Friday, June 9, 2017

ஜூன் 11 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை


ஜூன் 11 2017  ஞாயிறு நற்செய்தி மறையுரை
மூவொரு இறைவன் பெருவிழா
Exodus 34:4b-6, 8-9
Daniel 3:52-56
2 Corinthians 13:11-13
John 3:16-18
யோவான் நற்செய்தி

16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.

18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.

(THANKS TO WWW.ARULVAKKU.COM) 
மூவொரு கடவுள் பெருவிழா
பரிசுத்த ஆவியின் திருவிழாவிற்கு அடுத்த முதல் ஞாயிறு நாம் புனிதமான மூவொரு இறைவன் திருவிழாவை கொண்டாடுகிறோம்.
முதல் வாசகத்தில் தந்தை கடவுள் இஸ்ரேயல் நாட்டை தயாரிப்பதை பார்க்கிறோம். அதில் "அவர் இரக்கமும் பரிவும் உள்ள இறைவன் ; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்புமிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்''  -- முழுமையான , சரியான தந்தை.
இது மாதிரியாக நாம் தந்தை கடவுளை பார்க்க முடியவில்லை என்றால், நாம் இதுவரை எந்த தந்தையையும் முழுமையான இந்த குணங்களுடன் பார்த்ததில்லை. நமது இருதயம் சீரமைக்கப்பட வேண்டும். தந்தை கடவுளை, நம் அருகில் உள்ள மனித தந்தையாக நாம் பார்க்கிறோம். நல்லாசிரியர்கள், மிகவும் உயரிய தந்தைகள் கூட ஏதோ சில குறைகளோடு இருப்போம். தந்தை கடவுளை போல அற்புதமான கடவுளை போல  இருப்பதில்லை. உள்ளுணர்வோடு கவனத்துடன் நாம் தந்தை கடவுளை வேறு படுத்தி பார்க்க வேண்டும்.
இரண்டாவது வாசகமோ மூன்று கடவுள்களையும் காட்டுகிறது : இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்களோடு இருப்பதாக என்று சொல்கிறது.  இதனால் மட்டுமே, நாம் அனைவரும் சந்தோசப்பட வேண்டும். நமது வழியை சீரமைத்து கொண்டு , ஒருவரோடு ஒருவர் அமைதியில் வாழ்வோம்.
இயேசு நமது பாவங்களுக்காக மரணம் எய்து அதன் பின்பு அந்த மரணத்தை வென்றார். நாம் பாவங்களை எதிர்த்து வென்றிட கிறிஸ்து அருள் கொடுக்கிறார். மேலும் தந்தையின் அன்பையும் நமக்கு கொடுக்கிறார். அதன் முலம் நாம் ஒருவரையொருவர் அன்பு செய்து (எந்த தடையாக இருந்தாலும்), மேலும் இயேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவர் , நம்மோடு இருந்து , நம்மை தொடர்ந்து இந்த பரிசுத்த வாழ வழி செய்கிறார்.
நற்செய்தி வாசகமோ கடவுளின் அன்பின் ஆழத்தை காட்டுகிறது. நம் பாவங்களுக்கு  தண்டனை கொடுக்க அல்ல, நம் பாவத்தின் அழிவிலிருந்து நம்மை மீட்க , அவரது மகனையே அனுப்பி வைத்தார். நமது பாவங்கள் தான் நம்மை கண்டிக்கிறது, நித்திய வாழ்வின் மரணத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது. ஆனால் இயேசு இதிலிருந்து நம்மை மீட்டு நித்திய வாழ்விற்கு அழைத்து செல்கிறார். -- ஆனால் அதற்கும் நாம் விரும்பினால் மட்டுமே!
© 2017 by Terry A. Modica


No comments: