Friday, July 24, 2009

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 26, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 17வது ஞாயிறு

2 Kings 4:42-44
Ps 145:10-11, 15-18
Eph 4:1-6
John 6:1-15
யோவான் (அருளப்பர்) நற்செய்தி

அதிகாரம் 6
1 இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.2 உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.3 இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.4 யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.5 இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, ' இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்? ' என்று பிலிப்பிடம் கேட்டார்.6 தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.7 பிலிப்பு மறுமொழியாக, ' இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே ' என்றார்.8 அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,9 ' இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்? ' என்றார்.10 இயேசு, ' மக்களை அமரச் செய்யுங்கள் ' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.11 இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.12 அவர்கள் வயிறார உண்டபின், ' ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள் ' என்று தம் சீடரிடம் கூறினார்.13 மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.14 இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், ' உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே ' என்றார்கள்.15 அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

(thanks www.arulvakku.com)

இன்றைய நற்செய்தியில் நடந்தது எவையும், தெய்வீகமானது இல்லை என்று பலர் கூற நானே கேள்விபட்டிருக்கிறேன், அது என்னவெனில், "உண்மையான அற்புதம் என்னவென்றால், யேசு, எல்லாரும் கொண்டு வந்த உணவை, ஒன்றாக உட்காரவைத்து, அவர்களை பகிர்ந்து உண்ண வைத்தார் " என்று கூறுவது உண்டு. அதோடு,"அவர்கள் கொண்டு வந்த உணவு எல்லோருக்கும் பத்தவில்லை என்றும், எல்லோரு அதனை பகிர்ந்து கொள்ளவும், மக்கள் அவரவர்கள் தியாகம் செய்து தங்கள் உணவை மற்றவர்களுக்கு கொடுத்தனர். அதனால் தான், நிறைய உணவு மிஞ்சியது" என்று கூறுபவர்களும் உண்டு.

இது மிக சரியாகத்தான் இருக்குமோ?! கடவுளால் உணவை பல மடங்காக பெருக்க முடியாதது போல.

ரொட்டி துண்டுகளையும், மீன்களையும் பல மடங்காக ஆக்கியதற்காக எல்லோரும் திருப்தி அடைந்துவிடவில்லை, அவர்களுக்கு என்ன தேவையாக இருந்தது என்றால், திவ்ய நற்கருணை விருந்தை முன் கூட்டியே ஒத்திகை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். திருப்பலியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நன்றாக கவனித்து, அதனை நம் இதயத்தில் ஏற்றுகொண்டால், யேசு நமது பசியை போக்குவார், மேலும், நமக்கு தேவையானதைவிட அதிகமாகவே கொடுப்பார். கோவிலுக்கு செல்வதற்கு முன்பே, உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது? அதனை அதிகமாகவே கொடுக்க முயற்சி செய்கிறார்.


யேசு அற்புதமாக , பல மடங்காக கொடுக்கும் அனைத்தையும் நாம் பெற, நாம் அவரை விசுவசிக்க வேண்டும். எதிர்பாராததை எதிர்பார்க்க வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கும் சரியான நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக, நாம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவே அவர் கொடுக்க விரும்புகிறார் என்பது நிச்சயம்.

அந்த மலையில் இருந்த சிலருக்கு, மீனை விட ஸிடீக்கை விரும்பியிருக்கலாம், ஆனால், அவர்கள் பெற்றது என்ன என்றால் அவர்களுடைய இதயத்தை, முழு விசுவாசத்தாலும், பரிசுத்த ஆவியில் அவர்கள் வளர தேவையானவற்றை கொடுக்கும் மெசியாவை பெற்றார்கள். அவர்களுடைய சோதனையில் இன்னும் சக்தியுடன் அதனை ஏற்று கொள்ள ஆற்றல் பெற்றார்கள். மேலும், கிறிஸ்துவை இன்னும் பலருக்கு வெளிப்படுத்த செல்லும்போது, அவர்களின் அன்பை பகிர்ந்து கொள்ளும் அன்பை பெற்றார்கள்.

நமது திவ்ய நற்கருணை சடங்குகளில், சின்ன நன்மையும், திராட்சை இரசத்தையும் விட, நாம் பெறுவதற்கு அதிகமான் பொருட்கள், விசயங்கள், அன்பளிப்புகள் உள்ளது. , யேசுவிடமிருந்து உங்களுக்கு என்ன தேவை? அதிக விசுவாசம்? அதிக நம்பிக்கை? அதிக அன்பு? நீங்கள் திருப்பலிக்கு செல்லும்போது உங்களுக்கு என்ன தேவை என்று யோசித்து செல்லுங்கள், அப்போது, திருப்பலியில் அதனை எதிர்பார்த்து முழுவதுமாக நாம் பங்கு கொள்ளலாம்.
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: