Friday, July 10, 2009

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 12, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15வது ஞாயிறு

Amos 7:12-15
Ps 85:9-14
Eph 1:3-14
Mark 6:7-13

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.8 மேலும், ' பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் ' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.10 மேலும் அவர், ' நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் ' என்று அவர்களுக்குக் கூறினார்;12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;13 பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு விசுவாசத்தை பற்றி நமக்கு போதிக்கிறார். கடவுளின் அன்பின் கருவியாக இவ்வுலகில் நாம் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். அந்த அழைப்பிற்கு நாம் முழு முயற்சி எடுத்து, அதனை நிறைவேற்ற வேண்டுமானால், கடவுளின் நற்செய்தியை அறிவிப்பவராக நாம் இருக்க வேண்டுமானால், நாம் கடவுளை நம்ப வேண்டும், மேலும் அவர் நமக்கு கொடுத்த ஞானத்தையும்,பல ஆற்றல்களையும் நாம் நம்ப வேண்டும்.


மேலும், நமக்கு என்ன தேவையோ அதனை எல்லாம், கடவுள் எப்பொழுதுமே கொடுத்து கொண்டிருக்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும். அவர் கொடுப்பதெல்லாம் நமக்கு போதுமானதாக இல்லாதது போலவே நமக்கு தோன்றுகிறது. ஆனால் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவர் கொடுப்பதெல்லாம், நம்முடைய சுய ஆசைகளுக்காக அதிகம் அவரிடம் எதிர்பார்க்க கூடாது.

இந்த அழைப்பு ஒவ்வொரு திருப்பலியின் முடிவில் மீன்டும் மீன்டும் புதுப்பிக்கபடுகிறது. யேசுவுடன் நமக்கு உள்ள தொடர்பானது, கடவுளின் வார்த்தையாலும், திவ்ய நற்கருணையிலும், கோவில் குழுக்களோடும் சேர்ந்து , மீன்டும் புதுப்பிக்கப்படுகிறோம். அவர் நம்மோடு இருப்பது, நமக்கு அதிக ஆற்றல் தந்து, வெளியே சென்று நம்ம என்ன செய்ய சொல்கிறாரோ, அதனை செய்ய முடியும். குருக்களின் மூலம், யேசு, நம்மை இந்த உலகிற்கு அனுப்புவது, யேசு நம்முடனே இருக்கிறார், நம் மேல் அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு கானத்தகுந்த சாட்சியாகும். திவிய நற்கருணையின் மூலமும், திருப்பலியில் கடைசியில் கொடுக்கப்படும் ஆசிர்வாதத்தின் மூலம், யேசு நமக்கு அதிகாரம் கொடுத்து, கடவுளின் நற்செய்தியை நாம் சந்திக்கும் அனைவரிடமும் அறிவிக்க ஆனையிடுகிறார். அதனால், நாமெல்லாம், மனமாற்றம் செய்பவர்களாக , இந்த உலகத்தில் ஒரு வித்தியாசத்தை கொண்டுவருபவர்களாக இருக்க வேண்டும்.

ஆம் , நாம் எல்லாருமே - திவ்ய நற்கருணை கொண்டாட்டத்தில் பங்கு கொண்டு, முழுமையாக ஒவ்வொரு செபத்தையும், புரிந்து விழிப்புணர்வுடன், அந்த இறையேசுவை வாங்கும் அனைவரும், ஆண்டவரின் அழைப்பிற்கு உள்ளாகிறோம். அதனால், நம்பிக்கையுடன் செல்லுங்கள், யேசு உங்களை கோவிலிலுருந்து வெளியே சென்று பரிசுத்த ஆவியுடன் துனையுடன் அவரது இறையரசை பரப்ப செய்கிறார்.


எனினும், நாம் நமது பைகளை கட்டும்பொழுது, நமது இறைசேவக்காக என்ன எடுத்து செல்ல வேண்டுமோ , அதனை விட அதிகமாக எடுக்கிறோம். இதன் மூலம் கடவுள் நம்பிக்கையை நாம் வெளியே சொல்ல முடிவதில்லை. அதில் தோற்றுவிடுகிறோம்.

ஆக்கப்பூர்வமான மணமாற்றம் செய்ய கூடிய மத போதகராக இருக்க வேண்டுமானால், நாம் கடவுளிடம் நம் சுய ஆசைகளை துறந்கு அதனை ஆண்டவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த சமர்ப்பிப்பு, இனிமேலும், நமது சேவையில் இடர் கொடுக்காமல் இருக்க வேண்டுவோம். அப்போதுதான், அது உண்மையான அர்ப்பணிப்பாகும். இனிமேலும், அதனை நாடாமல் இருக்க வேண்டும். அதுவே உண்மையான சரனடைதல் ஆகும். இன்னும், நாம் அவைகள் மேல் சின்ன ஆசையுடன் இருந்தால், ஒரு கயிறால் கட்டப்பட்டு, நாம் இன்னும் அதன் மேல் இழுக்கப்படுவதற்கு ஒப்பாகும். நம் வாழ்வின் உண்மையான நோக்கத்திலிருந்து வெளியே இருக்கிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: