி மரியாளை இயேசு கருவில் இருக்கிறபொழுதிலிருந்து பாதித்தது .

கடவுள் இந்த உலகத்திற்கு மனிதனாக வர, பரிசுத்த ஆவியானவர் கன்னி மரியாளை முழுதுமாக ஆவியால் குளிப்பாட்டினார். மரியாளுக்கு எப்படி மெசியா கருவாக உருவானார் என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லை. அவர் தாம்பதய உறவில்லாமல், கடவுளின் அருளால் , கருவுற்றார். கடவுள் தான் இதனை செய்கிறார் . அவர் தான் நம்மிடம் கூறினார் என்று மரியாளுக்கு தெரியும். அவ்வளவு தான்.

அதே போல , நாமும் கடவுளால் அழைக்கப்பட்டுள்ளோம், கிறிஸ்துவின் பிரசன்னத்தை எடுத்து இந்த உலகத்தில் காட்ட வேண்டும் என்று அழைக்கப்பட்டுள்ளோம், நீங்கள் அதற்காக என்ன செய்கிறீர்கள்? தெய்விக கடமையாக எந்த அளவிற்கு நீங்கள் நிறைவெற்றி இருக்கிறீர்கள் ? நாம் யாராக இருந்தாலும் நமக்கு என்ன தேவையோ, கடவுள் என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்யும் ஆற்றலை, செயல் திறனை கடவுள் கொடுக்கிறார் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். மரியாள் ஆரம்பித்ததை, நாம் தொடர, கடவுள் எல்லா தேவையானதையும் செய்து கொண்டிருக்கிறார். அவரை நம்பி நாம் செல்லலாம், என்றும் நம்பிக்கை ஆனவர். எதற்கும் நாம் பயப்பட தேவை இல்லை. நமது உண்மையான இறைபணியை நாம் எதற்காகவும் நிறுத்த வேண்டியதில்லை,

இதனையெல்லாம் மனதில் கொண்டு, இறையரசிற்காக கடவுள் நம்மை இறைபணி செய்ய அழைக்கும்பொழுது, நாம் 'ஆம்' என்று தான் பதில் சொல்வோம். சரிதானே? கண்டிப்பாக அவர் திட்டத்திற்கு நாம் துணையாக இருக்க விருப்ப படுகிறோம். நாம் அவரின் திட்டம் என்ன என்று தெரியமால் கூட, அவர் என்ன எல்லாம் நமக்கு செய்ய இருக்கிறார் என்பது தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் திட்டத்திற்கு நாம் ஆம் என்று தான் சொல்வோம்.

பல நேரங்களில் , நாம் தகுதி இல்லாதவர்களாக தான் நினைத்து கொள்கிறோம். எனில், நாம் வலிமையில்லாமல் இருக்கிறோம், பாவ வாழ்வில் இருக்கிறோம் . உங்கள் எண்ணங்கலை மட்டும் வைத்து கொண்டு இருக்காதீர்கள். கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள். இறைவன் மேல் விசுவாசம் கொள்ளுங்கள்.

© 2014 by Terry A. Modica


No comments: