Friday, December 26, 2014

டிசம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை

டிசம்பர் 28 2014 ஞாயிறு நற்செய்தி மறையுரை
இயேசு மரியாள் சூசை திருக்குடும்பம்
Sirach 3:2-6, 12-14 or Gen 15:1-6; 21:1-3
Ps 128:1-5 or Ps 105:1-6, 8-9
Col 3:12-21 or Heb 11:8,11-12,17-19
Luke 2:22-40

லூக்கா நற்செய்தி
இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல்
22மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.23ஏனெனில், ' ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும் ' என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது.24அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.25அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார்.26' ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை ' என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார்.27அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது.28சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,29' ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்.30ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு,31நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன.32இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை ' என்றார்.33குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர்.34சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, ' இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும்.35இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும் ' என்றார்.36ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்;37அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலைவிட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார்.38அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
நாசரேத்துக்குத் திரும்பிச் செல்லுதல்
39ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள்.40குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
(Thanks to www.arulvakku.com)


இயேசுவை நம்பு (நன்றாக புரிந்து கொள்ளாவிட்டால் கூட )

புனித ஜான் பால் (போப்பாண்டவர்) ஜெபமாலையை பற்றிய அவருடைய குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் சந்தோஷ தேவ ரகசியத்தில், நமக்கு மகிழ்ச்சியும் சந்தோசமும் . கிடைக்கிறது. 12 வயது இயேசுவை கோவிலில் கண்டு பிடித்த பொழுது நமக்கும் சந்தோசம் கிடைக்கிறது. அங்கே அவர் தெய்வீக ஞானத்துடன், கேள்விகள் கேட்டும், பதில் அளித்தும் , போதனை செய்பவர் போல இருந்தார் . அவர் மீட்பர் என்பதனை வெளிப்படுத்துவது தந்தையின் வேலை என்பதை விவிலியம் நமக்கு காட்டுகிறது. மனித உறவுகளுக்குள்ளே மிக நெருங்கிய உறவுகளும் இறையரசிற்காக வாழ்தல் வேண்டும் என்று காட்டபடுகிறது. சூசையப்பர் , மாதா , பயத்துடனும், கலக்கத்துடனும் 'அவரின் வார்த்தைகளை புரிந்து கொள்ளவில்லை'”

நாமும் பல நேரங்களில் இயேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்வதில்லை. அவரின் போதனைகள நாம் கடினமான வாழ்க்கையை எதிர்கொள்ளவேண்டும் என்று சவால் விடுகிறது. எதிரிகளுக்கும் நன்மை செய்ய வேண்டும், மறு கன்னத்தையும் காட்டி, உண்மைக்கு நாம் எப்பொழுதும் துணிந்து நிற்க வேண்டும் , மற்றும் நியாயமான பழக்க வழக்கத்துடன், நல்ல கலாசராத்துடனும் இருக்க வேண்டும்.

இது மாதிரியான ஒரு வாழ்வு வாழும்போது, நமக்கு பிடிக்காமல் இருக்கும், ஒத்து வராது, நமது உலக வாழ்க்கைக்காக நாம் இந்த மாதிரியான வாழ்வை ஒதுக்கி தள்ளுவோம். ஆனால், இறையரசின் தேவைகளை நாம் புரிந்து கொள்ளும்பொழுது, கடினமான வாழ்க்கையின் நன்மைகளை புரிந்து கொள்வோம். மேலும், சந்தோசத்துடேன் கடவுளுக்கு கிழ்படிவோம்

இந்த ஒரு புரிதலோடு, நாம் இயேசுவின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைத்து,, அவை சரியான உணமையான வார்த்தைகள் என்று நம்புவோம். மாதாவும் சூசையப்பர் போல நாம் புரிந்து கொள்ளாததை நம் மனதில் இருத்தி வைத்து , இயேசு என்ன செய்ய சொல்கிறாரோ அதனை செய்து நாம் அவர் பின் தொடர்ந்து செல்வோம்.

இது ஒரு சவாலான வாழ்வு தான், ஆனா கடவுள் எவ்வளவு ஆச்சர்யமனவர், அற்புதமானவர் என்று நாம் அறிந்து கொள்ளும் நேரம் வரும் பொழுது தெரிந்து கொள்வோம்.

© 2014 by Terry A. Modica


No comments: