Friday, September 4, 2009

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

செப் 6, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 23ம் ஞாயிறு

Is 35:4-7a
Ps 146:7-10 (with 1b)
James 2:1-5
Mark 7:31-37

மாற்கு நற்செய்தி

அதிகாரம் 7
31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார்.32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி ' எப்பத்தா ' அதாவது ' திறக்கப்படு ' என்றார்.35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்.36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ' இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே! ' என்று பேசிக்கொண்டார்கள்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், கடவுள் உடல் ஊணமுற்றவர்கள் மேல் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதை நமக்கு கான்பிக்கிறது.
நாம் எல்லோருமே ஒரு வகையில், ஊணமுற்றவர்களாக தான் இருக்கிறோம், நமக்கு கண்ணிருந்தும், குருடர்களாக இருக்கிறோம், புனித ஜேம்ஸ் வாசகத்தில் நாம் எவ்வளவு குருடாக இருக்க முடியும் என்பதை நமக்கு எடுத்து காட்டுகிறது

ஒரு மனிதன் எந்த மாதிரியான உடை உடுத்துகிறான் என்பதை தான் நாம் பார்க்கிறோம், எடுத்து காட்டாக, அவர்கள் இதயத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், அவர்களுடைய ஆற்றல்கள், திறமைகள் அனைத்தும், கடவுளின் பிரதிபலிப்பு ஆகும் என்பதை நம்மால் எப்படி அறிய முடியும்?. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம். ஒருவருடைய கல்வியறிவு, சொத்து, சமூகத்தில் அவரின் மதிப்பு ஆகியவற்றால், நாம் கவர்ந்திழுக்கபடுகிறோம், அவர்களின் புனிதத் தன்மையை நாம் பார்ப்பதில்லை, மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைக்கும் அவர்களது ஆர்வம், மற்றும், அவர்கள் உள்ளத்டதில் என்ன உள்ளது என்பதை நாம் பார்ப்பதில்லை. நாம் தீர்ப்பளிப்பவராக இருக்கிறோம்.

கடவுளுக்கு மட்டும் தான் ஒவ்வொருவரின் புனித தன்மை மற்றும் அவர்களிடத்தில் உள்ள நல்ல விசயங்கள் தெரியும். ஆனால், நாமும் கடவுள் போல, அவருக்கு சரிசமமாக, மற்றவர்களை நாம் அனுமானிக்கிறோம். கடவுளுக்கு மட்டும்தான் ஒவ்வொருவரின், மனதுக்குள்ளும், வார்த்தைகளிலும், உள்ள நோக்கங்களும் தெரியும். இருந்தாலும், நாம் ஒவ்வொருவரையும் , மற்றவர்கள் சொல்வதை வைத்து , அவர்களை மதிப்பிடுகிறோம்.

தீர்ப்பளிப்பது, நம்மை எவ்வளவு குருடாக இருக்கிறோம் என்பதை தான் காட்டுகிறது.
யேசு நம்மையெல்லாம், கடவுளை நோக்கி, "எப்பத்தா!, உனது கண்களும், காதுகளும், மேலும் மன எண்ணங்களும் திறந்து உண்மை நமக்கு கிடைக்கட்டும்" என்று வேண்டவேண்டும் என ஆசைபடுகிறார். இதன் மூலம் நாம் குணமடையலாம், நமக்கு தெரிந்தவைகளிடமும், கேட்ட விசயங்களிலும், ,கொஞ்சம் மெதுவாக செயல்பட வேண்டும். நாம் பார்ப்பதிலும், கேட்பவற்றையும், நம்ப கூடாது. மெதுவாக, நிறைய நேரம் எடுத்து கொண்டு, ஞானத்திற்காகவும், உள் குணங்களை அறிவதற்கும், தீர்ப்பளிப்பதற்கும், கடவுளிடம் வேண்டி , அதன் பிறகு தான் நாம் அடுத்த முயற்சிக்கு செல்லவேண்டும்.

யேசு நமக்கு பரிசுத்த ஆவியை கொடுத்தற்கு, இதுவும் ஒரு காரணமாகும். நாம் கடவுளின் ஆவியை ஒவ்வொரு விசயத்திற்கும், முடிவெடுக்க , அனுமானிக்க அனுமதித்தால், நாமும் கடவுளை போல் செயல்படுவோம். கொஞ்சம் கொஞ்சம் விசயங்களை வைத்து கொண்டு, நாம் எந்த ஒரு முடிவுக்கும் வந்து விட கூடாது. விசுவாசத்துடனும், இரக்கத்துடனும், நாம் செயல்படவேண்டும்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: