Saturday, April 16, 2016

ஏப்ரல் 17 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஏப்ரல் 17 2016 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஈஸ்டர் கால 4ம் ஞாயிறு
Acts 13:14, 43-52
Ps 100:1-3, 5
Revelation 7:9, 14b-17
John 10:27-30
யோவான் நற்செய்தி
யூதர்கள் இயேசுவை ஏற்க மறுத்தல்

22எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம்.

23கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்து கொண்டிருந்தார்.

24யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்என்று கேட்டார்கள்.

25இயேசு மறுமொழியாக, 
நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள் தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன.

26ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையை சேர்ந்தவர்கள் அல்ல.

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.

28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார்.

29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது.

30
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்
 என்றார்.
(thanks to www.arulvakku.com)

இயேசுவிடம் கண் மூடிதனமான நம்பிக்கை வைத்தல்
இன்றைய நற்செய்தி மிகவும் குறைந்த வரிகளுடன் உள்ளது , ஆனால் அது சொல்லும் ஒரே வாக்கு: இயேசு நல்லாயன் , அவரை மட்டும் தான் நாம் பின் செல்ல வேண்டும், அவரை மட்டும் தான் நாம் கண் மூடி தனமாக நம்ப வேண்டும்.

நம்மோடு கூட இருப்பவர்கள் நம் மேல் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கலாம் , அவர்கள் நல்ல மேய்ப்பவராக கூட இருக்கலாம், ஆனால் நாம் அவர் பின் செல்ல வேண்டும்  , கண் மூடி தனமாக அவர் சொல்வதை கேட்க வேண்டும் என அவசியமில்லை. ஆயர்களுக்கும், பங்கு குருவிற்கும், ஆசிரியர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துவோம் . ஆனால் எல்லோருமே சில நேரங்களில் தவறு செய்பவர்கள் , பாவம் செய்தவர்கள் தான், அவர்கள் பொறுப்புகளை  தவறாக புரிந்து கொண்டவர்கள். பரிசுத்த ஆவியின் துணை கொண்டு நாம் ஒவ்வொரு விசயத்திலும் கடவுளின் முடிவை அறிந்து , தந்தை கடவுளுக்கு வருத்தம் கொடுக்காதபடி நாம் நடந்து கொள்ளவேண்டும்.

இயேசுவை மட்டும் தான் நாம் கண்களை மூடி கொண்டு நம்பலாம். இயேசு மட்டும் தான் பரிசுத்தமானவர், எல்லாவற்றையும் புரிந்து கொள்பவர், மேலும் பாவம் அறியாதவர். இயேசு மட்டும் தான் சரியான முடிவை கொடுப்பவர், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விற்கும் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் நமக்கு இயேசு சொல்பவர். சாத்தானின் தூண்டுதளுக்கு ஆட்படாமல் நம்மை காப்பவர். நம் எல்லோருக்கும் ஏற்ற திட்டத்தை , வழியை காட்டுபவர் இயேசு மட்டும் தான். இயேசு மட்டும் தான் நம்மை மோட்சத்திற்கு அழைத்து செல்பவர் , பாதியில் ஏற்படும் ஆபத்துகளில் நம்மை காப்பாற்றி நம்மை நித்திய வாழ்விற்கு அழைத்து செல்பவர்.
இயேசுவின் திட்டத்தில் இருந்து நாம் விலகி போகும்பொழுது , நம் தவறுகளை பார்த்து இயேசு மட்டும் தான் சிரிக்கிறார். ஏனெனில், நாம் இன்னும் அவரை முழுதும் அன்பு செய்கிறோம் மேலும் அவர் செய்வது சரியானதே என நாம் நம்புகிறோம் என்று அவருக்கு தெரியும். அவர் கணிவிரக்கத்தொடு நம்மை கடவுளின் கைகளில் அரவணைத்து கொள்கிறார்.  அதிலிருந்து நாம் வெளியே செல்லாதபடி நம்மை பாது காக்கிறார்.
நாம் யார் மேலும் அவ நம்பிக்கை கொண்டால், -- நம்மையும்  சேர்த்து -- இயேசு எப்பொழுதும் நமக்காக இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள், அவர் தொடர்ந்து நமக்கு சரியான வழியை காட்டி உதவி செய்து கொண்டிருக்கிறார் , நாம் விலகி சென்றாலும் , திரும்பி வரும் வழியை அவர் நமக்கு காட்டுகிறார் . ஏனெனில், நாம் அவரை முழுதும் அன்பு செய்கிறோம். மேலும், எது சரியோ அதனை செய்ய செய்ய தயாராய் இருக்கிறோம். நமக்கு பாதுகாப்பாய் இயேசு இருக்கிறார். நமது தவறுகளை திருத்தி கொள்ள இயேசு வாய்ப்பளிக்கிறார். நமது பாவங்களுக்காக நாம் மனம்  வருந்தும் பொழுது , கேட்டதிலிருந்து நல்லதாக இயேசு மாற்றுகிறார்.இதற்கும் மேலாக, நாம் அனைவரும் மோட்சம் செல்ல இயேசு கண்டிப்பாக உதவி செய்கிறார்.

நல்ல ஆடாக நாம் இருக்க, இயேசு காட்டும் நல வழியில் தொடர்ந்து செல்வோம் ,அவர் போதனையை கேட்டு நடப்போம்.

© 2016 by Terry A. Modica

No comments: