Saturday, October 10, 2009

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை

11 அக்டோபர் 2009 ஞாயிறு நற்செய்தி மறையுரை
ஆண்டின் 28வது ஞாயிறு

Wis 7:7-11
Ps 90:12-17
Heb 4:12-13
Mark 10:17-30


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20 அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும் ' என்று அவரிடம் கூறினார்.22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ' செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ' என்றார்.24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ' பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ' என்றார்.26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், \' பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்? \' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, \' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் \' என்றார். 28 அப்போது பேதுரு அவரிடம், \'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே\' என்று சொன்னார். 29 அதற்கு இயேசு, ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.

(thanks to www.arulvakku.com)


இன்றைய நற்செய்தியில், யேசு அந்த பணக்கார வாலிபனை கேட்கிறார். "' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே" என்று அவன் பதில் கூறுகிறார். அதில் இரண்டு விதமான செய்தி உள்ளது.

முதலாவதாக, அந்த இளம் வாலிபன், உண்மையாக யேசு நல்லவர் மற்றும் நல்ல குரு என்று நம்புவனாக இருந்தால் (யேசுவை, அவரை புகழ்ந்து அவரோடு சேர்ந்து இருக்க நினைத்திருந்தால்) , மேலும் அவருடைய அற்புத காரியங்கள் மற்றும், பாவமில்லா அவரின் வாழ்வை நம்புவனாக இருந்தால், இவையெல்லாம் யேசு கடவுள் தான் என்று அவன் சொல்வது சரியாக இருக்கும். இரண்டாவது, கிறிஸ்துவின் கேள்வி, அந்த இளைஞனை, இன்னும் தாழ்மையுள்ளவனாக மாற்ற உதவியது. யேசு சொன்னதை, அவன் உண்மையாக நம்பினால், கடவுள் நல்லவர், அவனையும் சேர்த்து, மற்றவர்கள் யாரும் கடவுளை விட நல்லவர்கள் யாரும் இல்லை என்று அறிந்தவனாக இருந்தால், அவருடைய கட்டளைகள் மிக சரியாக கடைபிடிப்பான். இது மாதிரியான ஒரு புரிதல் அவனுக்கு இருத்திருந்தால், அவனுடைய இதயத்தை திறந்து, அவன் யேசுவை நோக்கி திரும்பியிருக்க வேண்டும்.


உங்களுடைய இதயத்தை, இந்த உண்மை எப்படி பாதிக்கிறது? யேசு இவ்வாறு சொல்கிறார், "கடவுளை போல் பரிசுத்தமாக இருப்பதற்கு, இந்த பூமியில் உள்ள உங்கள் செல்வங்கள், நிலபுலங்கள், அபிலாசைகள் இவை அனைத்தையும் விட்டு விட்டு, கடவுளின் இறையரசின் விசயங்களோடு ஒன்றினால் தான் முடியும்"

கடவுள் நம்மை அனாதையாகவோ அல்லது ஏழையாகவோ ஆக சொல்லவில்லை. எல்லாவற்றையும் "விட்டுவிட" வேண்டும் என்பதற்கு அர்த்தம், எல்லாவற்றையும் கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோமா என்பதாகும். நாம் நம்முடைய வருமானங்களையும், சொத்தையும் வைத்து கொள்வது என்பது நமக்கு நல்லதுதான், அதுவும் கடவுள் கொடுத்தது தான். (எடுத்து காட்டாக, கடவுள் நமக்கு கொடுத்த திறமைகளால், அதன் மூலம் கிடைத்த வருவாய் மூலம், வாங்க்கும் சொத்துகள்), மேலும், அதனை வைத்து, நாம் சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால், உண்மையான சந்தோசம், கடவுளின் தோழனாக, அவரின் மகனாக, மகளாக இருந்து கடவுளின் செல்வங்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் கருவியாக இருந்தால் தான் நமக்கு சந்தோசம்.

கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், செல்வங்களை மற்றவர்களோடு பகிரிந்து கொள்வது, நமக்கு மிக பெரிய சந்தோசமான விசயம் தான். அப்படி செய்தால் தான், நாம் நம் செல்வங்களை ஆள்பவனாக இருப்போம், இல்லையென்றால், அந்த செல்வங்கள் நம்மை ஆள ஆரம்பித்து விடும்.

நம்மால் மட்டுமே, நாம் சேர்ந்து இருக்கும், நம்மோடு ஒட்டிகொண்டிருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வரமுடியாது. இது மிகவும் கடினமாகும், நம்மோடு இருக்கும் செல்வங்களை விட்டு வெளியே வர, அதனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் கஷ்டமாகும். அதிலும் எல்லாவற்றையும் , மற்றவர்களின் நலங்களுக்காக கொடுப்பது என்பது அறவே கஷ்டமாகும். ஆனால் இப்படி வாழ்வது தான், முழுமையான வாழ்வாகும்.! இப்படி வாழத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பூமியின் செல்வங்களோடு நாம் சேர்ந்தே இருப்பது, பாவமாகும், அது நம்மை கடவுளிமிருந்து அதிக தூரத்திற்கு இட்டு செல்லும், மேலும் பலரை புன்படவைக்கும்.

நல்ல செய்தி என்ன என்றால், யேசு நம் பாவங்களை ஏற்று, சிலுவையில் மரணமடைந்து வெற்றி பெற்றார், அதன் மூலம் நமக்கு பரிசுத்த ஆவியை பகிர்ந்து கொண்டார். மோட்சத்திற்கு தேவையில்லாத, எந்த ஒரு பொருளோடும், நாம் சேராமல், நமது இந்த பூமி வாழ்வு இருக்க வேண்டும். இப்படி செய்தால், நாம் மோட்சத்தின் செல்வங்களை பெறுவோம்.
(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: