Saturday, June 17, 2017

ஜூன் 18, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஜூன் 18, 2017 ஞாயிறு நற்செய்தி மறையுரை
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்த பெருவிழா
Deuteronomy 8:2-3, 14b-16a
Psalm 147:12-15, 19-20
1 Corinthians 10:16-17
John 6:51-58
யோவான்  நற்செய்தி

மானிட மகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.
52நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
53இயேசு அவர்களிடம், 
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

54எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

55எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

56எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

57வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

58விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.
  (Thanks to www.arulvakku.com)
இயேசு திவ்ய நற்கருணையின் மூலம் எவ்வாறு நமது கஷ்டத்தில் உதவி செய்கிறார்
இன்றைய ஞாயிறு நாம் இயேசுவின் திரு உடல் திரு இரத்த பெருவிழாவை கொண்டாடுகிறோம். இது உண்மையாக இயேசுவின் இரத்தமும் உடலும்  என்று நாம் ஏன் நம்புகிறோம்.
முதல் வாசகத்தில் தந்தை கடவுள் எப்பொழுதும் நமக்கு தேவையான உணவையும், நீரையும் , நம் கடினமான காலத்தில் கொடுப்பார் என்று  பார்க்கிறோம். இஸ்ரேயலர்களுக்கு அன்று என்ன செய்தாரோ அதனையே நமக்கு ஏதோ ஒரு வழியில் தந்தை கடவுள் செய்து கொண்டிருக்கிறார். நம் விசுவாசம் எதுவாக இருந்தாலும், நம் சோதனையில் தந்தை கடவுள் நமக்கு எப்பொழுதும் தேவையானதை தந்து கொண்டிருக்கிறார். நமக்கு தேவையானதை - உண்மையான கிறிஸ்துவின் பிரசன்னத்தை திவ்ய நற்கருணை மூலம் கொடுக்கிறார். பரிசுத்த ஆவி நம்முள் இருந்து (ஞானஸ்நானம் , உறுதி பூசுதல் ) நமக்கு தேவையானதை கொடுக்கிறார். மேலும், குருக்கள் (இயேசுவின் பிரசன்னமாக) பாவ சங்கீர்த்தனதில் நம்முள் இயேசுவை கொண்டு வருகிறார்கள்.
நற்செய்தி வாசகமோ திவ்ய நற்கருணை தான் இயேசு பிரசன்னமாக இருந்து நமக்கு உணவாக இருக்கிறது என்று சொல்கிறது. தந்தை கடவுளின் அன்பின் பிரதிபலிப்பாக நற்கருணை இருக்கிறது. ஓ இந்த  தண்ணியில்லாத பாலைவனத்தில் , காட்டு விலங்குகளும் , விஷ பூச்சிகளிடம் இருந்தும் நம்மை காத்து கொள்ள இந்த உணவு நமக்கு எப்படி தேவைபடுகிறது.  இயேசு திவ்ய நற்கருணை முலம் நம் தாகத்தையும் பசியையும் கண்டிப்பாக போக்குகிறார். அவரை நாம் முழுமையாக வாங்கும் பொழுது, அவர் நம்மை முழுமையாக அவருக்குள் கொண்டு வருகிறார், அவர் அருகில் நாம் செல்ல , அவர் நம்மை இழுத்து கொள்கிறார். இந்த ஒற்றுமையில், இணைப்பில், நாம் நம் சோதனைகளை கடந்து வெற்றியை பெறுகிறோம்.
இரண்டாவது வாசகம், திவ்ய நற்கருணை நம்மை இந்த உலகின் கிறிஸ்துவின் உடலோடு இணைக்கிறது , அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி , கிறிஸ்துவின் உடன் இணைப்பை அதிகரிக்கிறது என்று கூறுகிறது. இந்த உலகில் நமக்கு தேவையானவற்றை, திருச்சபையின் சமுகம் மூலமும்  ,இன்னும் பலவற்றின் மூலம்  நமக்கு கிறிஸ்து கொடுக்கிறார். இந்த இணைப்பில் -- எல்லோருக்கும் தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கபெறும் - மேலும் அது எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். மேலும், இயேசு நற்செய்தியில் உறுதி அளிப்பது போல நமக்கு எல்லோருக்கும் நித்திய வாழ்வு கண்டிப்பாக உண்டு. அங்கே எல்லா தேவைகளும் முழுதுமாக கிடைக்கபெறும்.
© 2017 by Terry A. Modica

  

No comments: