Friday, November 9, 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

ஞாயிறு நற்செய்தி , மறையுரை: நவம்பர் 11 2007

லூக்கா நற்செய்தி

அதிகாரம் 20

27 உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, 28 ' போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக் கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். 29 இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். 30 இரண்டாம், 31 மூன்றாம், சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; 32 கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். 33 அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே? ' என்று கேட்டனர். 34 அதற்கு இயேசு அவர்களிடம், ' இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்துகொள்கின்றனர். 35 ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. 36 இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப்போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. 37 இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, ' ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று கூறியிருக்கிறார். 38 அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே ' என்றார்.
thanks to www.arulvakku.com

மறையுரை
உயிர்த்தெழுதலில் உங்களுக்கு நம்பிக்கையுன்டா? இந்த கேள்வியைதான் இன்றைய நற்செய்தியில் யேசு சுற்றி வளைத்து கேட்கிறார். இதனை சதுசேயர்களின் கேள்விக்கு பதிலாக கூறுகிறார்.

கிறிஸ்தவர்களாகிய நாம், ஒரு நாள், நாமும் யேசுவை போல, இன்றைய உலக வாழ்விலிருந்து மறைந்து, உயிர்த்தெழுந்த வாழ்வில் நிலைத்திருப்போம் என்று நம்புகிறோம். யேசுவை பின் செல்லும் எல்லா விசுவாசிகளும் வான தூதர்கள் போல் வாழ்வர். அதனால் தான், கத்தோலிக்க கடைசி திருப்பலியில் (மரணம்), உயிர்த்தெழும் திருப்பலியாக நிறைவேற்றப்படுகிறது. திருப்பலி உடைகளும் வெள்ளை உடைகளாகும்,(கருப்பு அல்ல)

ஆனால் நீ அன்பின் உயிர்த்தெழுதலை நம்புகிறாயா? யேசு திருமணத்தின் மூலம் நடைபெறும் உயிர்த்தெழுதலை விளக்குகிறார். திருமணம் என்பது கடவுளின் அன்பை பிரதிபலிக்கும் சாதனமாகும். திருமணத்தின் மூலம், ஆனும் பெண்ணும், இனைந்து, நீடித்த அன்போடு இருப்பது ஆகும். அந்த அன்பு கடவுளிடமிருந்து வரும் அன்பு ஆகும். திருமணம் கடவுளின் அன்பை காட்டும் சாட்சியாக இருக்கிறது. இதன் மூலம் கடவுளின் நம்பிக்கையையும், பொறுப்பையும் காட்டுகிறது.

யேசு எதனால் திருமணம் உயிர்த்தெழுதலில் இல்லை என்று கூறுகிறார்? , ஏன் இவ்வுலகில் நடைபெற்ற திருமணம், தொடர்ந்து விண்ணுலகிலும் இருப்பதில்லை? மன்னுலகில், அன்பு முழுமையாக கொடுக்கபடுவதுமில்லை, முழுமையாக ஏற்றுகொள்ளப்படுவதுமில்லை. அதனால், அன்பான தொடர்ந்து மடிந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது. ஒவ்வொரு நாளும், கணவனும் மனைவியும், மற்றவர்கள் மேல் பச்சாதாபம் கொண்டு மனம் திரும்பி, மன்னிக்கின்றனர்.

கடவுள் தான் முழுமையான அன்பானவர். நாம் அவரின் உன்மையான சந்ததியாக இருந்துகொன்டு, நமது சகோதர சகோதரிகளை கடவுள் அன்பு செய்வது போல அன்பு செய்கிறோம். இன்று நாம் குறையுள்ள குழந்தகளாக இருக்கிறோம். உத்தரிக்கிற ஸ்தலத்தில், நமது குறைகள் களையபடுகின்றன. அதற்கு பிறகு, மோட்சத்தில், நாம் கடவுளை போல, குறைகளற்றவர்களாக இருப்போம்.
திருமனம் மோட்சத்தில் இருப்பதில்லை ஏனெனில், இது, கடவுளின் அன்பை குறைகளோடு பிரதி பலிக்கிறது. நாம் நமது துனையை, மற்றவர்களை விட அதிகமாக நேசிக்கிரோம். மோட்சத்தில், நமது முன்னால் மனைவி உட்பட அனைவரையும் முழுமையாகவும், ஒரே மாதிரியாகவும் அன்புசெய்வோம். நம்மை குறைவாக அன்பு செய்தவர்கள், நமது துனை அன்பு செய்வதை விட அதிகமாக அன்பு செய்வர்.

திருமனம் என்பது, மோட்சத்தில் ஒவ்வொருவரும் எப்படி அன்பு செய்வார்களோ, அதனை கணவனும் மனைவியும் இவ்வுலகில் காட்டுவதாகும்.
© 2007 by Terry A. Modica
For PERMISSION to copy this reflection, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: