Friday, July 3, 2009

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜூலை 5, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 14வது ஞாயிறு
Ezek 2:2-5
Ps 123:1-4
2 Cor 12:7-10
Mark 6:1-6


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 6
1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.2 ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், ' இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் ' என்றார்.5 அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.6 அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில் சொல்வது போல, நமக்கு முன்பே தெரிந்தவர்களிடம், நமது விசுவாசத்தை பகிர்ந்து கொண்டால், நாம் இன்னும் அதிக விசுவாசம் கொள்வோம் , ஆனால் , அவர்களிடம் நாம் பகிர்ந்து கொண்ட பிறகு, நமக்கு அது ஒரு திருப்தியற்ற அனுபவம் ஆகவே இருக்கும்.
யேசுவை போல, நாம் நிராகரிக்கபடுகிறோம், தவறாக புரிந்து கொள்ளப்படுகிறோம், நம்பிக்கையின்மையுடன், நாம் ஏன் மாறினோம் என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நம்மை முன்மாதிரியாக எடுத்து கொள்ள அவர்கள் பயப்படுகிறார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக அவர்கள் மாற வேண்டும் என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. நாம் அளவு கடந்த சமய வெறி பற்றோடு இருப்பது போல் அவர்களுக்கு தெரியும். இதனையே அவர்கள் சாக்காக எடுத்து கொண்டு, நமது சாட்சியை ஒதுக்கி வாழ முற்படுகிறார்கள்.


யேசு கிறிஸ்து, சாதாரன வாழ்வை விட்டு, சாதாரன நகரிலிருந்து மாறி, அவர் மக்கள் சேவையை ஆரம்பித்த பொழுது, அவருக்கு கொடுமை செய்ய பலர் தூன்டுவர் என தெரிந்திருந்தும், அனைவரும், அவரை போல வாழ வேண்டும், அவர் பின் செல்ல வேன்டும் என விரும்பினார். இது எப்படி பைத்திய தனமாக இருக்கிறது?

இன்னும் நிலைமையை மோசமாக்க, யேசுவுடைய எல்லா நேரங்களையும் செலவிட்டு, ஒவ்வொருத்தரின் சாதாரண வாழ்வையு, மற்றவர்களோடு சாதாரனமாக மற்றவர்களோடு தொடர்பில் இருப்பதையும் , அவர்களின் சாதாரன குணத்தையும், மாற்ற வேண்டும் என உழைக்கிறார், மேலும் அவர் பின செல்லாதவர்களும், அவரை போல மாறவேன்டாம் என விரும்புகிறவர்கள், அவரவரின் சாதாரன வாழ்வை விட்டு மாற வேண்டும் என விரும்புகிறார்.

மனிதர்கள் சவால்களுக்கு இடம் கொடுக்க விரும்புவதில்லை. மேலும், தற்போது எப்படி இருக்கிறார்களோ, அப்படியே இருக்க விரும்புகிறார்கள், அவர்களுக்கு தெரிந்த இடம், பழகிய முகங்கள், தெரிந்த வாழ்வு, அப்படியே இருக்க விரும்புகிறார்கள். எனினும், இந்த காரனங்களுக்காக் நாம் அமைதியாக இருந்து விட கூடாது. கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிறிகு அறிவிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மணமாற்றம், மிக முக்கியமானது என்பதனை அனைவருக்கும் தெரியப்படுத்த வேன்டும். அப்படிய் செய்ய வில்லை என்றால், நாம் கிறிஸ்துவிற்கு எதிராக பாவம் செய்கிறோம். மேலும், யேசுவை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு எதிராகவும் பாவம் செய்கிறோம்.
இந்த இறைசேவையை நாம், நம்முடைய சொந்த மாற்றத்தையும், நம் ஆன்ம வழிகாட்டுதலையும் கொண்டு அவர்களுக்கு சொல்லி நாம் தொடரவேண்டும். இந்த சேவை அவர்கள் விரும்பி கேட்டு, நாம் செய்வது உகந்தது. அவர்களை கட்டாயப்படுத்தி மாற்ற கூடாது.

நீங்கள் நிராகரிக்கபட்டால், , யேசு உங்களை புரிந்து கொள்வார், உங்கள் துயர எண்ணங்கள் அவருக்கு புரியும். இந்த நிராகரிப்பு எல்லாம், கடவுள் உங்களால் சந்தோசமடைந்துள்ளார் என்று நினைத்தாலே நம் துயரமெல்லாம் பரந்து போகும்.


© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: