Friday, October 23, 2009

அக்டோபர் 25, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 25, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 30வது ஞாயிறு


மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.47 நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, ' இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று கத்தத் தொடங்கினார்.48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், ' தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் ' என்று இன்னும் உரக்கக் கத்தினார்.49 இயேசு நின்று, ' அவரைக் கூப்பிடுங்கள் ' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, ' துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார் ' என்றார்கள்.50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.51 இயேசு அவரைப் பார்த்து, ' உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், ' ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும் ' என்றார்.52 இயேசு அவரிடம், ' நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று ' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

(thanks to www.arulvakku.com)


யேசு நமது வாழ்வை தொட்டவுடன்- நமது ஜெபங்களுக்கு செவி சாய்த்தவுடன், நமது வாழ்வை மாற்றி , அதன் உள்ள அர்த்தத்தை, நமக்கு விளக்கியவுடன், நமது வாழ்வில் சில வேறுபாடுகளை காட்டியவுடன்- பிறகு நாம் என்ன செய்கிறோம்? நமது தெய்வ அருளாள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலிருந்து கிடைக்கும் எல்லா பலன் களையும் நாம் பெறுகிறோமா?

கடவுள் நம்மை எந்த வழியிலும் செல்ல வற்புறுத்த்தவில்லை. நாம் அவரோடு பேரம் பேசி, "நீர் என்னை குணமாக்கினால், நாம் தினமும் திருப்பலிக்கு செல்வேன்" என்று கூறினாலும், யேசு பர்டிமோஸிடம் சொன்னது போல், இன்றைய நற்செய்தியில் குணமாக்கியவுடன் சொன்னது போல், "உன் வழியில் செல், உனது விசுவாசம் உன்னை குணமாக்கியது" என்று நம்மிடம் கூறுகிறார். நாம் எங்கே போவது?
சில நேரங்களில், யேசுவின் போதனை, அல்லது அவரது கட்டளை, நிறைய பொருளை கொண்டிருக்கும். அவர் சில நேரங்களில், யாரையாவது குணமாக்கும் பொழுது, (பாவத்திலிருந்து) , "போ, இனிமேல் பாவம் செய்யாதே" என்று கூறுகிறார். ஆனால், எங்கே போவது?

நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும், முயற்சியும் மிகவும் முக்கியமானது. அடுத்த அடி எங்கே வைக்கிறோம், எப்படி குணமாகியபின் நாம் அடுத்த செயல் செய்கிறோம் என்பதை பொருத்து, நமக்கு கிடைத்த அருள் பலமடங்காகுமா அல்லது அத்தோடு நின்று விடுமா என்பதாகும். அதனை நம்மால் ஆருடம் கூறமுடியாது. இதனால் நடைபெறபோகும் விளைவுகளை யேசு ஒன்றும் சொல்வதில்லை. ஆனால், இதற்கடுத்து நடைபெறபோகும் அனைத்தும் நம் கையில் உள்ளது.

யேசு பர்டிமேயுவை பார்த்து "உன் வழியில் செல்" என்று கூறினார். பர்த்திமேயு இந்த சுதந்திரத்தை வைத்து கொண்டு என்ன செய்தார்? அவர் "யேசுவின் வழியில் பின் சென்றார்". எது நல்ல வழியோ, அவ்வழியை அவர் தெரிந்து கொண்டார். அவரது எதிர்பாராத விதத்தில் மாறியது. அவர் குருடராக இருந்ததால் மட்டுமில்லை, இப்போது அவருக்கு கண் தெரியும், ஏனெனில், அவர் யேசுவிடமிருந்து கற்றுகொள்ள விரும்பினார், மேலும் யேசுவின் பின் செல்பவராக இருக்க விரும்பினார்.


கிறிஸ்துவின் மூலம், நாம் பயன் அடைந்த பின், அவர் அருள் பெற்ற பின், எத்தனை முறை பழைய தவறான வழியில் செல்கிறோம்? யேசுவை பின் தொடர்ந்தால், புது இறைசேவையில் ஈடுபட்டால், நமது வேலையை மாற்றினால், அல்லது நண்பர்களை மாற்றினால், பழைய வாழ்வையே நாம் மீண்டும் ஈடுபட்டால், யேசுவை பின் தொடர்வதற்கு அர்த்தமில்லை. ஆனால் யேசுவை பின் தொடர்வது என்பது, மிகப்பெரிய பந்தயமாகும். நமது விசுவாசத்தில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

யேசுவை பின் செல்வது, அவரிடம் நாம் கற்றுகொள்வது தான் நமது முழு முதல் வேலையாக இருக்க வேண்டும். கிறிஸ்துவோடும் நாம் இணையும் ஒவ்வொரு தருனமும் நம்மை மாற்ற வேண்டும்- திருப்பலியில் கிறிஸ்துவோடு நாம் மீண்டும் மீண்டும் இனைகிறோம்.

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: