Friday, October 16, 2009

18 அக்டோபர் 2009 , ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 29ம் ஞாயிறு
Is 53:10-11
Ps 33:4-5, 18-20, 22
Heb 4:14-16
Mark 10:35-45
மாற்கு நற்செய்தி

அதிகாரம் 10
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ' போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ' என்றார்கள்.36 அவர் அவர்களிடம், ' நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ' என்று கேட்டார்.37 அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ' என்று வேண்டினர்.38 இயேசுவோ அவர்களிடம், ' நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா? ' என்று கேட்டார்.39 அவர்கள் அவரிடம், ' இயலும் ' என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ' நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ' என்று கூறினார்.41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ' பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்.


(thanks to www.arulvakku.com)

இறையரசில் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். என்று யேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார். இறையரசின் நண்மைக்காக, நாம் மற்றவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்.

நம்முடைய சுய விருப்பங்கள், நம் கனவுகள், நமது தேவைகள் எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. கடவுளின் தொண்டனாக இருப்பது ஒன்றும் அவரின் அடிமை என்று அர்த்தமில்லை. இது ஒரு மிகப்பெரும் மரியாதை மற்றும் ஆசிர்வாதம் ஆகும். ஏனெனில், கிறிஸ்து செய்த மீட்பின் பணியாளராக நாம் யேசுவோடு சேருகிறோம்.


கிறிஸ்துவை போல நாமும் கடவுளின் பணியாளராக இருப்பதினால், கடவுள் எப்படி கிறிஸ்துவை நடத்தினாரோ, அதே போல நம்மையும் நடத்துகிறார். நமது கடவுள் நம்மை மரியாதை குறைவாக நடத்த மாட்டார், நமக்காக அதிகம் வேலையும் அல்லது அதிகமாக நமக்கு எதையும் தரப்போவதுமில்லை.

இதற்கு மாற்றாக, நாம் இந்த உலக வாழ்வில், இங்கு உள்ள சொத்துகள், செல்வங்கள் மேல் அதிகம் ஆசை கொண்டு, அதற்கு அடிமையாக இருப்பது ஆகும். இந்த உலகத்தில் அடிமையாக இருப்பது, நம்மை சின்னவனாக காமிக்க போவதில்லை, ஆனால், கடவுள் எப்படி நம்மை அதிக மதிப்புடன் படைத்தாரோ, அதிலிருந்து நாம் குறைந்து விடுகிறோம்.


கிறிஸ்து நமக்கு கொடுக்கும் அதிகாரம், கிறிஸ்துவிற்கு உள்ளது போலவே நமக்கும் கொடுத்திருக்கிறார்: இறையரசின் எல்லா பலன் அனைத்தையும் நாமும் அனுபவிக்கலாம், பரிசுத்த வாழ்வை நமது விருப்பத்துடன் வாழலாம், அதனால் கடவுளின் பார்வையில் மிக பெரியவர்களாக, அவரின் அன்பானவராக இருப்போம்.

இந்த சுதந்திரத்தில், மிக பெரிய சந்தோசம் உள்ளது. எனினும், கிறிஸ்துவின் வழி ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. சில நேரங்களில் நம்மை சிலுவைக்கு அழைத்து செல்லும், ஆனால் இந்த துயரங்கள் நமது பரிசுத்த வாழ்வை இன்னும் அதிகரிக்கும், மேலும் மோட்சத்தில் இன்னும் பெரியவனாக ஆவோம். நமது தியாகங்கள் , மற்றவர்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என்று அறிந்து, அந்த தியாகத்தினால் நமது பரிசுத்த வாழ்வு வளர்கிறது என்றும் நாம் அறிந்தால், அந்த துயரங்களை நாம் தாங்கி கொள்ள இயலும். அது தான் நமக்கு ஆசிர்வாதம் ஆகும்.

சிலருடைய ஜெபங்கள், வேண்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போனவர்களை உங்களுக்கு தெரியுமா? கடவுள் நம் மேல் அக்கறை கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை. அவரால் நமக்கு உதவ முடியாது என்று அர்த்தமில்லை. நம்மை அவரின் பணியாளராக கொண்டு, அவர்களுக்கு உதவி செய்கிறார். யேசு நம் மூலம், பலருக்கு உதவுகிறார்.

நம் முதல் இலக்கு கடவுளோடு உள்ள உறவாகும், அதன் மூலம், அளப்பதற்கரிய பல அன்பளிப்புகளை, நாம் வாங்கி மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்ய வேண்டும். நம்மிடம் இல்லாததை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது. யேசு நமக்கு பணியாளராய் இல்லையென்றால், நாம் கிறிஸ்துவின் ப்ரசன்னமாய் இருந்து , மற்றவர்களுக்கு நாம் உதவ முடியாது.


(thanks to www.azhagi.com)
© 2009 by Terry A. Modica
For PERMISSION to copy any of my reflections, go to:
http://gogoodnews.net/DailyReflections/copyrights-DR.htm

No comments: