Friday, July 17, 2009

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை

ஜுலை 19, 2009 ஞாயிறு நற்செய்தி , மறையுரை
ஆண்டின் 16வது ஞாயிறு

Jer 23:1-6
Ps 23:1-6
Eph 2:13-18
Mark 6:30-34

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.31 அவர் அவர்களிடம், ' நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் ' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

(thanks to www.arulvakku.com)

இறைசேவையில் உள்ள ஒவ்வொருவரும், அவர்கள் அழைப்பினால், பல நேரங்களில், களைப்படைந்து விடுகின்றனர். எல்லா நேரங்களும், அவர்களின் சேவையை தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. அது குழந்தைகளின் பராமரிப்பாக இருக்கட்டும், வயதானவர்களை பராமரிப்பதாக இருக்கட்டும், நோயுற்ற கணவனோ அல்லது மனைவியை பார்த்து கொள்வதாகட்டும், அல்லது, கிறிஸ்துவை உலகிற்கு வெளிப்படுத்தும் இறைசேவையாக இருக்கட்டும், அல்லது கோவிலில் ஒரு பொருப்பாளராக இருப்பது, அல்லது குருவாக இருப்பது, இப்படி எந்த சேவையில் இருந்தாலும், ஒவ்வொருவரும், அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி கொள்வது , ஓய்வெடுப்பது முக்கியம். விடுமுறை, அல்லது வெளியிடங்களுக்கு செல்வது என்று இருக்க வேன்டும். அது தான் நீங்கள் இழந்த ஆற்றலை, சக்தியை மீன்டும் பெற்று கொடுக்கும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்.
இந்த கட்டளையை நாம் ஒழுங்காக கடைபிடிக்காவிட்டால், நாம் ஒரு தனி மனிதனாக, எல்லோரையும் போல் இல்லாமல் ஆகிவிடுவோம். நமது சுய ஆசைகளுக்காகவும், சரியானபடியும் இல்லாமல் முடிவெடுப்பவர் ஆகிவிடுவோம். முதல் வாசகத்தில் கூறியிருப்பது போல தவறான செயல்களை செய்யும், ஆயனாக இருப்போம். இறைசேவைக்கு அழைக்கப்பட்டவர்களை, தவறான வழியில் வழி நடத்தி சென்று பல பிரிவாக அவர்கள் ப்ரிய காரணமாயிருப்போம்.
தொடர்ந்து சேவை செய்யும்போது, நாம் கிறிஸ்துவை போல இல்லாமால், இருப்பதற்கு காரணம், நாம் நம்மிடம் இல்லாததை கொடுக்க முடிவதில்லை.கடவுளின் அன்பை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த, நிறைய சகதி தேவைபடுகிறது. இறையரசிற்கு உற்சாகமாக சேவை செய்வதற்கு நமக்கு நிறைய ஆற்றல் தேவைபடுகிறது. ஆனால், மீன்டும் , நாம் இழந்த ஆற்றலை திரும்ப பெற, ஓய்வெடுத்து, யேசுவிடம் வேண்டி ஜெபம் செய்தால் தான், மீண்டும் நாம் உற்சாகத்துடனும், ஆற்றலுடனும், இறையரசை வெளிப்படுத்த முடியும்.
நாம் நம் மேல் அக்கறை கொள்ளாமல், நம்மை ஒழுங்காக வைத்து கொள்ளாமல், மற்றவர்கள் மேல் எப்படி அக்கறை கொள்ள முடியும்? யேசு நம்மில் வாழ்கிறார். ஆனால், அவர் நம்மை மாற்ற நாம் அனுமதித்தால் தான், அவரை நாம் மற்றவர்களுக்கு கொடுக்க முடியும்.

ஒவ்வொரு நாளும், நாம் ஆயனில்லா ஆடுகள் போல் உள்ள மனிதர்களை சந்திக்கிறோம்.அவர்கள் யேசுவை தேடுகின்றனார்,அவர்கள் அதனை புரிந்து கொள்ளாமலேயே. அவர்களுக்கு நிபந்தனையற்ற அன்பு தேவைபடுகிறது. யேசுவிடமிருந்து, குணப்படுத்தலையும், அமைதியும் வரவேன்டும் என ஆசைபடுகின்றனர். யேசு அவர்கள் மேல் இரக்கப்படுகிறார் மேலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைக்கின்றார். ஆனால், நாம் யேசுவின் கைகளாகவும், கால்களாகவும் , அவரின் குரலாகவும் இருக்க வேண்டிய நாம், கடினமான வேலைகளால், சோர்வுற்று இருந்தால், பிறகு எப்படி சேவை செய்ய போகிறோம்.?

நமது காயங்கள் கொஞ்சமாக குணப்படுத்தப்பட்டால், மேலும், கிறிஸ்துவின் அமைதியை நாம் பெறாமலும், மற்றவர்களை குனப்படுத்தும், ஆயனாக, அவர்களுக்கு அமைதியை கொடுக்கும் கிறிஸ்துவின் கருவியாக இருக்க முடியும்?

நாம், தனியான இடத்திற்கு சென்று யேசுவின் ப்ரசன்னத்துடன், நாம் ஓய்வெடுத்தால் , அவரின் சக்தியூட்டும் அன்போடு திளைத்திருந்து ஓய்வெடுக்க வேன்டும். நாம் தியானத்திற்கோ, அல்லது விடுமுறைக்கோ சென்று விட்டு வந்து, நமது சேவையை தொடரும்போது, மக்கள் நம்மை இன்னும் சாதாரனமாக பார்க்க வில்லை என்றால், நாம் இன்னும் அதிகம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அர்த்தம். நம்மை மீன்டும் புதுப்பிக்கிம், ஆற்றல் பெறும் நேரத்தை குறைத்து விட்டொம். அதிக வேலை சுமையை பற்றி கவலை படாதீர்கள். யேசு நம்மை அழைக்கிறார், "நீங்கள் கொஞசம் என்னோடு ஓய்வெடுங்கள், என்னை போல மாறுவது வரை என்னோடு இருங்கள்" என்று கூறுகிறார்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: