Friday, April 1, 2016

ஏப்ரல் 3 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 3 2016  ஞாயிறு நற்செய்தி மறையுரை
இறை இரக்கத்தின் ஞாயிறு
பாஸ்கா 2ம் ஞாயிறு
Acts 5:12-16
Ps 118:1-4, 13-15, 22-24
Revelation 1:9-13, 17-19
John 20:19-31


யோவான் நற்செய்தி
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16 - 20; மாற் 16:14 - 18; லூக் 24:36 - 49)
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன் என்றார்.
22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி,
தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா என்றார்.
இயேசு தோமாவுக்குத் தோன்றுதல்

24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று,
உங்களுக்கு அமைதி உரித்தாகுக! என்று வாழ்த்தினார்
27பின்னர் அவர் தோமாவிடம், 
இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்
 என்றார்
28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!என்றார்.
29இயேசு அவரிடம், 
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர் என்றார்.
முடிவுரை: நூலின் நோக்கம
30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை.
31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
(thanks to www.arulvakku.com)
இறை இரக்கத்தின் ஆவியில் வாழ்வோம்
இன்றைய ஞாயிறு நற்செய்தி, பரிசுத்த ஆவியின் வருகைக்கு நம்மை தயார் செய்கிறது. ஆவியின் அன்பளிப்பை நமக்கு கொடுப்பதற்கு முன்பு , அமைதியை இயேசு நமக்கு கொடுக்கிறார், அவர் இருதயத்தை நமக்கு அன்பளிப்பாக கொடுக்கிறார். தெய்வீக அன்பளிப்பு, நம் இருதயத்தை துளைத்து செல்கிறது. நாம் சவால்களையும் , கஷ்டங்களையும் கண்டு அஞ்சும் பொழுது , நம்மை அமைதிபடுத்தும் பிரசன்னமாக இயேசு நம்மில் இருக்கிறார்.

இயேசு இந்த அன்பளிப்புகளை உயிர்த்தெழுந்தத பின்பு சீடர்களை சந்திக்கும் பொழுது இரண்டு முறை கொடுத்தார். கடவுளின் மூச்சை, பரிசுத்த ஆவியை அவர்களுக்கு கொடுத்து, பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கிறார். - இது அமைதியை கொடுக்கும் அன்பளிப்பாகும்.
அமைதியின் அன்பளிப்பு,  இயேசுவிடமிருந்து , குருக்கள் மூலமாக நமக்கு இன்னும் வந்து கொண்டிருக்கிறது, பாவ சங்கீர்த்தனம் மூலம், நாம் அதே மன்னிப்பை , அமைதியை பெறுகிறோம். பரிசுத்த வாழ்வில் நிலைத்திருக்க , இயேசு கடவுளின் ஆவியை கொடுக்கிறார். கடவுளின் மூச்சு , இது தான் இந்த உலகை படைத்தது, இந்த உலகை உயிரோடு வைத்திருப்பது , பரிசுத்த ஆவி -- நம்மில் ஆற்றலோடு இன்னும் உயிரோடு உள்ளது.
பரிசுத்த மில்லாதது எதுவும் - ஆவிக்குரியது இல்லாதது - அனைத்தும் பாவமிக்கது, அழிவிற்குரியது.  தெய்வீக இரக்கத்தின் ஊற்றான இயேசு, சிலுவையில் மரணமடைந்து, அவரின் ஆவியை நமக்கு கொடுத்து , கடவுளின் மன்னிப்பில் நாம் என்றும் வாழும் அன்பளிப்பை நமக்கு கொடுத்திருக்கிறார்.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" - என்று நாம் ஜெப செய்யும் பொழுது , அந்த ஜெபத்தை மெதுவாகவும், அர்த்தம் பொதிந்ததாகவும், சொல்லுங்கள், :"எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல,எங்கள் பாவங்களை மன்னித்தருளும்" , உங்களை பழித்து காட்டியவர்களை நினைத்து பாருங்கள், உங்களை கஷ்டபடுத்தியவர்களை நினைத்து பாருங்கள், இந்த ஜெபத்தில் முழுதுமாக அவர்களை மன்னித்து விடுங்கள்.
அப்படி செய்ய வில்லை என்றால், அவர்களின் ஆன்மாவும் , நம் ஆன்மாவும் பாதிக்கப்படும், கடவுளின் மன்னிப்பை அவர்கள் பெற நாம் தடுக்கிறோம், நீங்கள் மன்னிக்காததால் ஏற்படும் உங்கள் பாவத்தை நீங்கள் உருவாக்கு கொள்கிறீர்கள்.
மன்னிப்பது என்றால் அவர்கள் பாவத்தை நாம் அங்கீகரிக்கிறோம் என்று அரத்தம் இல்லை. பழிக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுவது. இன்னும் மேலே சொல்ல வேண்டும் என்றால்,  அவர்கள் நம் அன்பிற்கு தகுதியானவர்களோ இல்லையோ , நாம் அவர்களை அன்பு செய்ய ஆயத்தமாகிறோம். கிறிஸ்துவின் அன்பளிப்பு அமைதியை நோக்கி செல்கிறோம்.


© 2016 by Terry A. Modica

No comments: