Friday, July 31, 2015

ஆகஸ்டு 2 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஆகஸ்டு 2 2015 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 18ம் ஞாயிறு

Exodus 16:2-4, 12-15
Ps 78:3-4, 23-25, 54
Ephesians 4:17, 20-24
John 6:24-35


யோவான் நற்செய்தி


அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் திபேரியாவில் இல்லை என்பதைக் கண்ட மக்கள்/ கூட்டமாய் படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்குக் கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, ``ரபி,எப்போது இங்கு வந்தீர்?''என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, ``நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல,மாறாக,அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்''என்றார்.
அவர்கள் அவரை நோக்கி, ``எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?''என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்''என்றார்.
அவர்கள், ``நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்?அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?எங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டனரே!`அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்'என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!''என்றனர்.
இயேசு அவர்களிடம், ``உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல;வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது''என்றார்.
அவர்கள், ``ஐயா,இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்''என்று கேட்டுக் கொண்டார்கள்.
இயேசு அவர்களிடம், ``வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது;என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது''என்றார்



இன்றைய நற்செய்தியில் இயேசு, “அழிவு தரும் உணவை தேடாமல், நிலை வாழ்வு தரும் உணவை தேடுங்கள் " என்று கூறுகிறார் . இதனை வேறாக சொல்வதானால்,, உங்கள் ஆன்மாவை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுங்கள் , அது உங்களை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்லும்

கடவுள் உங்களை செய்ய சொல்லும் 'செயல்' , உங்களை அனுப்பியவர் மேல் விசுவாசம் கொள்ளுங்கள் என்று இயேசு கூ றுகிறார் . ஏன் இதனை "செயல்" என்று கூ றுகிறார் ?

முழுமையாக கிறிஸ்துவை நம்புவதற்கு , அவநம்பிக்கை ஏற்படுத்தும் எந்த செயல்களையும் நாம் தடுத்து , ஒவ்வொரு சந்தேகத்தையும் தூக்கி எறிய வேண்டும். அவருடைய வார்த்தைகளை நற்செய்தியை நாம் நம்ப வேண்டும், அவரின் வழியான வாழ்வை நாம் தொடர்தல் வேண்டும்.

செயல் முறைபடுத்தி அதனை நம் வாழ்வின் ஒரு அங்கமாக கொள்ள வேண்டும்.
1) நமக்கு சந்தேகம் ஏற்படும் , அவநம்பிக்கை கொடுக்கும் செயல்கள் யாவை என அறிந்து கொள்ள வேண்டும்.
2) நாம் அவரை விசுவசித்தால், என்ன வெல்லாம் ஏற்படும் என்ற பயத்தை போக்குதல் வேண்டும்.
3) நமது பயத்தை எதிர்கொண்டு , உண்மையான விசுவாசத்தை அறிந்து கொள்ள வேண்டும். நமது பயங்களால் நமக்கு பரிசுத்த வாழ்வில் ஏற்படும் இடையுறு அனைத்த்தும் உண்மையான பயத்தினால் அல்ல

இயேசு "வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது''
என்று கூறுகிறார் . அவர் திவ்ய நற்கருணையில் இருப்பதை இங்கே குறிப்பிடுகிறார். திருப்பலியில் நமக்கு வழங்கப்படும் உணவாகும். இந்த திவ்ய நர்கருனையினால், நீங்கள் முழு நலத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும் ? உங்களை ஏதாவது தடுக்கிறதா ? இந்த நற்கருணை வாங்க ? எல்லா தடைகளையும் உடைத்தெறிய வேலை செய்யுங்கள், கடினமாக உழையுங்கள். உங்கள் ஆன்மாவிற்கு கண்டிப்பாக ஒரு நல்ல மாறுதலை தரும். கிறிஸ்துவோடு உங்களை இணைத்து கொள்ள நீங்கள் உண்மையாக விருப்பத்துடன் இருந்தால், அவர் அந்த இணைப்பிற்கான தடையை கண்டிப்பாக ஒதுக்கி உங்களுக்க் பாதை ஏற்படுத்தி கொடுப்பார்
© 2015 by Terry A. Modica


No comments: