Friday, April 8, 2016

ஏப்ரல் 10 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 10 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 3ம் ஞாயிறு
Acts 5:27-32, 40b-41
Ps 30:2, 4-6, 11-13
Revelation 5:11-14
John 21:1-19
யோவான்  நற்செய்தி
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்
1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:
2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,
3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், “நான் மீன்பிடிக்கப் போகிறேன்என்றார். அவர்கள், “நாங்களும் உம்மோடு வருகிறோம்என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.
4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை.
5இயேசு அவர்களிடம்
பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?”
 என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லைஎன்றார்கள்.

6அவர்
படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்
 என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், “அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.
8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள்.

9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது.

10இயேசு அவர்களிடம்
நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்
 என்றார்.

11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.

12இயேசு அவர்களிடம்
உணவருந்த வாருங்கள்
 என்றார். சீடர்களுள் எவரும், ‘நீர் யார்?’ என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள்.

13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.
இயேசுவும் பேதுருவும்
15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட⁕ மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
 என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்
 என்றார்.
16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?”
 என்று கேட்டார். அவர் இயேசுவிடம், “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளை மேய்
 என்றார்.
17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம்
யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?”
 என்று கேட்டார். உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம்
என் ஆடுகளைப் பேணிவளர்.
18
நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்
 என்றார்.

19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம்
என்னைப் பின் தொடர்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)

நமது தேவ அழைத்தல்
இன்றைய நற்செய்தியை எப்பொழுதெல்லாம் நான் படிக்கிறேனோ, எனக்கு ஒரு ஆச்சரியம் இருக்கும், என்னவென்றால், இயேசு எங்கே போய் அந்த மீன்களை பிடித்து சுட்டு கொண்டிருந்தார். சீடர்கள் வருவதற்கு முன்பே அவர் கையில் மீன் இருந்தது. அவரிடம் வலைகள் இருந்ததா? அல்லது ப்ரெட் வாங்கும் பொழுது அந்த மீன்களை வாங்கினாரா? அப்படி அவர் மார்கெட் சென்று இருந்தால், அவரை பலர் பார்த்திருக்க வேண்டுமே ? அல்லது அந்த தண்ணீரிலிருந்து மீன் துள்ளி குதித்து வந்ததா ? அல்லது சில கற்களை எடுத்து இயேசுவே பிரட் ஆக மாற்றினாரா ? அலகை அவரை சோதித்த பொது ,கல்லை உணவ்வாக மாற்றியது போல ?
மீனையும் , அப்பங்களையும் பல மடங்காக ஆக்கிய அற்புதத்தை நினைவில் கொள்ளுங்கள். அதே அப்பமும் மீனுமும் தான் இங்கேயும் இருக்கிறது. அதே அற்புதம்!. நம்மிடம் எவ்வளவு குறைவாக  இருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல, கடவுளிடம் எவ்வளவு தேவையோ அதனை விட அதிகமாகவே  இருக்கிறது. நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பது ஒரு பொருட்டல்ல, கடவுள் நம் மேல் கொண்ட அன்பு தான் நமக்கு தேவையானதை கொடுக்கிறது.
கடவுள் நம்மிடம் கொடுப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை நம்மிடம் இருக்க வேண்டும் என கடவுள் விரும்புகிறார். இயேசு பல மடங்காக அப்பத்தை பெருக்கிய அற்புதத்தில், சீடர்களிடம் அவர் எல்லோருக்கும்  பகிர்ந்து அளியுங்கள் என்றார். இன்றைய நற்செய்தியின் அற்புதத்தில் , நீங்கள் பிடித்த மீன்களில் 'சிலவற்றை' மட்டும் கொண்டு வாருங்கள் என்று கூறினார். இயேசு ஏற்கனவே சில உணவுகளை தயார் செய்து கொண்டிருந்தார்.
இராயப்பரிடம் இயேசு " என் ஆடுகளை கவனி, அன்பை பகிருங்கள் " என்று கூறுகிறார் . அந்த அன்பு எங்கிருந்து வந்தது. ?  இராயப்பர் அவருடைய சொந்த முயற்சியால், அன்பு செய்தாரா? அல்லது நாமும் மற்றவர்களை நம் சொந்த முயற்சியால் அன்பு செய்கிறோமா?; இராயாப்பர் கடவுளின் அன்பால் படைக்கபட்டார் , நாமும் அப்படியே படைக்கபட்டிருக்கிறோம். கடவுளை போலவே நாமும் படைக்கபட்டிருக்கிறோம், -- முழு அன்பு -- தான் கடவுள்.

கடவுளின் அளப்பற்கரிய அன்பை இவ்வுலகம் முழுதும், பகிர்ந்தளிக்க இராயப்பர் அழைக்கபட்டார். அதன் மூலம் கடவுள் தன இறையரசை இந்த உலகில் பரப்ப முடிந்தது. உங்களிடம் கடவுள் என்ன கேட்கிறார்? இதற்கு பதில், உங்களிடம் என்ன இருக்கிறது என்பதல்ல , கடவுளிடம் ஏற்கனவே இருப்பதை எப்படி நீங்கள் பகிர்ந்து கொள்ள விருப்பமாக இருக்கிறீர்கள் ? என்பது தான் பதில்.

© 2016 by Terry A. Modica

No comments: