Friday, October 2, 2009

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

அக்டோபர் 4, 2009 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 27ம் ஞாயிறு

Gen 2:18-24
Ps 128:1-6
Heb 2:9-11
Mark 10:2-16
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 அவர் அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், ' உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.11 இயேசு அவர்களை நோக்கி, ' தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள் ' என்றார்.13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர்.14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ' சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.

(thanks to www.arulvakku.com)


யாராவது உங்களை விரும்பாமலும், அன்பு காட்டாமலும் உள்ளவரை, நீங்கள் அன்பு காட்டியதுண்டா? கடவுளின் அதீத அன்பை நீங்கள் அனுபவித்து, அதன் மூலம், நீங்கள் மற்றவர்களிடம் அந்த அன்பை கொடுத்ததுண்டா? அவர்கள் கரடுமுரடான ஆளாக இருந்தாலும், கடவுளின் அன்பை அவர்களுக்கு அளித்ததுண்டா?

திருமணம் ஆனவர்கள் அனைவரும்,அவரவர் துணைவரை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு அன்பு செய்ய வேண்டும். இப்படி அன்பு செய்வது, இருவருக்கும் பொருந்தும் என நாம் நினைக்கிறோம். நாம் எந்தளவிற்கு ஆர்வத்தோடு அன்பு செய்கிறோமோ அதே ஆர்வத்தோடு, நமது துணைவரும் நம்மை அன்பு செய்வார்கள்.

இருந்தாலும், அதிக திருமணங்களில் ப்ரச்சினைகளை நாம் பார்க்கிறோம், அந்த ப்ரச்சினைகள் களையப்பட , இறைவனின் அன்பும், நமது வாழ்வில் அவரின் பங்களிப்பும் இறுதி வரை தேவைப்படுகிறது. அதனால் தான் நமக்கு திருமண அருட்சாதனம் தேவைப்படுகிறது. சாதாரண அரசாங்க திருமண சடங்குகளை விட, கோவிலில் நாம் திருமணம் செய்கிறோம். தெய்வீக அருள் இருந்தால் தான், நம் திருமணம் நீண்ட காலம் நீடித்து இருக்க கடவுள் விரும்புவது போல், நாம் தொடர்ந்து ஒருமைபாட்டுடன் இருக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில், மோசேயின் சட்டத்தில், விவாகரத்து அனுமதிக்கப்பட்டது, ஏனெனில், மக்கள் கடின மனதுடையவர்களாக இருந்தார்கள், அதனால் தான் விவாகரத்து அனுமதிக்கப்பட்டது என்று யேசு விளக்குகிறார். இது விவாகரத்திற்கு அனுமதி வழங்குவது அல்ல. யேசு நம்மையெல்லாம் அவர் இதயத்தை போல நாம் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.


மோசேயின் காலத்தில், திருமணங்கள் பிரச்சினையாகிறபொழுது, அல்லது திருப்தியற்ற நிலையில் உள்ளபோது, அதிக கணவர்கள், அவர்கள் மனைவியை விட்டு விலகி ஒதுக்கி வைத்திருந்தனர். திருமணம் - ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற நியதி இருந்தாலும், விவாகரத்து ஆன ஒரு பெண், மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் , அதற்கான அனுமதி சட்டத்தில் உள்ளது. அந்த சட்டம் அவர்களை காத்து கொள்வதற்கு இப்படி அனுமதி அளித்தது. ஆனால் அதனால், விவாகரத்து என்பதை ஒருபோதும் ஒப்புகொள்ள முடியாது.

இறுதிவரை ஒன்றாக இருப்பது என்பது தெய்வத்தின் அருள், அவரின் அன்பளிப்பு, இது தான் கடவுளோடு நமக்குள்ள தொடர்பிற்கு, நம்மிடம் உள்ள ஆதாரமான விசயமாக உள்ளது. நாம் இதனை நம்பவில்லையென்றால், கடவுள் நம் மேல் எப்பொழுது அன்பு கொண்டிருக்கிறார் என்று நாம் எப்படி நம்ப முடியும்? - நாம் அவரின் அன்பிற்கு தகுதியற்றவர்களாக இருந்தாலும்? மேலும், நம்மை பார்க்கிறவர்கள் என்ன நம்பிக்கையில் இருப்பார்கள்.


நினைவில் வைத்து கொள்ளுங்கள்: சில நேரங்களில், உங்கள் காதலரோ , காதலியோ கிறிஸ்துவின் சிலுவைக்கு சென்று அன்பிற்காக ஜெபிக்கலாம். திருமண அருட்சாதனமே, கிறிஸ்துவின் கருணையுள்ள அன்பின் வெளிப்பாடுதான்.

கடவுள் நம்மை, அவரோடு எப்பொழுது இணைந்தே இருக்க வேண்டும் என நம்மை கட்டாயபடுத்தவில்லை. நாம் அவரை விட்டு ஒதுங்கி சென்றாலும், அவர் நம்மை அன்பு செய்து கொண்டுதான் இருக்கிறார். அதே போல், அன்பு கிடைக்காத மனைவியோ அல்லது கணவரோ தொடர்ந்து அவர் துணை மேல் அன்பு கொண்டு தான் இருக்கிறார். வெகு தூரத்தில் இருந்தால் கூட. அன்புடன் தான் இருக்கிறார். இந்த குணம் (அன்புடன் இருப்பது) எல்லா நிலையில் உள்ளவர்க்கும் பொருந்தும். (நண்பர்கள், குருவானவர்கள், பொது நிலையினர், தந்தையர்கள்) .


(thanks to www.azhagi.com)

© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: